search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dalit man"

    ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவமாடிய பானி புயலுக்கு வீட்டை பறிகொடுத்த தலித் தொழிலாளி தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கழிப்பறைக்குள் குடும்பம் நடத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்த 3-ம் தேதி துவம்சம் செய்த பானி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான கேன்டிரப்பாரா மாவட்டத்தில் புயலின் தாக்கத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, கரைந்து சாய்ந்து, தரைமட்டமாகின.

    இப்படி வீடு, வாசல்களை இழந்து நிற்கதியாக நிற்பவர்களில் ரகுதெய்ப்பூர் கிராமத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான கிரோட் ஜேனா(58) என்பவரும் ஒருவர். வசித்துவந்த வீடு மண்மேடாகிப்போன நிலையில் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கட்டித்தரப்பட்ட கழிப்பறையில் சுமார் 15 நாட்களாக இவர் வாழ்ந்து வருகிறார்.

    6 அடி அகலம் 7 அடி நீளம் கொண்ட இந்த கழிப்பறையை தனது வசிப்பிடமாக மாற்றி தனது மனைவி மற்றும் பருவமடைந்த இருமகள்களுடன் குடும்பம் நடத்திவரும் இவர் கழிப்பிடமே வசிப்பிடமாக மாறிப்போனதால் அருகாமையில் உள்ள திறந்தவெளிகளை கழிப்படத் தேவைக்காக நாங்கள் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.

    ’எனக்கு வேறு வசதி இல்லாததால் அரசு தரும் நிவாரணத்தொகையை வைத்துதான் வேறு வீடு கட்ட வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் மற்றும் முதல் மந்திரி பிஜு பட்நாயக் பெயரிலான வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கல்வீடு கட்டுவதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது.

    அப்படி இந்த திட்டங்களின் மூலம் எனக்கு நிலையான வீடு அமைந்திருக்குமானால் என் வீட்டை இழந்து இப்படி கழிப்பறைக்குள் சமைத்து சாப்பிடும் துர்பாக்கியம் நேர்ந்திருக்காது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு வாழ வேண்டி இருக்குமோ?’ என்று வேதனையுடன் கூறுகிறார், கிரோட் ஜேனா.

    கிரோட் ஜேனாவின் நிலைமை பற்றி தெரியவந்ததும் அவருக்கு ஏதாவது ஒரு திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர தேவையான ஏற்பாடுகள் விரைவாக செய்யப்பட்டு வருவதாக கேன்டிரப்பாரா மாவட்ட கிராமப்புற மேம்பாட்டுத்துறை திட்ட இயக்குனர் திலிப் குமார் பாரிடா தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் 22 வயது தலித் வாலிபரை கொடூரமாக தாக்கி கொலை செய்த கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    இந்தியாவில் கும்பல் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. மக்கள் சட்டத்தை கையில் எடுத்து தாங்களே தண்டனை அளிப்பதாக எண்ணி, பல அப்பாவிகளின் உயிரை பறிக்கின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க தலித் வாலிபர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Rajasthan
    குஜராத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
    ராஜ்கோட்:

    குஜராத்தின் ராஜ்கோட் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் முகேஷ் வனியா என்ற தலித் வாலிபர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தார். அங்குள்ள ரடாடியா கம்பெனி அருகே அவர்கள் இந்த பணியை செய்து கொண்டிருந்த போது, அந்த கம்பெனியின் உரிமையாளர் ஜெய்சுக் ரடாடியா மற்றும் 4 பேர் சேர்ந்து முகேஷ் வனியாவை பிடித்தனர்.

    பின்னர் அவர்கள், கணவன்-மனைவி இருவரும் திருட வந்ததாக நினைத்து முகேஷை கட்டி வைத்து கம்பால் சரமாரியாக அடித்தனர். இந்த காட்சிகளை அவர்கள் தங்கள் செல்போனில் பதிவும் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த முகேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெயாபென் ராஜ்கோட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    திருடன் என நினைத்து தலித் வாலிபரை அடித்துக்கொன்ற சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×