search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puri"

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
    • 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

    ஜெகநாத ரதயாத்திரை ஒடிசா நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும். இதில் ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது.

    மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலநாத சரஸ்வதி தனது சீடர்களுடன் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களை தரிசனம் செய்தனர்.

    இந்த சடங்கு முடிந்ததும், மாலை 5.20 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

    அதன்பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். முதலில் பாலபத்திரர் தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுபத்ரா தேர், அதன்பின் ஜெகநாதர் தேர் இழுக்கப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    9 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ.

    தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

    திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவுபெறும்.

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்

    தேவையான பொருட்கள்:

    பூரி மாவிற்கு...

    கோதுமை மாவு - 1 கப்

    ரவை - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    உள்ளே வைப்பதற்கு...

    துருவிய சீஸ் - 1 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
    • இந்த பூரி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 1/2 கப்

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

    எண்ணெய்

    வாழைப்பழம் - 1

    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சர்க்கரை - 2 தேக்கரண்டி

    தயிர் - 1 மேசைக்கரண்டி

    செய்முறை

    மிக்சியில் வாழைப்பழம, ஏலக்காய் தூள், சர்க்கரை, தயிர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் சீரகம், சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்ததே போதுமானது.

    மாவை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பின்னர் மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பழ பூரி ரெடி.

    ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார். #CycloneFani
    புவனேஷ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மாநிலம் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பானி புயலால் பாதிப்பு அடைந்த ஒடிசா மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிடி அளித்து வருகின்றன.



    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

    இன்று ஒடிசாவின் புரி நகருக்கு வந்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான். புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். #CycloneFani
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து அனுப்ப காய்கறிகள் சேர்த்து மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பச்சை பட்டாணி - கலந்து பொடியாக நறுக்கியது ஒரு கப்.
    பெரிய வெங்காயம் - இரண்டு
    கோதுமை மாவு - கால் கிலோ
    புளிப்பு இல்லாத தயிர் - தேவையான அளவு
    பச்சை மிளகாய் - இரண்டு.
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்.
    சீரகம் - அரை டீஸ்பூன்.
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்.
    மஞ்சள்தூள் - தேவையான அளவு.
    எலுமிச்சை சாறு - சிறிது.
    எண்ணெய் - பொரிக்க
    நெய் - இரண்டு ஸ்பூன்.



    செய்முறை :

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கால் கிலோ கோதுமை மாவுடன் மூன்று ஸ்பூன் நெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து புளிப்பு இல்லாத தயிர் ஊற்றி தண்ணீர் ஊற்றாமல் தயிரிலேயே சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வதங்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து தேவையான உப்பு போட்டு காய்கறி கலவை ஓரளவு கெட்டியாகி வந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

    பிறகு பிசைந்த மாவை சப்பாத்திகளாய் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சப்பாத்தியின் மேல் இரண்டு அங்குல இடைவெளி விட்டு ஒரு ஸ்பூன் மசாலா வைத்து அந்த பூரியின் மேல் இன்னொரு பூரியை வைத்து மூடி ஓரங்களை நன்றாக ஒட்டி சில்வர் டப்பா மூடியால் மசாலா இருக்கும் இரண்டு இடங்களையும் வட்டமாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பூரிகளை பொரித்தெடுக்கவும்.

    வெஜிடபிள் ஸ்டப்ஃடு பூரி ரெடி.

    குறிப்பு: இது குழந்தைகளின் ஸ்கூல் லஞ்சிற்கு மிகவும் அருமையான டிஷ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×