என் மலர்
நீங்கள் தேடியது "Poori"
- இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
- இந்த பூரி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
எண்ணெய்
வாழைப்பழம் - 1
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
மிக்சியில் வாழைப்பழம, ஏலக்காய் தூள், சர்க்கரை, தயிர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் சீரகம், சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்ததே போதுமானது.
மாவை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான வாழைப்பழ பூரி ரெடி.
- குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
ஓமம் - சிறிதளவு,
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
ண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.
இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.
கோதுமை மாவு - 1 கப்
தக்காளி - 4
காய்ந்த மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெந்நீரில் ப.மிளகாய், தக்காளியை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் ஆறியதும் தோலூரித்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய் விழுது, நெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பின்னர் மாவை பூரிகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து ருசிக்கவும்.
பசலைக்கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 1 கப்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
ப.மிளகாய் - 1
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெண், உப்பு - தேவையான அளவு

பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பசலைக்கீரையை கொட்டி வதக்கவும்.
அதனுடன் ப.மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் அரைத்த கீரை விழுது, கரம் மசாலா துள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
மாவு மிருதுமான பதத்திற்கு வந்ததும பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கோதுமை மாவு - ஒரு கப்,
பன்னீர் துருவல் - ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
இனிப்பு சேர்க்காத கோவா - கால் கப்,
பொடித்த சர்க்கரை - கால் கப்,
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்,
வறுத்துப் பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
பன்னீர் துருவலுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, கோவா, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதுவே பூரணம்.
கோதுமை மாவுடன் பால்விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும்.
ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணம் வைத்து மற்றொரு பூரியால் மூடி, ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டவும் (மைதா பேஸ்ட் தொட்டும் ஒட்டலாம்).
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தயாரித்த பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டப்ஃடு இனிப்பு பூரி ரெடி.