என் மலர்
நீங்கள் தேடியது "Ragi Recipes"
- கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளது.
- இந்த தீபாவளிக்கு வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 500 கிராம்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க
செய்முறை :
வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும்.
அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் மாவை அதிசரமாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த அதிசரங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுககவும்.
இப்போது மிருதுவான, சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்.
- குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
ஓமம் - சிறிதளவு,
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
ண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.
இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.
- கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி
ப. மிளகாய் - 3
பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.
* இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.
- கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
மேல் மாவிற்கு...
கேழ்வரகு மாவு - 250 கிராம்,
தண்ணீர் - 1/2 லிட்டர்,
எண்ணெய் - 50 மி.லி.,
உப்பு - 20 கிராம்.
பூரணத்திற்கு...
எள் - 100 கிராம் (பொடிக்கவும்),
கருப்பட்டி - 200 கிராம்,
முழு தேங்காய் - 2 (துருவியது),
நெய் - 10 கிராம், ஏலக்காய் - 25 கிராம் (பொடிக்கவும்).
செய்முறை
மாவிற்கு...
மிதமான சூட்டில் கடாயில் கேழ்வரகு மாவை கொட்டி வாசனை வரும்வரை வறுக்கவும். வறுத்த மாவு ஆறியதும் உப்பு, வெந்நீர், எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பூரணத்திற்கு...
அடுப்பில் கடாயை வைத்து பொடித்த எள், தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள், கருப்பட்டியை சேர்த்து கிளறி இறக்கவும். மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் செய்து வைக்கவும்.
இவ்வாறு செய்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கேழ்வரகு பூரண கொழுக்கட்டை ரெடி.
- வாரம் இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது பற்கள், எலும்புகளுக்கு நல்லது.
- விரைவில் உடல் எடையை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 1 தேக்கரண்டி
கருப்பு எள் - தேக்கரண்டி
திராட்சை - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
சுக்கு தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
* வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)
* எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
* நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
* கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
* சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.
- கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இந்த ரெசிபி.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 200 கிராம்,
கேழ்வரகு - 200 கிராம்,
உளுந்து - 50 கிராம்,
வெந்தயம்-1 டீஸ்பூன்,
கருப்பட்டி - 500 கிராம்,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
உப்பு - சிறிதளவு,
நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும்.
அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
இப்போது சத்தான சுவையான கருப்பட்டி பணியாரம் ரெடி.
- நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது.
- கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான கேழ்வரகு கோதுமை தோசை ரெடி!!
- குதிரைவாலியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
- எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 200 கிராம்
குதிரைவாலி அரிசி - 50 கிராம்
தயிர் - கால் கப்
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்தைய நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.
குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் வரும் போது இறக்கி விடவும்.
பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.
- கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
- கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
எள் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - ¼ தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.
கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.
கேழ்வரகு மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
கேழ்வரகு மாவு - ஒரு கப்,
வெல்லம் - முக்கால் கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
செவ்வாழைப்பழம் - 1

செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் கேழ்வரகு மாவு, வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்

செய்முறை :
உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.






