search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuzhi Paniyaram"

    • ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்

    தண்ணீர் - 1 1/2 கப்

    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கேரட் - 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு - 1 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ்,

    சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை டிபனாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
    • சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்,

    உளுந்து - அரை கப்,

    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் - ஒன்று,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து - வெந்தயத்தை தனியாகவும் 3 மணிநேரம் ஊறவிடவும்.

    நன்றாக ஊறியதும் இரண்டையும் அரைத்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, மாவில் சேர்க்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிவப்பு அரிசி காரப் பணியாரம் ரெடி.

    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
    • அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கருப்பட்டி - 300 கிராம்

    ஏலக்காய் - 2

    எண்ணெய் - சிறிதளவு

     செய்முறை

    கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

    ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.

    அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.

    • முட்டையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று முட்டையில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 5

    வெங்காயம் - 2

    தக்காளி - 2

    கேரட் - 1

    முட்டைகோஸ் -

    பச்சை மிளகாய் - 4

    தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    உப்பு- சுவைக்கேற்ப

    எண்ணெய் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும், இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான முட்டை வெஜிடபிள் பணியாரம் தயார்!

    • தினமும் ஒரு வேளை தினையை உணவாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
    • தினை அரிசி புரதசத்து அதிகம் உள்ளது. கொழுப்பு சத்து அறவே இல்லாதது.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் - அரை மூடி

    நெய் -அப்பம் பொரிக்க

    தினை - 200 கிராம்

    பொடித்த வெல்லம் - ஒரு கப்

    வாழைப்பழம் - 1

    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.

    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.

    குழிப்பணியாரக்கல்லில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான தினை தேங்காய்ப் பால் அப்பம் ரெடி.

    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் இந்த ரெசிபி.

    தேவையான பொருட்கள்:

    இட்லி அரிசி - 200 கிராம்,

    கேழ்வரகு - 200 கிராம்,

    உளுந்து - 50 கிராம்,

    வெந்தயம்-1 டீஸ்பூன்,

    கருப்பட்டி - 500 கிராம்,

    ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,

    உப்பு - சிறிதளவு,

    நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    இட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும்.

    கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும்.

    அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 மணிநேரம் புளிக்க விட வேண்டும்.

    பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து பரிமாற வேண்டும்.

    இப்போது சத்தான சுவையான கருப்பட்டி பணியாரம் ரெடி.

    ×