search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Millet Recipes"

    • கேழ்வரகில் அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
    • கேழ்வரகில் அதிக அளவில் புரதம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு – 50 கிராம்

    பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4

    பேரீச்சை – 5

    காய்ச்சியப் பால் – 200 மி.கி

    ஏலப்பொடி – 1 தேக்கரண்டி

    நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப

    செய்முறை:

    ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும். இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.

    அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.

    இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1 கப்

    இட்லி அரிசி - 1 கப்

    உளுந்து - அரை கப்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    ஜவ்வரிசி - 5 டீஸ்பூன்

    உப்புபு - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும்.

    இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 7 மணிநேரம் புளிக்க விடவும்.

    தட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான தட்டு இட்லி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள காரசட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ராகி முட்டை நூடுல்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ராகி நூடுல்ஸ் - இரண்டு கப்

    முட்டை - 3

    நீளமாக நறுக்கிய குடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) - ஒரு கப்

    வெங்காயம் - 2

    பூண்டு - 2 பல்

    வீட்டில் செய்த இனிப்பு தக்காளி சட்னி - தேவையான அளவு

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து உதிரியாக பொரித்து வைக்கவும்.

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ராகி நூடுல்ஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் எடுத்து, வடிகட்டி உடனே குளிர்ந்த நீரை ஊற்றி அலசி, தண்ணீர் வடியும் வரை தனியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி, சூடானதும் பூண்டை நசுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் இனிப்பு தக்காளி சட்னி சேர்த்து வதக்கவும்.

    பாதி வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, நூடுல்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இறுதியில் பொரித்த முட்டை, மிளகுத்தூள் தூவி நன்றாக கலந்து இறக்கி, லஞ்ச் பாக்ஸில் `பேக்' செய்யவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
    • கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்தது.

    தேவையான பொருட்கள்:

    வரகு அரிசி - 200 கிராம்

    கொள்ளு - 50 கிராம்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    மிளகு - 15

    நெய் - 3 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - ஒன்று

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

    குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.

    அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.

    குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சத்தான சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் ரெடி.

    குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை.
    • எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு அடை செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள் :

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி - தலா கால் கிலோ

    தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு- 4 டீஸ்பூன்,

    முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,

    கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்

    வெங்காயம் - 1,

    இஞ்சி - சிறிய துண்டு,

    காய்ந்த மிளகாய் - 6

    பூண்டு - 10 பல்,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக் கீரையை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.

    இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    அரை மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    4 மணிநேரம் கழித்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அரைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!

    பலன்கள்:

    கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 3 கப்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    தேங்காய் - 1/2 மூடி (துருவிக் கொள்ளவும்)

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் கோழ்வரகு மாவு மற்றும் உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    * இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.

    * அதற்குள் ஒரு இட்லி துணியை நீரில் நனைத்து நீரை முற்றிலும் பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள கேழ்வரகு கலவையை இட்லி தட்டில் பரப்பி விடவும்.

    * இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சத்தான கேழ்வரகு புட்டு ரெடி!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - நான்கு கப்

    உளுந்து - முக்கால் கப் ,

    குடைமிளகாய் - 1,

    ப.மிளகாய் - 3

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பச்சைப் பட்டாணி - கால் கப்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - மூன்று ,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

    உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கி விட்டிருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.

    கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வெட்டி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டி யெடுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு மசாலா இட்லி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப்

    கோதுமை மாவு - கால் கிலோ

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

    * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.

    * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும், மேலும் ஆண்மை குறைபாட்டை நீக்கும்.
    • பச்சைப் பயறில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது, புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    தினை மாவு - 1 கப்,

    பச்சைப் பயறு - அரை கப்,

    தேங்காய்த்துருவல் - 1 கப்,

    கருப்பட்டி - 100 கிராம்,

    நெய், உப்பு - சிறிது.

    செய்முறை

    தினை மாவை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின் ஒரு தட்டில் வறுத்த தினை மாவை சிறிது வெந்நீர் விட்டு, கொஞ்சம் உப்பு கலந்து பிசிறிக் கொள்ளவும்.

    பச்சைப்பயறு, தினை மாவு, தேங்காய்த்துருவல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக புட்டு குழாயில் வைத்து நீராவில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான தினை பச்சைப் பயறு புட்டு ரெடி.

    வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்:

    கேப்பை (கேழ்வரகு) மாவு - ஒரு கப்,
    நாட்டு சர்க்கரை - ஓர் உழக்கு,
    நெய் - தேவையான அளவு,
    ஏலக்காய் - 5,
    முந்திரி - 10,
    தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

    செய்முறை:

    நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.

    ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.

    கேழ்வரகு மாவைச் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஊறவைக்கவும்.

    சிறிது நேரம் கழித்து மாவைக் கட்டியில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும்.

    நன்றாக வெந்தபின் தட்டில் கொட்டி கட்டியில்லாமல் உதிர்க்கவும்.

    பிறகு, நாட்டு சர்க்கரையைக் கலந்து வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான சுவையான கேப்பை புட்டு ரெடி.
    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - அரை கப்
    முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - நான்கு
    இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
    வெங்காயம் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    துருவிய கேரட் - அரை கப்

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    முளைகட்டிய பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று தடிமனாக வார்க்கவும்.

     தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய் விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

    சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
    சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி மாவு - 1 கப்
    கொதிநீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    வெல்லத்தூள் - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன் கொதிநீர், உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சூடு ஆறியதும் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிவப்பரிசி இடியாப்பம் ரெடி.
    ×