search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தினை சர்க்கரை பொங்கல்
    X

    தினை சர்க்கரை பொங்கல்

    • சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று தினை அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையானப் பொருட்கள்

    தினை - 1 டம்ளர்

    பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்

    தண்ணீர் - 4 1/2 டம்ளர்

    வெல்லம் - 1 டம்ளர் (பொடித்தது)

    ஏலக்காய் - 4

    தேங்காய் துருவல் - 1/4 டம்ளர்

    முந்திரி பருப்பு - 6-8

    செய்முறை

    தினை மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பாசிப்பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்கவும்.

    பாசிப்பருப்பு பாதி வெந்த பின்னர், தினை அரிசியை போட்டு, மீதமுள்ள 3 1/2 குவளை தண்ணீரையும் ஊற்றவும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறி விடவும்.

    தூளாக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 குவளை நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சுத்தமான வெல்லமாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம்.

    முந்திரி பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

    தினை அரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்து, குழைவான பதத்தை அடைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம் அல்லது வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும்.

    ஒரு ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறவும்.

    தேவைப்பட்டால், பொங்கல் சூடு சற்று குறைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சாப்பிடவும்.

    இப்போது சூப்பரான திணை சர்க்கரை பொங்கல் ரெடி.

    Next Story
    ×