search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தினை - தேங்காய்ப்பால் புலாவ்
    X

    தினை - தேங்காய்ப்பால் புலாவ்

    • சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - ஒரு கப்

    தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)

    வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

    தண்ணீர் - ஒரு கப்

    பச்சைப் பட்டாணி - அரை கப்

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    பட்டை - 2

    சோம்பு - கால் டீஸ்பூன்

    பிரியாணி இலை - ஒன்று

    ஏலக்காய் - ஒன்று

    செய்முறை:

    தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.

    பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.

    இப்போது சூப்பரான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

    Next Story
    ×