search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    நாவில் எச்சில் ஊறும் தினை அல்வா
    X

    நாவில் எச்சில் ஊறும் தினை அல்வா

    • சிறுதானியங்களில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தினை அரிசியில் அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தினை அரிசி மாவு - 200 கிராம்,

    வெல்லம் - 200 கிராம்,

    ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,

    சுக்குத்தூள் - 2 சிட்டிகை,

    முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,

    நெய் - 100 கிராம்.

    செய்முறை

    தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

    சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.

    கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.

    இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

    அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.

    Next Story
    ×