search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweets"

    • சுவீட்ஸ் கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் மொத்தமாக ஆர்டர் எடுத்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையம், திருச்சி சாலை, பழனி சாலை பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதிக அளவில் செயற்கை ரசாயன பூச்சு கலந்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். மேலும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ரசாயன செயற்கை பூச்சு கலந்து இனிப்புகளை வாங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • நெல்லை டவுன் பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாலா கடைகள் இயங்கி வருகின்றன.
    • உளுந்துடன் திராட்சை பழம் சேர்த்து அரைத்து, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பலகாரங்கள் விற்பனை

    தீபாவளி என்றதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் தான். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து உடல் முழுவதும் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பதில் குழந்தைகளுக்கு அவ்வளவு ஆசை.

    அதற்கு அடுத்தப்படியாக தீபாவளியில் இடம்பெறுவது பலகாரங்கள் தான். தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே, லாலா கடைகளுக்கு மவுசு கூடிவிடும். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள லாலா கடைகளில் தீபாவளி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    புது ரகங்கள்

    நெல்லை டவுன் பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாலா கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், பாரம்பரியம் வாய்ந்த நெல்லையப்பர் கோவில் ரத வீதியில் பல கடைகள் நூற்றாண்டுகளை கடந்து 4 தலைமுறையாக இனிப்பு பலகார விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கடைகளில் தற்போது மக்களை கவரும் வகையில் பல புது ரக இனிப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற புது இனிப்பு பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதாவது வழக்கமாக ஜாங்கிரி என்றாலே உளுந்து அரைத்து செய்வார்கள். ஆனால் இதில், உளுந்துடன் திராட்சை பழம் சேர்த்து அரைத்து, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அசத்தலான அல்வா

    மேலும் கேரட் அல்வா, பூசணி விதை அல்வா, பால் அல்வா என அல்வாக்களிலும் பல ரகங்களை நெல்லை கடைக்காரர்கள் அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளனர்.

    நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு லாலா கடைகளில் இனிப்பு பலகாரங்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அதேபோல் அதிரசம், சீடை, கை சுற்றல் முறுக்கு, ஆகிய மிகவும் சிறப்பு வாய்ந்த பலகாரங்கள் விற்பனையும் தொடங்கி உள்ளது. இந்த நவீன காலத்தில் பேக்கரி, டீ ஷாப், கபே என இனிப்பு பலகார கடைகளுக்கு பல புது பெயர்கள் சூட்டப்பட்டாலும் கூட பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கும் கடைகளுக்கு மவுசு குறையவில்லை.

    கை சுற்றல் முறுக்கு

    எந்திரமயமாகி போன இந்த காலத்தில், பெரும்பாலான ஊர்களில் எந்திரங்கள் மூலமாகவே முறுக்கு சுடுகின்றனர். ஆனால் பாளை பகுதிகளில், தற்போது வரை கை சுற்றல் முறுக்கு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கையால் சுற்றி போடப்படும் முறுக்கு, பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பெருமாள் மேலரதவீதியில் கை சுற்றல் முறுக்கு போடும் பணியில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கூட்டமாக அமர்ந்து இந்த முறுக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வியாபாரி பேட்டி

    இதுகுறித்து பாளை பெருமாள் மேலரதவீதியில் உள்ள கடை உரிமையாளர் கூறியதாவது:-

    தீபாவளியை முன்னிட்டு முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் மொத்தமாக ஆர்டர் வந்து கொண்டிருக்கிறது. தல தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு, மணப்பெண்ணின் வீட்டார் இனிப்பு பலகாரங்கள் அதிக அளவில் வாங்கி சீர் கொடுப்பர். எனவே, இனிப்பு பலகாரம் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து பலகாரங்களுக்கும் தலா ரூ.1 விலை கூட்டியுள்ளோம். ஏனெனில் கடந்த ஆண்டு 25 கிலோ புழுங்கல் அரிசி ரூ.850 ஆக இருந்தது. தற்போது அது ரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது. கியாஸ் விலையும் அதிகமாகி விட்டது.

    ஆர்டர்கள் குவிகிறது

    இந்த தீபாவளிக்கு கை சுற்று முறுக்கு ஒன்று ரூ.6-க்கு விற்பனை செய்கிறோம். அதிரசம் ரூ.6, தேன்குழல் முறுக்கு ரூ.7, அச்சு முறுக்கு, தட்டை ரூ.5, முந்திரி கொத்து ரூ.8, நெய் உருண்டை ரூ.7 என்ற விலையில் விற்பனை செய்கிறோம்.

    இதுதவிர வளைகாப்பு செய்யும் கர்ப்பிணி பெண்களுக்காக சீர் முறுக்கு தயார் செய்கிறோம். இது ஒரு முறுக்கு ரூ.200 என்ற விலையில் விற்கிறோம். ஒரு தாம்பூலம் அகலத்தில் இந்த முறுக்கு இருக்கும். வளைகாப்பு முடிந்ததும் கர்ப்பிணியின் மடியில் கட்டி இதனை அனுப்புவார்கள்.

    மற்ற முறுக்கு 100 எண்ணம் சுற்றுவதற்கு ஆகும் மாவின் அளவை கொண்டு 2 சீர் முறுக்கு செய்வோம். இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்டர்கள் வந்துள்ளன. மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயங்கொண்டம் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில்ரூ.1.50 லட்சம் செலவில் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு
    • ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் வழங்கினார்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீன்சுருட்டி அருகே உள்ள முத்துச்சேர்வார்மடம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பாரதி ரமேஷ் உள்ளார். இவர் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், பம்பு ஆப்ரேட்டர்கள், புது வாழ்வு திட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை, இனிப்பு வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு ரெட்டிப்பாளையம், முக்குளம், நல்லிதோப்பு முத்துச்சேர்வார்மடம், சம்போடை, சுண்டிபள்ளம், கங்கவடங்கநல்லூர் உள்ளிட்ட 9 வார்டுகளில் பணிபுரிந்து வரும் 50 பணியாளர்களுக்கு அவர் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் தனது சொந்த செலவில் 4வது ஆண்டாக புத்தாடை, இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் செய்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தனது சொந்த முயற்சியினால், வீடு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் 3 பழங்குடி இனத்தவர்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

    இந்த விழாவில் துணைத் தலைவர் அறிவழகன் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு.
    • இந்த இனிப்பு உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    உலகளவில் இருக்கும் சிறந்த உணவு அனுபவங்களைக் கண்டறியும் ஆன்லைன் வழிகாட்டியான பிரபல டேஸ்ட்அட்லாஸ் என்கிற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், உலகளவில் உள்ள சிறந்த 50 இனிப்புகளின் பட்டியலை டேஸ்ட்அட்லாஸ் வெளியிட்டது.

    இதில், இந்தியாவின் பிரபல இனிப்புகளான காஜூ கத்லி மற்றும் ரச மலாய் இடம் பெற்றுள்ளன. இதில், ரச மலாய்க்கு 31வது இடமும், காஜூ கத்லிக்கு 41வது இடமும் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

    இந்தியாவின் ஒரு பிரியமான இனிப்பாக கருதப்படும் ரச மலாய், வைட் க்ரீம், சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சுவை கொண்ட பன்னீர் சீஸ் கொண்டு தயாரிக்கப்படும் கலவையாகும். இத்துடன், பாதாம், முந்திரி மற்றும் குங்குமப்பூவின் நறுமணத் தொடுகை ஆகியவற்றையும் இனிப்பில் சேர்த்து கூடுதல் சுவை அளிக்கிறது. மேற்கு வங்காளத்தில் இருந்து உருவான ரச மலாய் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் பிரபலமாகும்.

    இதேபோல், காஜூ கத்லி இனிப்பு. பண்டிகை காலங்கள் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் பலராலும் கவர்ந்திழுக்க கூடிய இனிப்புகளில் ஒன்று காஜூ கத்லி. 

    காஜூ பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு வகை, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் கவலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    வைர வடிவத்துடன் இருக்கும் அதன் சின்னம் தனித்து நிற்கும் ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு வகையாகும்.

    இந்திய கலாச்சாரத்தில், கஜு கட்லியை உட்கொள்வது ஒருவரின் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என்றும் நம்பப்படுகிறது.

    ராச மலாய் மற்றும் காஜு கத்லி ஆகிய இனிப்புகள் பட்டியலில் தங்கள் இடங்களை சரியாகப் பெற்றிருந்தாலும், முதல் மூன்று இடங்களில் க்ரீப்ஸ், பாம்போகாடோ மற்றும் கியூசோ ஹெலடோ ஆகிய இனிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்
    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்க விழா மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் க சண்முகம் செய்திருந்தார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டினர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் டி.கே.டி தேவராஜ், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, மீனவர் அணி செயலாளர் விஷாந்த், பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், எம்.ஜி.ஆர் மன்ற நகர தலைவர் ஜெயராமன், அம்மா பேரவை செயலாளர் திவாகர், அவைதலைவர் சிவக்குமார், வர்த்தக அணி செயலாளர் பூக்கடை ஸ்ரீ, அம்மா பேரவை துணைத் தலைவர் சாந்தகுமார், கூட்டுறவு முன்னாள் தலைவர் சங்கர், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பிரபு, நகரமன்ற உறுப்பினர் லயோலோ குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச்செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு குருவிகுளம் வடக்கு ஒன்றியம் சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச் செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் காரிச்சாத்தான் முன்னாள் ஊராட்சி செயலாளர் முத்தையா, நடராஜன், திருநாவுக்கரசு, புதுச்சுப்புலாபுரம் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தர்மராஜ், பிரித்விராஜ், கார்த்திகேயன், விக்னேஷ்வரன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் விஜயராணி, ஜெயராம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது.
    • இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள்.

    நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. காரசாரமான உணவுகளை விட நாவிற்கு தித்திப்பூட்டும் இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நாட்டின் மற்ற பகுதியில் வசிப்பவர்களும் சுவைக்க தூண்டும் அளவிற்கு ருசி மிகுந்தவை. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

    கொழுக்கட்டை:

    அரிசி மாவு, வெல்லம், தேங்காய் கலந்து நீராவில் வேகவைக்கப்படும் இது அனைத்து தரப்பினரும் விரும்பும் இனிப்பு பலகாரமாக உள்ளது. கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பு மட்டுமின்றி காரமாகவும் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.

    மைசூர் பாக்:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் தயாராகும் இது அதன் பெயரையும் தாங்கி நிற்கிறது. உளுந்தம் பருப்பு, நெய், சர்க்கரை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது நாவில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மையுடையது. கர்நாடகா மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்திருக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அரசர் காலத்தில் இருந்தே அதன் தரம், ருசி மாறாமல் இன்றளவும் சுவைக்கப்படுகிறது.

    உன்னியப்பம்:

    கேரளாவில் பிரபலமான இனிப்பு வகையாக விளங்குகிறது. அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம், வறுத்த எள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒவ்வொரு வீடுகளிலும் ருசிக்கப்படும் சிற்றுண்டியாக விளங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பரிமாறப்படும் இனிப்பு வகையாக கருதப்படுகிறது.

    ஒப்பாட்டு:

    கர்நாடகாவில் தயாரிக்கப்படும் இது பூரான் போளி என்றும் அழைக்கப்படுகிறது. கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போன்றவற்றின் கலவையில் இது உருவாகிறது. போளி வகையிலேயே மாறுபட்ட சுவை கொண்டது. இதனை இனிப்பு பிரெட் என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் திரு விழாக்கள், வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளின்போது இது பரிமாறப்படுகிறது.

    ஜாங்கிரி:

    உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை இது. அதனை நன்றாக வறுத்து பொடித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. மெல்லிய இழைகளாக அச்சுக்களில் வார்க்கப்படும் இது ஆரஞ்சு நிற சாயலில் காட்சி அளிக்கும். தித்திக்கும் இனிப்பு பண்டங்களை விரும்புபவர்கள் ஜாங்கிரியை தவிர்க்கமாட்டார்கள்.

    கடலை மிட்டாய்:

    தமிழ்நாட்டின் பிரபலமான தின்பண்டமாக விளங்கும் கடலை மிட்டாய், வறுத்த வேர்க் கடலை, வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது. மொறுமொறுப்பான, மிதமான இனிப்பு சுவை கொண்டது.

    கேசரி:

    ரவை, நெய், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ருசிப்பார்கள்.

    பூதரெகுலு:

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இது, அரிசி மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. காகித இழை போல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உலர் பழங்களும் சேர்க்கப்படும். உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால் இது சத்தான இனிப்பு பொருளாக அறியப்படுகிறது.

    • நாகையில் உள்ள புதேவாலயம், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவிட் வழங்கி கொண்டாடினார்.
    • மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி நாகூர் நாயகன் நேசபாசறை என்ற அமைப்பை சேர்ந்த ஹாஜா சம்சுதீன் சாகிப் என்ற இஸ்லாமியர் மீலாது நபியை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம், பாப்பாகோவில் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு சுவிட் கேக் வழங்கி கொண்டாடினார்.

    மீலாது நபி பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் ஒருவர் கேக் வழங்கி கொண்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    • சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள்.
    • வீட்டிலேயே ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

    சாக்லேட் ஐஸ்கிரீம், சாக்லேட் கேக், சாக்லேட் மில்க் ஷேக் என எதனை தேர்ந்தெடுத்தாலும் அதில் சாக்லெட் சுவையில் இருக்கும் பொருட்களைத் தான் குழந்தைகள் முதலில் தேர்வு செய்வார்கள். அதனால் பல அம்மாக்களும் சாக்லேட் செய்வது சுலபமாக இருந்தால் அதனை வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமே என்று நினைப்பார்கள். வாங்க நாம இன்றைக்கு கேரமல் சாக்லேட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சர்க்கரை - 200 கிராம்

    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் (உப்பு இல்லாதது)

    பிரஷ் கிரீம் -கப்

    உப்பு - 1 சிட்டிகை

    மில்க் சாக்லெட் - 400 கிராம்

    கார்ன் சிரப் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    (குறிப்பு கரண்டிக்கு பதிலாக சிலிக்கான் ஸ்பாட்சுலாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்).

    ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சர்க்கரையை கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். சிறிது நேரத்தில் சர்க்கரை உருகி கேரமலாக மாற ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் பிரஷ் கிரீம் மற்றும் அரை சிட்டிகை உப்பு கலந்து தனியாக வைக்கவும்.

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். மற்றொரு சிறிய பாத்திரத்தில் 250 கிராம் மில்க் சாக்லெட்டை போட்டு. அதை தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் உள்ளே வைக்கவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருக ஆரம்பிக்கும். இதை உடன் பாயிலிங் முறை" என்று குறிப்பிடுவார்கள்.

    சாக்லெட் முழுவதுமாக உருகியதும், அதனுடன் கார்ன் சிரப் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இந்தக் கலவையை இரண்டு பங்காக பிரித்துக்கொள்ளவும்.

    ஒரு செவ்வக வடிவ பாத்திரத்தின் உள்ளே பட்டர் பேப்பரை வைக்கவும். அதன் மீது உருக்கி வைத்துள்ள ஒரு பங்கு மில்க் சாக்லெட்டை பரவலாக ஊற்றவும். அதற்கு மேல் கேரமல்லை ஊற்றி தடவ வேண்டும். பின்னர் மீண்டும் அதன் மேல் மற்றொரு பங்கு மில்க் சாக்லெட்டை ஊற்றி பரப்பி விடவும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்.

    சாக்லெட் சற்று கெட்டியாகி இருக்கும். அதை 15 அங்குல அகலம் கொண்ட துண்டுகளாக வெட்டி எடுத்து. 30 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். மீதம் இருக்கும் 150 கிராம் மில்க் சாக்லெட்டை மீண்டும் டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.

    இப்போது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் சாக்லெட் துண்டுகளை வெளியே எடுக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து, பட்டர் பேப்பரில் வரிசையாக அடுக்கி வைக்கவும். பின்னர் மீண்டும் அதை குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வரை வைத்து எடுக்க வேண்டும். இப்போது கேரமல் நிறைந்த சுவையான சாக்லெட்டுகள் தயார்.

    இதன் மீது தங்க நிற ஜரிகை காகிதம் ஒட்டி, நண்பர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,

    கேரட் துருவல் - 1 கப்,

    சர்க்கரை - 2 கப்,

    ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    அலங்கரிக்க :

    பிஸ்தா, பாதாம் - சிறிது.

    செய்முறை

    கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை கொட்டி நன்றாக அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இப்போது ராஜஸ்தான் ஸ்பெஷல் கேரட் கோவா பர்ஃபி ரெடி.

    குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன் கடைசியாக சேர்க்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த கேக்சிக்கில்ஸ் ரொம்ப பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 30 நிமிடமே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    கேக் (உங்களுக்கு விருப்பமானது) - 2 கப்

    பட்டர் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை சாக்லெட் - 1 கப்

    சிலிக்கான் மோல்டு - 1

    ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லெட்டை கொட்டவும்.

    அதைவிட சற்று பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சாக்லெட் இருக்கும் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுப்படுத்தவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருகியதும் அதை ஆறவைக்கவும்.

    சிலிக்கான் மோல்டை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக துடைக்கவும். பின்பு அதில் உருக்கிய வெள்ளை சாக்லெட்டை 3 டீஸ்பூன் ஊற்றி, எல்லா பக்கமும் படியுமாறு மெதுவாக சுழற்றவும்.

    பின்னர் ஐஸ்கிரீம் குச்சிகளை உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து மோல்டின் நடுப்பகுதியில் நுழைக்கவும். இது செட் ஆவதற்காக 10 முதல் 12 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

    இப்போது கேக்கை தூளாக உதிர்த்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் சிறிது சிறிதாக பட்டர் கிரீமை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் மோல்டை வெளியே எடுக்கவும்.

    தயாரித்து வைத்திருக்கும் கேக் கலவையை, மோல்டில் இருக்கும் வெள்ளை சாக்லெட் மீது நிரப்பவும்.

    பின்னர் அதன் மீது சிறிதளவு உருக்கிய வெள்ளை சாக்லெட்டை ஊற்றவும். (சாக்லெட் இறுகி இருந்தால் சில நிமிடம் மறுபடியும் சுடுநீரில் வைக்கவும்.) மீண்டும் 12 முதல் 15 நிமிடங்கள் வரை மோல்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான கேக்சிக்கில்ஸ் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.

    தேவையான பொருட்கள்

    ரவை - 1 கப்

    மைதா - 1 கப்

    துருவிய தேங்காய் - 1 கப்

    சர்க்கரை - ஒன்றரை கப்

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    உப்பு - சிட்டிகை

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.

    இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள்.

    ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.

    இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×