search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலம் ஊராட்சி தூய்மை  பணியாளர்களுக்கு  இனிப்புகள் - புத்தாடை
    X

    திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகள்- புத்தாடை வழங்கிய காட்சி.

    மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் - புத்தாடை

    • தீபாவளியை முன்னிட்டு க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை பகுதியில் திருப்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் தலைமையில் தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.முன்னிலையில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகள்- புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன்,தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.குமார்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் எஸ்.அசோகன், மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மு.அப்துல்பாரி,ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் , தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் சுமதிசெந்தில், சகாப்தீன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுபாலசுப்பிரமணியம் ,மங்கலம் இளைஞர் அணி அமைப்பாளர் இப்ராஹிம் , முன்னாள் மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் தம்பிரஹீம், காங்கிரஸ் கட்சியின் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சபாதுரை மற்றும் தி.மு.க. கட்சியின் மங்கலம் நிர்வாகிகள் முபாரக்ராஜா , சேக்முஜிபுர் ரகுமான், சுல்தான்பேட்டை நிர்வாகிகள் பண்ணையார்திருமூர்த்தி ,பாலு , முருகன்,கிட்டான்,அர்ஜூனன் மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×