search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new clothes"

    • ஒவ்வொருவருக்கும் ரூ.1000 மதிப்பில் புத்தாடைகள் வாங்கி கொடுக்கப்பட்டது.
    • மொத்தமாக ரூ.1.50 லட்சம் மதிப்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி யில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .

    ஊரே தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தூய்மை பணியாளர்கள் தங்களது கடமையில் தவறாது பணி செய்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 'சுத்தம் சோறு போடும்' என்ற முதுமொழிக்கு ஏற்ப தூய்மை இந்தியா எனும் வாசகத்தை முன்னிறுத்தி பல்வேறு சுகாதார திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமம், நகரம் என அனைத்தின் சுகாதாரத்திலும் தூய்மை பணியாளர்களின் பங்கு அளப்பரியது . மக்களின் சுகாதார நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பண்டிகை நாளன்று கூட தங்களது குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழாமல் பணிகளில் துரித கவனம் செலுத்திவரும் நிகழ்வு நெகழ்ச்சியை அளிக்கிறது.இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பிரபல துணிக்கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு பிடித்த புத்தாடையை தேர்வு செய்ய வைத்து அதை வாங்கிக்கொடுக்கும் நிகழ்வு

    தஞ்சையில் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சி 12-வது டிவிஷனை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், அனிமேட்டர் உள்ளிட்ட 40 பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு பணியாளரின் குடும்பத்தார் என சுமார் 150 நபர்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் தனி வாகனத்தில் தஞ்சை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களே தேர்வு செய்ய வைத்து வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பில் புத்தாடைகள் என மொத்தம் 1.50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டது .

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், புத்தாடை வழங்க இருக்கிறார்கள் என்று கூறியவுடன் சாதரணமாக நினைத்தோம். ஆனால் எங்களை குடும்பம் சகிதமாக தனி வாகனத்தில் அழைத்து வந்து மிகப்பெரிய துணிக்கடையில் எங்களுக்கான ஆடைகள் மற்றும் எங்கள் குடும்ப த்தாருக்கும் தேவையான ஆடைகளை நாங்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை நிர்வாகம் ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

    முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தானம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞான சுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தீபாவளி கொண்டாடினார்.
    • அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி திருநாளில் ஆதரவற்றோர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை மங்களபுரத்தில் உள்ள அதுல்லாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்ற டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., அங்குள்ள அனைவருக்கும், புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார்.

    முதியவர்கள், சிறுவர்களைப் போல் மத்தாப்புகளை கொளுத்தி உற்சாகமடைந்தனர்.

    குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு , எம்.எல்.ஏ.வுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க பகுதி செயலாளர்கள் நீலகண்டன் (கீழவாசல்), சதாசிவம் (மருத்துவ கல்லூரி), மண்டல குழு தலைவர் கலையரசன், கவுன்சிலர்கள் ஆனந்த், அண்ணா.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
    • மாற்றுத்திறன் மாணவர்களை கடைக்கு அழைத்து சென்று உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருகிறது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி (ஞாயிறு) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    அதற்காக அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர் .

    விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும், பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவ -மாணவிகளும் எந்த ஒரு காரணத்துக்காகவும் தீபாவளி கொண்டாட்டங்க ளையும் பண்டிகை தரும் அளவற்ற மகிழ்வான தருணங்களையும் தவற விடக்கூடாது என்ப தற்காக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனை முன்னிட்டு ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திப்பியக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாண வர்களையும் அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுடன் அவர்களது இல்லத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகள் அவர்கள் விரும்பும் உடைகளை தீபாவளி பரிசாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் வாங்கிக் கொடுத்தனர்.

    மேம்பாலம் பார்வைத்திறன் குறைவுடையோர் பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ- மாணவிகளுக்கும் தேவையான புத்தாடைகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது .

    மேலும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் 10 வகையான இனிப்புகள் அடங்கிய ஸ்வீட்பாக்ஸ் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்கள் தெரிவிக்க ப்பட்டது.

    மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் , இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஆதர வற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி உள்ளிட்டபண்டிகை காலங்களை மகிழ்வாக கொண்டா டுவதற்காக தொடர்ந்து பல்வேறுநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவர்களை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருவதாக தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி –மளிகை பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பாடுபடும் தூய்மை பணியாளர்களின் பங்கு மக த்தான போற்றுத லுக்குரியது.

    அவர்களது இன்றிய மையாத பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சை மாவட்டம் விளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியா ளர்கள் அனைவருக்கும் ரூ. 50,000 மதிப்பிட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள், புத்தாடைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது.

    ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளார் ஊராட்சி மன்றத்தலைவி மைதிலி ரெத்தினசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

    இந்த நிகழ்ச்சி யில் விளார் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது
    • பாய், தலையணை, மளிகை பொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த செருகுடி கிராமத்தில் தியாகராஜன், ஆராயி, பாஸ்கரன் ஆகிய 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பாய், தலையணை, மளிகைபொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் மலர்க்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி இசக்கியப்பன், அலமேலு, செல்வராஜ், புஷ்பம் , விஜயகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • 1243 துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு- புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியா ளரான தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கவுரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3-வது முறையாக ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள் 1243 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் தொற்று பரவாத வகையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் பணியாற்றிய முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் கோவில்கள் கூட மூடி இருந்தது. ஆனால் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் சிறப்பாக பணியாற்றி ராஜபாளையம் தொகுதியில் கொரோனா தாக்கத்தை குறைத்துள்ளீர்கள். உங்களை பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    இந்த நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம்ராஜா, தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா,(தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பாகிஸ்தான் எல்லையில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனுக்கு இந்திய ராணுவத்தினர், பரிசுகள் வாங்கி கொடுத்து பத்திரமாக வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். 

    இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து கடந்த 24 ஆம் தேதி, மொகமது அப்துல்லா என்னும் 11 வயது சிறுவன் ஒருவன் வழிதவறி, இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டான். இந்த சிறுவனை இந்திய பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
     
    அந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை காஷ்மீர் போலீசார் செய்தனர். கடந்த 3 நாட்களாக காஷ்மீர் போலீசாரிடம் இருந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்தனர். 
     
    அந்த சிறுவனை ஒப்படைக்கும் போது, அவனுக்கு புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து இந்திய ராணுவத்தினர் பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×