தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி –மளிகை பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Published on

தஞ்சாவூர்:

நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பாடுபடும் தூய்மை பணியாளர்களின் பங்கு மக த்தான போற்றுத லுக்குரியது.

அவர்களது இன்றிய மையாத பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம் விளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியா ளர்கள் அனைவருக்கும் ரூ. 50,000 மதிப்பிட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள், புத்தாடைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது.

ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளார் ஊராட்சி மன்றத்தலைவி மைதிலி ரெத்தினசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

இந்த நிகழ்ச்சி யில் விளார் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com