search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் - எஸ்.பி. எச்சரிக்கை
    X

    நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் - எஸ்.பி. எச்சரிக்கை

    நெடுஞ்சாலையோரம் விதிமுறைகளை மீறி வாகனங்ளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேவேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீசார் ரோந்து செல்ல வாகனங்கள் டார்ச்லைட், ரேடார்கள், கேன், உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இவற்றின் பராமரிப்பு குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

    அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடைபெற்றது. ஆய்வு செய்த பின்னர் எஸ்.பி. பிரவேஷ் குமார் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் கேதாண்டப்பட்டி, மோட்டூர், வன்னிவேடு, நாட்டறம் பள்ளி, ஆகிய 4 இடங்களில் இலவச வாகன நிறுத்துமிடம் உள்ளது.

    அந்த இடத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். விதிகளை மீறி நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதை கண்காணிக்க 4 போலீஸ் ரோந்து குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
    Next Story
    ×