search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sitaram yechury"

    சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். #DMK #Stalin #SitaramYechury
    சென்னை:

    மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்.



    அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். அப்போது, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து எதிர் வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #DMK #Stalin #SitaramYechury
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை சந்தித்து பேசுகிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறுகிறது. #DMK #MKStalin #SitaramYechury
    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    ஏற்கனவே அவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    கடந்த 9-ந்தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை சந்தித்து பேசுகிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

    இந்த சந்திப்பின்போது 20 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்திலும் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார். #DMK #MKStalin #SitaramYechury
    பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க சீத்தாராம் யெச்சூரி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மு.க.ஸ்டாலினை சந்திக்க சீத்தாராம் யெச்சூரி வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார். #MKStalin #SitaramYechury
    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சீத்தாராம் யெச்சூரி வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார்.

    பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த ஓரணியில் நிற்க என்னென்ன வியூகம் வகுப்பது என்பது குறித்து அப்போது ஆலோசனை நடத்துகிறார்கள்.


    இந்த சந்திப்பை உறுதி செய்வதற்காக மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் டி.கே.ரெங்கராஜன் எம்.பி.யும் உடன் சென்றிருந்தார்.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து பாடுபட மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பு விடுக்க உள்ளார். #DMK #MKStalin #SitaramYechury
    சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் இரட்டை வேடம் போடுவதாக சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டி உள்ளார். #BJP #Congress #SitaramYechury #Sabarimala
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற உள்ள தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். தமிழக அரசியல் சூழ்நிலை, கூட்டணி தொடர்பாக பேசினோம். இந்திய அளவில், அந்தந்த மாநிலங்களில் மாநில கட்சிகள் இது போன்ற ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி கேரள அரசு சபரிமலை அய்யப்பன் கோவிலை திறந்து வைத்து உள்ளது. மத்திய அரசு தமிழகம், கேரளா, கர்நாடக டி.ஜி.பி.களை அழைத்து, இது போன்ற போராட்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று உள்ளார். ஆனால், கேரளாவில் உள்ள காங்கிரசார் பா.ஜனதாவினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதாவினரோ சபரிமலையின் புனித தன்மை, மரபுகளை காக்க போராடவில்லை. அரசியலுக்காகவே போராட்டம் நடத்துகின்றனர்.



    பெண்கள் முன்னுரிமைக்காக முத்தலாக் பிரச்சினையை வரவேற்ற பா.ஜனதாவினர் சபரிமலை விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது முரண்பாடாக உள்ளது. பா.ஜனதாவினர், காங்கிரசார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சபரிமலை விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். சபரி மலையில் சில சமூக விரோதிகள் புகுந்துள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். தோல்வியைத் தான் தழுவி உள்ளது.

    மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான பேரணிக்கு மம்தா பானர்ஜி எங்களுக்கு அழைப்பு தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Congress #SitaramYechury #Sabarimala
    மத்திய அரசு அவசர நிலையை மக்கள் மீது திணிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடன தினத்தை அனுசரித்து, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மட்டுமே இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவசர நிலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்தபோது அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துரோகம் இழைத்தது. ஆனால் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், பா.ஜ.க.வினரும் அவசர நிலையை எதிர்த்து தீவிரமாக போராடியதாகவும், ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை தாங்களையே சாரும் என்றும் பெருமை கொள்கிறார்கள்.

    உண்மையிலேயே ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை நாட்டு மக்களையே சாரும். நிர்வாக ரீதியாக அவசர நிலையை மக்கள் மீது மத்திய அரசு திணிக்கிறது. அவசர நிலையின் போது நீதித்துறைக்கு எதிராக இந்திராகாந்தி என்ன செய்தாரோ அதையே தற்போதைய பா.ஜ.க. அரசும் செய்கிறது. மத்திய அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது. அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

    அவசர நிலை அறிவித்தபோது அதற்கெதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்து போராடியது போல, தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திலும் எங்களது கட்சி முன்னணியில் இருக்கும். அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து தீவிரமாக போராடுவோம். விவசாயிகளின் நிலங்களையும், பொதுமக்களின் வீடுகளையும் அழித்து சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தேவையற்றது.

    தி.மு.க. உடன் கூட்டணி அமைப்பது குறித்து மத்திய, மாநிலக்குழு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும். மாநிலத்தில் இருந்து அ.தி.மு.க.வும், மத்தியில் இருந்து பா.ஜ.க.வும் அகற்றப்படவேண்டும். அதற்கான குறிக்கோளை எட்டும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். மத்திய அரசின் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தும் வகையில் தமிழக கவர்னர் செயல்பட்டால் கண்டனத்துக்குரியது.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஜனநாயகம் இல்லாத சவுதி அரேபியா, ஏமன், சிரியா, ஈரான் போன்ற நாடுகள் கூட இந்தப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாகத்தான் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். #tamilnews
    இந்தியா மேம்படவும், மக்கள் வளம் பெறவும் மத்தியில் பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury #BJP

    திருச்சி:

    தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

    இந்த பயணம் திருச்சியில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல, நல்ல கொள்கைதான். அடுத்து வருகிற தேர்தலில் மோடி வருவாரா? அல்லது எந்த தலைவர் வருவார் என யோசிக்காமல் எந்த கொள்கையை அரியணை ஏற்ற வேண்டும் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. வரி முறையை அமல்படுத்தியதால் சிறு, குறு தொழில்கள் பாழ்பட்டு விட்டது. கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. இதை மாற்ற மத்திய அரசை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, மாற்றுக்கொள்கையுடையவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

    தமிழகத்தில் 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பதில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இறுதி தீர்ப்பு அடிப்படையில் தான் தமிழகத்தில் உள்ள ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என சொல்ல முடியும். தமிழக அரசை ‘ரிமோட்’ மூலம் மோடி இயக்குகிறார்.

     


    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றிருக்கிறார்கள். காவலர்கள் கையாண்ட துப்பாக்கி சைலன்சர் வகை துப்பாக்கி ஆகும். அதாவது சுட்டால் சத்தம் வராது. போராட்ட பதற்றத்தில் இருந்து கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது, உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது.

    துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால் ஒரு எச்சரிக்கைகூட விடப்படவில்லை. ஒரு வேளை இதில் மத்திய ஆட்சியாளருக்கு தொடர்பு இருக்குமேயானால், உச்சநீதி மன்ற நீதிபதிகள் மூலம் ஆழமாக விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும்.

    வங்கிகளின் வாராக்கடன் தொகையான ரூ.11.5 லட்சம் கோடியானது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியது தான். அந்த தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றாலே நாட்டில் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும். இந்தியாவில் வலுவான போராட்டம் மூலமாக தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

    இந்தியா மேம்படவும், மக்கள் வளம்பெறவும் பாரதிய ஜனதா அரசும், மாநில பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும். சாதீய கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வருகிற ஜூலை 2-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மறுநாள் ஜூலை 3-ந்தேதி சேலத்தில் பெண்கள் சிறப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.

    கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #SitaramYechury #BJP

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார். #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident
    தூத்துக்குடி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று தூத்துக்குடி வந்தார். அவர், அங்கு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தேன். துப்பாக்கி சூடு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்று தெரிகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களை சுட்டோம் என்று போலீசார் கூறுவதை நம்ப முடியவில்லை.



    அதுபோன்று வன்முறை நடந்து இருந்தால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை படிப்படியாக பின்பற்றி இருப்பார்கள். ஆனால் இங்கு நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி குண்டு பெரும்பாலும் வயிற்றிலும், அதற்கு மேலேயும் பட்டு உள்ளது. இது கலவரத்தை கட்டுப்படுத்தும் முறை அல்ல. போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது.

    துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் போது, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அங்கு இல்லாதது வினோதமானது. இதனால் கீழ்நிலை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு உள்ளார்கள். இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அல்லது ஐகோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    தூத்துக்குடியில் போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஒருவித பதற்றமான சூழல் உள்ளது. ஆகையால் உடனடியாக போலீசை குறைக்க வேண்டும். பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயம், நிலத்தடி நீர், மக்களுக்கான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆலையை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்டரீதியாக நிலைத்து நிற்காது. அதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

    மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident 
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #sitaramyechury #thoothukudiincident

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களை சந்தித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிய விதிகளை பின் பற்றாமல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கலெக்டர் அங்கு இல்லை. அப்படியென்றால் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், பெருமளவு மாசு பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sitaramyechury #thoothukudiincident

    பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury #BJP

    புவனேஸ்வரம்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், மதவாத சக்திகளின் அத்துமீறல் செயல்பாடுகள், சட்டப்பூர்வமான அமைப்புகள் மீது நடக்கும் தாக்குதல்கள் போன்றவற்றின் காரணமாக மத்திய அரசு மீது மக்களின் கோபம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை மிக அதிகரித்து இருக்கிறது. சுமார் 60 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா அரசு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை 1½ மடங்கு உயர்த்துவதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

    ரூ. 1 கோடியே 20 லட்சம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளும் குரல் கொடுத்த வருகிறார்கள். ஆனால், அரசு அதை செய்யவில்லை. அதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

    இப்போது நாட்டில் சில்லரை வர்த்தகத்தை சீரழிக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் பிலிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை கைப்பற்றி இருக்கிறது.

    இதன் மூலம் அன்னிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் இந்தியாவுக்குள் நுழைய பிரதமர் நரேந்திர மோடி வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.

    ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி, பண மதிப்பிழப்பு காரணமாக வர்த்தகங்கள், சிறு தொழில்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் பாதிப்பை அடைய செய்துள்ளனர்.

    இந்த அரசின் அபாயகரமான கொள்கைகளை எதிர்த்து போராடும் அமைப்புகளுக்கு பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் அனைத்தும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #SitaramYechury #BJP

    ×