search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர்-அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி
    X

    துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர்-அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #sitaramyechury #thoothukudiincident

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களை சந்தித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிய விதிகளை பின் பற்றாமல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கலெக்டர் அங்கு இல்லை. அப்படியென்றால் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், பெருமளவு மாசு பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sitaramyechury #thoothukudiincident

    Next Story
    ×