search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shenkottai"

    • செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் ஓட்டுனர்களுக்கு தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி. கலந்து கொண்டு ரெயில் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான ரஹீம், நிர்வாகிகள் கல்யாணி, மணிக ண்டன், சரவணன், மேரி, ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி, துணைத் தலைவா் ராஜேந்திரராவ், செயலாளா் கிருஷ்ணன், துணைச் செயலாளா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா் சுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலா் ராமர், நகர்மன்ற உறுப்பினா்கள் பொன்னு லிங்கம், வேம்புராஜ், செண்பகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை-தாம்பரம் தாமிரபரணி அதிவிரைவு ரெயில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    பாவூர்சத்திரம்

    செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரெயில் ஓட்டுனர்களுக்கு சால்வை, மரக்கன்றுகள் மற்றும் தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ரெயிலுக்கு கடையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் பெற்றுத்தர வேண்டி ஞானதிரவியம் எம்.பி.யிடம் தோரணமலை முருகபக்தர்கள் குழுவினர் மனு அளித்தனர்.

    மேலும் ரெயில் பயணிகள் கோரிக்கையாக இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்ட வேண்டும் எனவும் பாவூர்சத்தி ரம் ரெயில் நிலையத்திற்கு பேன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கடையம் ெரயில் நிலையத்திற்கு நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது .

    • சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
    • முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை -குற்றாலம் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சிலுவைமுக்கு பகுதியானது வல்லம், பிரானூர் பார்டர், வாஞ்சிநகர், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலையை சுற்றுவட்டார மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது காற்றில் பறந்து சென்று விழுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியினர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைத்து அவ்வப்போது குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிகழ்ச்சிக்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா். மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த் வரவேற்று பேசினார்.

    அதனை தொடா்ந்து நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வழங்கி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நேரடியாக மக்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய அடையாள சான்று பெற்று உறுப்பினர் ஆக்க சேர்க்க வேண்டும், இரட்டை பதிவு இல்லாமல் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் அதிகளவில் புதிய உறுப்பினா்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.

    சுதாரித்து கொண்ட மர்ம நபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் நகையை மட்டும் அறுத்து கொண்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவருகிறார்.

    • ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செங்கோட்டை பிரானூர் பார்டரில் நடந்தது.
    • மேற்கு ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை பிரானுார் பார்டரில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மற்றும் தென்காசி மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. வடக்குமாவட்ட செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவா் மூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளா் சண்முகப்பிரியா, துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் முருகையா, தங்கம்பிச்சை, காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச்செயலாளா் சுப்பிரமணியன் தொகுப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிரணி துணைச்செயலாளா் முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி, தலைமை கழக பேச்சாளா்கள் பழனிக்குமார், கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினா்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் கண்ணன், விவசாய பிரிவு செயலாளா், மருத்துவா் அணி செயலாளா் மற்றும் ஒன்றியக் செயலாளா்கள், நகரக் செயலாளா்கள், பேரூர் செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கிளைச்செயலாளா் மாடசாமி நன்றி கூறினார்.

    • இதுவரை எனது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை என தி.மு.க. உறுப்பினா் ரஹீம் கூறினார்.
    • அடுத்த கூட்டத்தினை நாங்கள் புறக்கணிக்க இருக்கிறோம் என்று அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பொறுப்பு ஜெயப்பிரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    நகர்மன்ற தலைவா் ராலெட்சுமி பேசும்போது, நாம் அனைவரும் பதவியேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரையில் எனக்கு நீங்கள் அளித்துள்ள ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    விருப்பு, வெறுப்பு இன்றி நமது நகரின் நலனுக்காகவும், முன்னேற்றதிற்காகவும் அனைவரும் ஒன்றாக இணைந்து பணி செய்ய வேண்டும் என பேசினார்.

    தி.மு.க. உறுப்பினா் ரஹீம் பேசும்போது, இதுவரையில் எனது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூறமுடியாமல் இருந்து வருகிறோம். தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டிக்கிறோம். அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பேசினார்.

    இதனையடுத்து அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசும்போது, ஓராண்டு நிறைவு பெற்ற பின்னும் இன்னும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, கழிவு நீர் ஓடை, சீரான குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை.

    எனவே அடுத்து நடக்க இருக்கிற கூட்டத்தினை நாங்கள் புறக்கணிக்க இருக்கிறோம் என பேசினார்.

    இதேபோல் நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, சுடர்ஒளி, வேம்புராஜ், செண்பகராஜன், இசக்கித்துரை பாண்டியன் மற்றும் ஏனைய உறுப்பி னா்கள் இதே கருத்தை வலியுறித்தி பேசினா்.

    கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துபாண்டி, சுகந்தி, ராதா, இந்துமதி, ராம்குமார், மேரி அந்தோணிராஜ், பேபி ரெசவுபாத்திமா, இசக்கயம்மாள் மணிகண்டன், முருகையா, சரவண கார்த்திகை ஆகியோர் கலந்து கொண்ட னா்.

    • இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.
    • காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், நகர துணைத்தலைவர்கள் காதர் அலி, கோதரிவாவா, மாரியப்பன், நகர செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

    நகர இலக்கிய அணி தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் தேசியக் கொடியை கையில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா கோஷங்கள் எழுப்பபட்டது. முன்னதாக காந்தி உருவச்சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

    • செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தைப்பூசத்தின் 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று காலை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து இரவில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும். இதில் செங்கோட்டையை சுற்றியுள்ள 20 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து செல்வது வழக்கம். இறுதி நிகழ்ச்சியான தைப்பூசத்திற்கு செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இதற்கான சிறப்பு பூஜைகளை கணேச பட்டர், ராஜா பட்டர் செய்து வருகின்றனர். 10 நாள் நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது.
    • பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து தலைமைதாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலா் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார்.

    பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம், கல்வி கற்க வயது ஒரு தடையில்லை போன்ற விழி்ப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனா். பேரணி கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து ெதாடங்கி எஸ்.ஆர்.கே. தெரு. கரையாளா் தெரு, காமாட்சி தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

    பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கனகலட்சுமி, தயாளன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் சார்லஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியா் பீட்டர்ஜூடுதத்யேஸ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் நன்றி கூறினார்.


    • பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
    • பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.

    புதிய பால பணி

    கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு பாலமாக அமைந்துள்ள இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு கோரிக்கை வலுத்தது.


    இதையடுத்து அந்த பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினமும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பிரானூர் பார்டர் வழியாக செல்லும் வாகனங்கள், கனரக லாரிகள், அய்யப்ப பக்தர்களின் கார்கள் அனைத்தும் ெசங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி, கணக்கப்பிள்ளை வலசை, தேன்பொத்தை, பண்பொழி, குத்துக்கல்வலசை வழியாக வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் பிரானூர் பார்டர் பாலம் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இன்று முதல் போக்குவரத்து சீராக நடைபெற்றது.

    • தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மண்டல மகோற்சவ திருவிழாவின் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. மூங்கில் கம்புகளை வைத்து பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    முன்னதாக சுவாமி அய்யப்பனின் தங்கவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் என்று அழைக்கப்படும் கருப்பசாமி ஆட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரள மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


    • மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்தும், மாணவிகள் தேவ தூதர்கள் போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். இசை இசைத்து பாட்டு பாடி கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவ-மாணவிகள் கேரல் ரவுண்ட் சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.

    பள்ளியில் இயேசு பிறந்தது போன்ற குடில் அமைக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தலைமை தாங்கினர்.

    ×