search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "achankovil"

    • தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மண்டல மகோற்சவ திருவிழாவின் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. மூங்கில் கம்புகளை வைத்து பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    முன்னதாக சுவாமி அய்யப்பனின் தங்கவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் என்று அழைக்கப்படும் கருப்பசாமி ஆட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரள மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


    • அச்சன்கோவில் தர்மசாஸ்தாகோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    • இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அய்யப்பன் அரசராக இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் இரு மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா செண்டை மேளம் முழங்க வானவேடிக்கையுடன் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. இதில் தமிழகம், கேரள மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து இன்று முதல் 4 நாட்கள் திருவிழாக்களில் உற்சவபலி பூஜை, 7,8-ம் திருநாள் விழாக்களில் கருப்பன் துள்ளல், 9-ம் திருவிழா அன்று தேரோட்டம், 10-ம் திருவிழா நாளன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா மற்றும் 27-ந் தேதி அன்று மண்டல பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியுடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது.
    • 1-ம் நாளான திருவிழாவான 17-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    செங்கோட்டை:

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது. நாளை 16-ந்தேதி திருஆபரணபெட்டி ஊர்வலம் நடக்கிறது. 1-ம் நாளான திருவிழாவான 17-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 2,3,4,5 ம் நாள் திருவிழாக்களில் உற்சவபலி பூஜை. 7,8-ம் நாள் திருவிழாக்களில் கருப்பன் துள்ளல்.

    9-ம் திருவிழா அன்று தேரோட்டம். 10 ம் திருவிழா அன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது. 27-ந்தேதி மண்டல பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உற்ஷவபலி பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். காலை 10 மணிக்கு விளக்கு வைத்தல் எனும் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேல்சாந்தி ஸ்ரீகோவிலில் இருந்து உற்ஷவ மூர்த்தி விக்ரகத்தை விளக்குடன் வெளியே எடுத்து வந்து உள்பிரகாரத்தில் அதற்கன அமைக்கபட்ட சப்பரத்தில் சுவாமியை எழுந்தருள செய்வார்கள்.

    பின்னர் மரபாணி கொட்டி அனைத்து உப தெய்வங்களையும் அழைத்து சுவாமி முன்னிலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பலி எனும் நைவேத்தியம் படைக்கபடும். இதே போல் வெளிபிரகாரத்தில் உள்ள உப தெய்வங்களுக்கு இதே போல் படைக்கபடும். தொடர்ந்து 16 சுற்றுக்கள் வெளிபிரகாரத்தில் சுற்றி வந்து படைக்கபட்டு கடைசியாக உற்ஷவபலி பூஜையை நிறைவு செய்து ஸ்ரீகோவில் நடை திறந்து சுவாமியை உள்ளே வைத்து நிறைவு செய்வார்கள்.

    இந்த பூஜை மிகவும் விஷேசமான பூஜை ஆகும். இந்த பூஜை சபரிமலையிலும் அச்சன்கோவிலிலும் தான் நடைபெறுகிறது. இந்த பூஜையை செய்வதும், கலந்து கொள்வதும், பார்ப்பதும் மிகவும் சிறப்பானது என கருதப்படுகிறது.

    ஏனென்றால் ஒரே பூஜையில் அய்யப்பன் உட்பட அனைத்து தெய்வங்களையும் அழைத்து நைவேத்தியம் படைத்து சிறப்பு பூஜை செய்வதால் எல்லா தெய்வங்களுக்கும் எல்லாம் படைத்து எல்லா பூஜைகளும் செய்ததாக ஐதீகம்.

    அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான மண்டல மஹோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 9.15 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றினார்கள்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நாராயண பாராயணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பினு, ஆபரண பெட்டி வரவேற்புக் குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    அச்சன்கோவில் ஆபரண பெட்டி நாளை தென்காசி வருகிறது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் ஐயப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

    இந்த ஆபரண பெட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்படுகிறது. அந்த பெட்டி தென்காசி வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்படும். அன்று மதியம் 2 மணிக்கு தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

    ஆபரண பெட்டி வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன், செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பாராஜ், ஆலோசகர் மாரிமுத்து உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
    ×