search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    கூட்டத்தில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

    செங்கோட்டை அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

    • ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செங்கோட்டை பிரானூர் பார்டரில் நடந்தது.
    • மேற்கு ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை பிரானுார் பார்டரில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மற்றும் தென்காசி மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. வடக்குமாவட்ட செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவா் மூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளா் சண்முகப்பிரியா, துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் முருகையா, தங்கம்பிச்சை, காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச்செயலாளா் சுப்பிரமணியன் தொகுப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிரணி துணைச்செயலாளா் முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி, தலைமை கழக பேச்சாளா்கள் பழனிக்குமார், கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினா்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் கண்ணன், விவசாய பிரிவு செயலாளா், மருத்துவா் அணி செயலாளா் மற்றும் ஒன்றியக் செயலாளா்கள், நகரக் செயலாளா்கள், பேரூர் செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கிளைச்செயலாளா் மாடசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×