என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New India Literacy Programme"
- கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது.
- பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து தலைமைதாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலா் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார்.
பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம், கல்வி கற்க வயது ஒரு தடையில்லை போன்ற விழி்ப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனா். பேரணி கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து ெதாடங்கி எஸ்.ஆர்.கே. தெரு. கரையாளா் தெரு, காமாட்சி தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கனகலட்சுமி, தயாளன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் சார்லஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியா் பீட்டர்ஜூடுதத்யேஸ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் நன்றி கூறினார்.
- தென்காசி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட கற்போர் கண்டறியப்பட்டு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.
- மாவட்டத்தில் 9,476 பேர் கண்டறியப்பட்டு அதில் 491 கற்போர் மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் ஏராளமான, முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட கற்போர் கண்டறியப்பட்டு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 9,476 கற்போர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள னர். அவர்கள் 491 கற்போர் மையங்களில் சேர்க்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் தங்கள் பெயரை தாங்களே எழுதவும், அடிப்படை சொற்களை வாசிக்கவும் மற்றும் வாழ்க்கை கணக்குகள் செய்யவும் கற்று வருகின்றனர். அதன் அடிப்படையில் செங்கோட்டை வட்டார வள மையத்தை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி அனந்த புரத்தில் கற்போர் மையம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகலட்சுமி, மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, தொடங்கி வைத்து கற்போருக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கினர். தன்னார்வலர் முத்துமாரி கற்போருக்கு அடிப்படைக் கல்வி வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்