search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில்  புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி
    X

    பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள்.


    செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி

    • கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது.
    • பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து தலைமைதாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலா் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார்.

    பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம், கல்வி கற்க வயது ஒரு தடையில்லை போன்ற விழி்ப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனா். பேரணி கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து ெதாடங்கி எஸ்.ஆர்.கே. தெரு. கரையாளா் தெரு, காமாட்சி தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

    பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கனகலட்சுமி, தயாளன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் சார்லஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியா் பீட்டர்ஜூடுதத்யேஸ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் நன்றி கூறினார்.


    Next Story
    ×