search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினா் சேர்க்கை விண்ணப்ப படிவம்
    X

    புதிய உறுப்பினா்கள் சேர்க்கை படிவத்தினை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    செங்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினா் சேர்க்கை விண்ணப்ப படிவம்

    • நிகழ்ச்சிக்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா். மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த் வரவேற்று பேசினார்.

    அதனை தொடா்ந்து நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வழங்கி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நேரடியாக மக்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய அடையாள சான்று பெற்று உறுப்பினர் ஆக்க சேர்க்க வேண்டும், இரட்டை பதிவு இல்லாமல் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் அதிகளவில் புதிய உறுப்பினா்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    Next Story
    ×