என் மலர்

    நீங்கள் தேடியது "train"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
    • ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி உயிரிழந்தார்.

    சீர்காழி:

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

    அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சீர்காழி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு செய்தனர். அங்கு வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் திருநெல்வேலி மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 21) என்பதும் , சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு பெயிண்டிங் வேலைக்கு ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி ஆற்றினுள் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818)
    • பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும்.

    திருப்பூர்,செப்.25-

    பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818) நேரம் வருகிற ஜனவரி மாதம் 1 -ந் தேதி முதல் மாற்றப்படுகிறது.பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும். கஞ்சிக்கோடு, வாளையார், எட்டிமடை, மதுக்கரை, போத்தனூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும். கோவைக்கு மாலை 4:17மணிக்கு வந்த ெரயில், ஜனவரி 1-ந்தேதி முதல் 20 நிமிடம் தாமதமாக, மாலை 4:37 மணிக்கு வரும். கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் நிலையங்களுக்கு 10 முதல் 25 நிமிடம் வரை தாமதமாக வரும்.

    திருப்பூருக்கு மாலை 5:30மணிக்கு பதிலாக மாலை 5:48 மணிக்கு வரும். இரவு 7:10மணிக்கு ஈரோடு சென்றடைந்த ெரயில் 7:25 மணிக்கு சென்று சேரும். கோவை - நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) வருகிற ஜனவரி மாதம் 7-ந்தேதி முதல் மாலை 4:15 மணிக்கு பதில் மாலை 4:25மணிக்கு புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கு 5 முதல் 10 நிமிடம் தாமதமாக செல்லும்.

    தினமும் திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் (எண்:17299, 17230) இரு மார்க்கத்திலும், திருச்சூர் - சொர்ணூர் இடையே உள்ள வடக்கஞ்சேரி நிலையத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் நின்று செல்ல ெரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் முக்கிய தகவல்
    • கிணத்துக்கடவில் நிறுத்தம் வேண்டும் என போராடிய ரெயில் பயணிகள் கோரிக்கை நிறைவேறியது

    பொள்ளாச்சி,

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே பொள்ளாச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    செப்டம்பர் 25-ந் தேதி வரை ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் புறப்ப டும் ரெயில், திங்கள்கிழமை காலை மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் திங்கள்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து புறப்ப டும் ரெயில் செவ்வாய்கிழமை காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றட யும்.

    வழியில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கிளக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    திருநெல்வேலியில் புறப்படும் ரெயில், பொள்ளாச்சிக்கு காலை 4.45 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 5.09 மணிக்கும் வரும். மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரெயில் கிணத்துகடவுக்கு இரவு 9.17 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.03 மணிக்கும் வந்தடையும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு, இந்த ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.

    கிணத்துக்கடவில் நிறுத்தம் செய்ய வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது கிணத்துக்கடவில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது.
    • ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது

    திருப்பூர்,செப்.20-

    செகந்திராபாத் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது. இதனால் அவ்வழியாக பயணிக்கும் ெரயில்கள் வழித்தடம், இயக்கம், நின்று செல்லும் நிலையங்கள் குறைக்க ப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர ெரயில் (எண்: 22815) மஜ்ரி ஜங்ஷன் - பெட்டபல்லி ஜங்ஷன் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். வழக்கமான வழித்தடமான சந்திராபூர், பால்ஹர்ஷஹ் ஜங்ஷன், சிர்பூர் காகஸ்நகர் நிலையங்களுக்கு செல்லாது.

    இதே நாளில் கொச்சுவேலி - கோர்பா (எண்:22648) ரெயில், அட்டவணையில் உள்ள வழித்தடமான கம்மம், வாரங்கல், ராமகுண்டம், பெலம்பல்லி, டுர்க் ஜங்ஷன் வரை 10 நிலையங்களுக்கு செல்லாது. விஜயவாடா - பிலாஸ்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    நாளை 21, 22 மற்றும் 24-ந்தேதி, கோரக்பூர் - கொச்சுவேலி ெரயில் (எண்:12511) இன்று 20 மற்றும் 23ந்தேதி கோர்பா - கொச்சுவேலி ெரயில் (எண்: 22647), 21ந்தேதி, கொச்சுவேலி - கோர்பா (எண்:22648), 22ந் தேதி எர்ணாகுளம் - பரூனி (எண்:12522), இதே நாளில் கோவையில் இருந்து புறப்படும் ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:12969) ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது என தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    பண்டிகை கால பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மன்னார்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட 4 ெரயில்களில் கூடுதலாக படுக்கை வசதி பெட்டி சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து தினமும் நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் (எண்: 16616) திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக சென்று காலை 7:40 மணிக்கு மன்னார்குடி செல்கிறது. மறுமார்க்கமாக இரவு 8:25 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு கோவை வந்து சேருகிறது.

    கோவையில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக தினமும் இரவு 7:35 மணிக்கு நாகர்கோவிலுக்கு ெரயில் (எண்: 22668) இயக்கப்படுகிறது. இந்த ெரயில், மறுமார்க்கமாக புறப்படும் ெரயில் ஆகிய 4 ெரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது

    இவற்றுடன், கன்னியாகுமரி - புனே (எண்: 16382), சென்னையில் இருந்து கரூர், சேலம் வழியாக போடிக்கு இயக்கப்படும் சிறப்பு ெரயிலில் (எண்: 20601) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுவதாக தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அப்போது 2-வது பிளாட்பாரத்தில் பெங்களூர்-அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.பீ.எம். சர்ச் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் போதையில் அங்கு வந்தார். அவர் 2-வது பிளாட்பார தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயிலை நிறுத்தப் போவதாக ரகளையில் ஈடுபட்டார். அதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    ரெயில் வருவதை கண்டதும் போதை வாலிபர், தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை நோக்கி ஓடினார். அப்போது அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் திடீரென கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் தட்டு தடுமாறினார்.

    இதனைப் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை நிறுத்த முயற்சி செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் முன்பக்கம் போதை வாலிபர் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று நின்றது.

    ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அந்த நபர் இறந்துவிட்டதாக கருதி அருகில் சென்று பார்த்தனர்.

    ஆனால் போதை வாலிபர் உடலில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. போதையில் வாலிபர் ரெயிலை நிறுத்த முயற்சி செய்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது.
    • .இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணி நடப்பதால் வருகிற 23-ந்தேதி கொச்சுவேலி - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 16319) மறுமார்க்கமாக 24-ந்தேதி பெங்களூரு - கொச்சுவேலி ெரயில் (எண்:16320) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    இதே போல் எர்ணாகுளம் - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 12683) 24-ந்தேதியும், பெங்களூரு - எர்ணாகுளம் ெரயில் (எண்: 12684) மறுநாளும் ( 25-ந் தேதி) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
    • வணிகர்களுக்கு உரிய இழப்பீடு, ஓய்வூதியம் வழங்கவும் தீர்மனம்

    கோவை,

    கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஆர்.எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், பாரூக், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரஹிமான் வரவேற்றார்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும்,

    இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல பொருட்களுக்கு உரிமம் வழங்குவதில் இரட்டை முறையை மாற்றி அமைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைக்க வலியுறுத்துவது, தியாகி குமரன் மார்க்கெட் நுழைவு வாயில் வளைவு பெயர் பலகை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
    • மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.

    அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த பிலாஸ்பூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டியில் சேலம் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதில் மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பைகளை கொண்டு வந்த சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சிவா (50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டது.
    • இந்த ரெயில் அனைத்து ரெயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

    இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவே ற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் இன்ஜின் முன்புறம் மாலை அணி வித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

    முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.

    பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.

    இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது.

    பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பி டத்தக்கதாகும்.

    சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரெயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print