என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ரெயிலுக்கு வரவேற்பு
Byமாலை மலர்27 May 2022 8:50 AM GMT (Updated: 27 May 2022 8:50 AM GMT)
உசிலம்பட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ரெயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு மதுரையில் இருந்து தேனி வரை ரெயில் பாரத பிரதமர் மோடி அவர்கள் சென்னையில் நேற்று இரவு தொடங்கிவைத்தார்.
மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு வந்த ரயிலை பி. அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க கட்சியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றிவிட்டு அகல ரெயில் பாதையாகும் மாற்ற நிதி ஒதுக்கி அதற்குண்டான வேலைகளை முடித்து பலமுறை சோதனை ஓட்டம் முடிந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்னையி லிருந்து காணொளி காட்சி வாயிலாக மதுரையில் இருந்து தேனி வரை ரயிலை இயக்க கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுரையில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த ரெயிலை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளங்களுடன் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பூமா ராஜா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம். வி. பி. ராஜா மாநில அம்மா பேரவை இணைச் செயலா ளர் துரைத்தன ராஜன் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் வந்த ெரயிலில் ஏறி தேனி வரை பயணம் செய்தார்.
இதில் மதுரையிலிருந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மதுரையி லிருந்து உசிலம்பட்டி வரை பயணம் செய்து உசிலம்பட்டி பா.ஜ.க நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் சொக்கநாதன் மாவட்ட செயலாளர் மொக்கராஜ் நகரச் செயலாளர் முத்தையா ஒன்றிய செய லாளர் கருப்பையா பாஜக நிர்வாகிகள் பாண்டி யராஜன், தீபன் முத்தையா, நாகராஜ் மகளிரணி இன்பராணிஉற்சாகமாக வரவேற்றனர்.இந்தகழ்ச்சியில் பெரும் திரளாக பொதுமக்கள் கூடி ஆரவாரமாக ரெயில்வே வரவேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X