என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனக்கூறி உறுப்பினா்கள் வாக்குவாதம்
- இதுவரை எனது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை என தி.மு.க. உறுப்பினா் ரஹீம் கூறினார்.
- அடுத்த கூட்டத்தினை நாங்கள் புறக்கணிக்க இருக்கிறோம் என்று அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பொறுப்பு ஜெயப்பிரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
நகர்மன்ற தலைவா் ராலெட்சுமி பேசும்போது, நாம் அனைவரும் பதவியேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரையில் எனக்கு நீங்கள் அளித்துள்ள ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
விருப்பு, வெறுப்பு இன்றி நமது நகரின் நலனுக்காகவும், முன்னேற்றதிற்காகவும் அனைவரும் ஒன்றாக இணைந்து பணி செய்ய வேண்டும் என பேசினார்.
தி.மு.க. உறுப்பினா் ரஹீம் பேசும்போது, இதுவரையில் எனது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூறமுடியாமல் இருந்து வருகிறோம். தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டிக்கிறோம். அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பேசினார்.
இதனையடுத்து அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசும்போது, ஓராண்டு நிறைவு பெற்ற பின்னும் இன்னும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, கழிவு நீர் ஓடை, சீரான குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை.
எனவே அடுத்து நடக்க இருக்கிற கூட்டத்தினை நாங்கள் புறக்கணிக்க இருக்கிறோம் என பேசினார்.
இதேபோல் நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, சுடர்ஒளி, வேம்புராஜ், செண்பகராஜன், இசக்கித்துரை பாண்டியன் மற்றும் ஏனைய உறுப்பி னா்கள் இதே கருத்தை வலியுறித்தி பேசினா்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துபாண்டி, சுகந்தி, ராதா, இந்துமதி, ராம்குமார், மேரி அந்தோணிராஜ், பேபி ரெசவுபாத்திமா, இசக்கயம்மாள் மணிகண்டன், முருகையா, சரவண கார்த்திகை ஆகியோர் கலந்து கொண்ட னா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்