search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "river"

    • கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையை பாதிக்க ப்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு போர்வை, பிஸ்கட் மற்றும் வயதானவர்களுக்கு வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வழங்கினார்.

    அப்போது கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், நகர செயலாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், நிர்வாகிகள் சிவ.மனோகரன், நாகரத்தினம், சொக்கலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மதுரை அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை வசந்த நகர் பகுதியில் மெயின் ரோட்டில் குழாய் உடைந்ததால் அந்த பகுதியில் ஆறு போல குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் பிரதான குழாய் வசந்த நகர் வழியாக செல்கிறது அந்த குழாயில் இன்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டதால் மெயின் ரோட்டில் குடிநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது.இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குழாய் உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த தண்ணீர் வசந்த நகர் மெயின் ரோட்டில் இருந்து பழங்காநத்தம் சந்திப்பு வரை குளம் போல தேங்கியது இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டவுடன் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரும்பள்ளம் ஓடையில் ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு நெசவாளர் காலனி அருகே பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த ஆண் பிணம் அழுகி போய் இருந்தது.

    அவர் பச்சை கருப்பு புளு கலர் கட்டம் போட்ட முழு கை சட்டை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் ஆஞ்சநேயர் படம் வைத்த டாலர் இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ன தெரியவில்லை.

    ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றின்கரையோர பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
    • கரையில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதற்கு சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பாபநாசம்:

    கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியே ற்றப்படும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி அரசலாற்றின் கரையோரம் உள்ளகிராம ங்களுக்கு வருவாய், பொது ப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றின்கரை யோர பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் நீரோட்டத்தில் வலுவிளக்கும் ஆற்றின் கரைபகுதிகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன. மேலும், கரையில் உடைப்பு ஏற்பட்டா ல் சரி செய்வதற்கு சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை அப்பகுதியினர் கண்டு ரசித்து வருகின்றனர். காவிரி ஆற்றின் கரைகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது.
    • கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை.

    பூதலூர்:

    தஞ்சை வளநாட்டை வளமாக தொடர்ந்து வைத்திருக்கும் காவிரித்தாய் இந்த ஆண்டு பெருகி வந்து கொண்டிருக்கிறாள். கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பெருகி வந்து மேட்டூர் அணையை நிரப்பிக் கொண்டுள்ளது.

    இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 ஆயிரத்து 642 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 113.96 அடியாக உயர்ந்து உள்ளது.தொடர்ந்து நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு இன்று காலை நிலவரப்படி 18,024 கன அடியாக திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 510 கனஅடியும், வெண்ணாற்றில் அதிகபட்ச அளவாக 8104 கன அடியும், கல்லணை கால்வாயில் நடப்பு ஆண்டில் இன்றைய தினத்தில் 2,219 கன அடியும், கொள்ளிடத்தில் 1,207 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    காவிரி பாசன பகுதிகளில் உள்ள கடைமடை பகுதிகளில் இன்னமும் தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லணையிலிருந்து 6 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மற்றும் வெண்ணாற்றில் மாறி மாறி தண்ணீர் திறந்து விடப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கால்வாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு முறைப்பாசன ஏற்பாடு உகந்ததாக இல்லை. முழு அளவில் நடவு முடியும் வரை அதிகளவில் தண்ணீர் விட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஒரு பக்கம் தண்ணீர் பெருகி வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வறட்சியான நிலை எதார்த்தமான ஒன்று. கல்லணையின் தலைப்பு பகுதியாக உள்ள பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் தண்ணீர் பெற்று ஏரிகளை நிரப்பி அதன் மூலம் 10,000 ஏக்கர் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, பரிசோதனை அடிப்படையில் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டு இருபோக சாகுபடி செய்ய வழிவகை செய்யப்படுமா ? என்று மாலை மலரில் செய்தி வெளியாகி இருந்தது.

    அதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மற்றவர்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இன்னமும் காலம் கடத்தாமல் பூதலூர் ஒன்றியத்தின் செங்கிப்பட்டி பகுதி பாசனத்திற்கு உடனடியாக புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் களில்தண்ணீர் திறந்து ஏரிகளை நிரப்பி, ஒட்டுமொத்தமாக நாற்றங்கால் அமைத்து இந்த பகுதியில் இரு போக சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேளாண் துறையும், நீர்வள ஆதார துறையும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயத் துறை முன்னோடி்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஆறு, கண்மாய், நீர்-நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிக்கை எழுந்துள்ளது.
    • லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பாண்டி தலைமையில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் வீரையா, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் பாண்டி, சிங்கம்புணரி ஒன்றிய அமைப்பாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் ஸ்டாலின், ஸ்தாபன செயலாளர் லீலாவதி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ரங்கையா ஆகியோர் பேசினர். திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் ஆறு, கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் காளைலிங்கம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்துசாமி, திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    • பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது

    ஊட்டி:

    பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

    இதனால் பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலை, பந்தலூர்-கூடலூர் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் குழிகளில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பொன்னானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அருகே உள்ள ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேளாண்மை பொறியியல் துறை சார்பில், பொக்லைன் எந்திரம் மூலம் பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் நேற்று முன்தினம் பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அப்போது தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது. இதையடுத்து மற்றொரு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கரையோர மண் அகற்றப்பட்டது. பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு எந்திரம் மீட்கப்பட்டது.

    இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளிலும், பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்காமலும் அவதியடைந்தனர். பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்ட தீணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை தாமிரபரணி ஆற்றில் சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது

    நெல்லை:

    தாமிரபரணி நதியை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    பாபநாசத்தில் தொடங்கி மருதூர் அணை கட்டு வரை நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு நதி தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 58 இடங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த தூய்மை பணியின் ஒரு பகுதியாக அருகன்குளம் காட்டு ராமர் கோவில் பகுதியில் இருந்து நாரணம்மாள்புரம் ஜடாயுதீர்த்தம் வரை நேற்று தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

    நெல்லை நீர்வளத்தின் கீழ் உழவார பணிக்குழுவினரால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நதியில் முட்புதர்களை அகற்றும் பணியை இன்று நாரணம்மாள்புரம் 4 வழிச்சாலை அருகே கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தூய்மை பணி, படித்துறை களை சீரமைக்கும் பணி உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் 58 இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. நெல்லை நீர்வளம் திட்டம் மூலமாக கடந்த சில மாதங்களாக இந்த பணியானது நடைபெற்று வருகிறது.

    தாமிரபரணி நதியை முழுமையாக தூய்மை படுத்துவதுதான் இதன் நோக்கம்.

    குளிக்கும் தரத்தில் உள்ள இந்த நீரை குடிக்கும் தரத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது ரசாயனம், சோப்பு, மக்காத பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

    இதற்கான நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும். ஏற்கனவே நீர்நிலைகளில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களை சுத்தம் செய்வதற்கு தடை சட்டம் உள்ளது.

    அதன்படி விரைவில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மூலமாக தாமிரபரணி நதியில் வாகனங்களை சுத்தம் செய்பவர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மழை இல்லாததால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்தது. வழக்கமாக மே முதல் வாரத்தில் இருந்தே மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும்.

    ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துகொண்டே சென்றது. இருந்தபோதும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 100 கன அடி வரை திறக்கப்பட்டு வைகை அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த தண்ணீரே தேனி, மதுரை மாவட்ட மக்களின் தற்போது கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 152 அடியில் கடந்த ஆண்டு இதே நாளில் 113.40 அடியாக இருந்தது. அணைக்கு 83 கன அடி தண்ணீர் வந்தது. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 1459 மி.கன அடி நீர் இருப்பு இருந்தது.

    ஆனால் இன்று அணையின் நீர்மட்டம் 112.15 அடியாக உள்ளது. வரத்து 7 கன அடியாகவும், திறப்பு 100 கன அடியாகவும், இருப்பு 1255 மி. கன அடியாகவும் உள்ளது.

    இதேபோல் 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 37.30 அடி நீர் இருந்தது. வரத்து 118 கன அடியாகவும், திறப்பு 60 கன அடியாவும் இருப்பு 750 மி. கன அடியாகவும் இருந்தது. இன்று வைகை அணையின் நீர்மட்டம் 36.44 அடியாக உள்ளது. நீர்வரத்து முற்றிலும் இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 693 மி. கன அடியாக உள்ளது.

    வழக்கமாக மழை தொடங்கும் காலம் தாமதமாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது.

    இதற்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் குடிநீருக்கே பற்றாக்குறையாக இருப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

    தருமபுரி அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    தருமபுரி மாவட்டம் கெத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) டிரைவர். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் குளிப்பதற்கு இவரது நண்பர் துரைசாமி என்பவரும் வந்துள்ளனர். பண்ணந்தூர் செல்லும் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகே ஆற்றில் இருவரும் குளித்து விட்டு கரைமீது வந்துள்ளனர். தண்ணீர் தாகம் அதிகமாக உள்ளது என்று சிவக்குமாரை அங்கேயை இருக்க சொல்லவிட்டு துரைசாமி மட்டும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பார்த்து போது சிவக்குமார் அந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் இரவு முழுவதும் சிவக்குமாரை தேடி இல்லாததால் இது குறித்து பாரூர் போலிஸில் புகார் கொடுத்தார்கள்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தென் ஆற்றில் முழுவதும் தேடியதில் இன்று காலை ஆற்றின் ஓரத்தில் சிவக்குமார் தண்ணீரில் பிணமாக மிதப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் போலிசார் அனுப்பி வைத்தார்.
    ×