search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "river"

    • கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க சென்றார்.
    • தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர்.

    பூதலூர்:

    கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் ஓரளவுக்கு ஓடிக் கொண்டுள்ளது. நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கல்லணைக்கு வந்து பார்வையிட்டனர்.

    கல்லணையில் உள்ள மற்ற ஆறுகளில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் சிறுவர் முதல் பெரியவர் வரை இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

    திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 33 ) தனியார் நிறுவன தொழிலாளி. இவர் தனது நண்பர் சிவக்குமார் உடன் கல்லணையை சுற்றி பார்க்க வந்தார். சுற்றிப் பார்த்தவர் சிவகுமாரை மணலில் உட்கார வைத்துவிட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினார். ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கினார். இது குறித்து சிவக்குமார் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறை அலுவலர் சகாயராஜ் ,போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடி உயிரற்ற நிலையில் கார்த்தி என்கிற பாலகிருஷ்ணன் உடலை மீட்டனர். இதுகுறித்து தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பரமக்குடியில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இறங்கினார்.
    • டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ெதாடங்கியது. தினமும் யாக சாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. நள்ளிரவு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் கட்டி ஈட்டி, கத்தி, வளரி, வாள் ஏந்தி கள்ளழகர் கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இதனால் மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்வதுடன், விவசாயம் செழித்து நல்ல வளர்ச்சி காண்பார்கள், அர்ச்சகர் சத்யா பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

    தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து தல்லாகுளம் மண்டபத்தை அடைந்தார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், பொருளாளர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
    • ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனை தடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நகரின் மையமாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் ஓடம் போக்குவரத்து இருந்ததால் இதனை ஓடம்போக்கி ஆறு என்று அழைத்ததாக கூறுகின்றனர்.

    இந்த ஆற்றின் மூலம் திருவாரூர் நகரம், விளமல், வன்மீகபுரம், தியானபுரம், சாப்பாவூர், கடாரம்கொண்டான், அலிவலம், கீவளூர் ஆகிய இடங்களில் பாசன வசதிகளும் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து இருப்பது நீரின் போக்கை மாற்றுகிறது.

    மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் இந்த ஆற்றின் தண்ணீர் தெளிவற்ற நிலையில் கருமை நிறமாக காட்சியளிக்கிறது.

    மேலும் இந்த ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.

    இதனால் நீரின் தூய்மை மாறுவதோடு, ஆற்று நீரின் போக்கும் மாறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே இந்த ஆற்றில் தெளிந்த நீரோட்டம் இருக்கும் வகையில் செய்திட வேண்டும்.

    அதற்கேற்ற வகையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

    ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனையும் தடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் ஆற்றில் தெளிவான நீரோட்டத்தை ஏற்படுத்தி நகரின் அழகை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • புதிய ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ரிவர், இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. ரிவர் இண்டீ என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரிவர் இண்டீ விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரிவர் இண்டீ வினியோகம் ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய ரிவர் இண்டீ மாடலில் பிரமாண்ட முன்புறம், சதுரங்க வடிவ டூயல் எல்இடி ஹெட்லேம்ப், முன்புறம் வளைந்த அப்ரன் உள்ளது.

     

    பக்கவாட்டில் பாக்சி ரியர் பதுகியில் செவ்வக வடிவம் கொண்ட டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் கிராஷ் கார்டுகள் ஸ்கூட்டரின் பாடி பேனலில் இண்டகிரேட் செய்யப்படுகிறது. இத்துடன் பேனியர் ஸ்டே, க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது. ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 12 லிட்டர் முன்புற குளோவ் பாக்ஸ், 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டிஜிட்டல் கலர் டிஸ்ப்ளே, இரண்டு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ரிவர் இண்டீ எலெ்க்ட்ரிக் ஸ்கூட்டர் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 6.7 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 120 கிலோமீட்டர் ரேன்ஜ், அதிகபட்சம் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    முதற்கட்டமாக ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பெங்களூருவில் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் முன்பதிவு ரிவர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெற்று வருகிறது.

    • 6-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்.
    • திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 6-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்கள் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது அணைக்கரையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரித்து வருவதால் நேற்று மாலையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான மேலவாடி, பாலுரான் படுகை, கொன்னக்காட்டு படுகை, நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளமணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கிராமங்களை சூழ்ந்து வருவதால் அரசு முகாமிற்கு செல்லும் நிலையில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

    கடல் சீற்றம் காரணமாக கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி சரபங்கா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்–பெருக்கு ஏற்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற பொதுமக்களும் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சங்ககிரியை அடுத்துள்ள அரசிராமணி சரபங்கா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்–பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் 5-க்கும் மேற்பட்ட தரைவழி பாலங்கள் துண்டிக்கப்பட்ட–தோடு தார் சாலையிலும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற பொதுமக்களும் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    • வடரெங்கம் ரெங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
    • இக்கோயிலை 2-வது முறையாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பழமை வாய்ந்த வடரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும்.

    இந்த கோயில் பஞ்சரங்கத்தில் ஒரு ரங்கமாக விளங்கி வருகிறது. கடந்த 1924ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் முழுவதும் மூழ்கியது

    இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் வடரங்கம் பகுதியிலேயே புதிய கோயிலை கட்டி அதில் வடரங்கநாதரை வைத்து தரிசனம் செய்து வந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருகரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதனால் கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 5 முறை ‌‌‌‌ தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இக்கோயிலை 2வது முறையாக தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    • கோட்டை தரைபாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    • செல்பி எடுக்க கோட்டாட்சியர் தடை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமந்துறை, பெத்தநாயக்கன்பாளையம் தும்பல், இடையப்பட்டி, கல்லாறு, ராம நாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் காரணமாக வசிஷ்ட நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆத்தூர் நகர பகுதியில் இருந்து முல்லைவாடி, கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், வடக்கு காடு, தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு செல்லும் பிரதான கோட்டை தரைபாலம் காட்டாற்று வெள்ளத்தில் நேற்று இரவு அடித்துச் செல்லப்பட்டது.இதனால் இந்த பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் விநாயபுரத்தில் உள்ள தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருகில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் செல்லாமல் இருக்க நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸ் மற்றும் நகர மன்ற உறுப்பினர் அங்கு வந்து தண்ணீரை ஊருக்குள் செல்ல விடாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என விநாயகபுரம் தடுப்பணையின் அருகே காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா கூறியதாவது:- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி எடுப்பது, போட்டோ எடுப்பது, நீர்நிலை அருகே நின்று வேடிக்கை பார்ப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் உயிரை பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • தெற்குக்காடு, அரமங்காடு, மருதங்காவெளி உட்பட 19 பகுதிகளிலிருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.
    • மிகவும் பதற்றமான பகுதியாக கருதப்படும் நியூபஜார், கொய்யாமுக்கம், பங்களா வாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று பாமினி ஆற்றில் கரைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும்.

    இந்த விநாயகர் ஊர்வலம் தமிழகத்தில் பிரபல விநாயகர் ஊர்வலங்களில் ஒன்றாகும்.

    இந்தாண்டு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நேற்று 30ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    இதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

    முன்னதாக இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கினைப்பு குழுத் தலைவர் சிவபிரகாஷம், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற கழக துணைத்தலைவர் ராம்பிரபு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிரு ஷ்ணன் ஊர்வல த்தை துவக்கி துவக்கி வைத்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராகளாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில நிர்வாகி ஜீவஜோதி, தென் இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிறுவனர் திருமாறன், பாஜக மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, கல்லடி க்கொல்லை, தெற்குக்காடு, அரமங்காடு, மருதங்காவெளி உட்பட 19பகுதிகளிலிருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.

    ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து மிகவும் பதற்றமான பகுதியாக கருதப்படும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இரவு கரைக்கப்பட்டது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. சந்தோஷ் குமார், திருச்சி டிஐஜி சரவணக்குமார், தஞ்சை டிஐஜி கயல்விழி, திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், தஞ்சை எஸ்பி ரவளி பிரியா, கரூர் எஸ்பி சுந்தரவதனம், திருநெல்வேலி எஸ்பி சீனிவாசன், நாகை எஸ்பி ஜவகர், சென்னை எஸ்பிகள் துரை, ஜெயசந்திரன், அரியலூர் எஸ்பி புரோஸ் அப்துல்லா, புதுக்கோட்டை எஸ்பி வஞ்சிதா பாண்டி, மயிலாடுதுறை எஸ்பி நிஷா உட்பட 10 எஸ்பிகள், 10ஏடிஎஸ்பி, 37டிஎஸ்பிகள், 38 இன்ஸ்பெக்டர்கள், 334 சப்இன்ஸ்பெக்டர்கள், 1464 தமிழ்நாடு காவல்படை போலீசார், 280 பயிற்சி காவலர்கள், 530 சிறப்பு காவலர்கள், 140போக்குவரத்து காவலர்கள், 25 வெடிகுண்டு நிபுணர்கள், 285 ஆயுதப்படை காவலர்கள், நூறு ஊர் காவல்படையினர் உட்பட திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் வந்து உள்ள நீர் சாத்தனூர் அணைக்கட்டை நிரப்பி 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு.
    • அணையில் இருந்து சுமார் 5600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அணையில் இருந்து சுமார் 5600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் கிருஷ்ணகிரி அணையை வந்தடைந்து உள்ளது. இவ்வணை நிரம்பி யதால் சுமார் 2500கன அடி நீர் வெளியேற்றி வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வந்து உள்ள நீர் சாத்தனூர் அணைக்கட்டை நிரப்பி 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு திருக்கோயிலூர், விழுப்புரம் வழியாக நேற்று மாலை புதுவை பராமரிப்பில் உள்ள சொர்ணாவூர் அணைக் கட்டுக்கு சுமார் 1500கன அடிநீர் வந்தடைந்தது.

    தற்பொழுது சொர்ணாவூர் அணைகட்டு நிரம்பி வழிந்து ஆற்றில் இருபுறமும் கரைபுரண்டு 1 மீட்டர் உயரத்திற்கு ஓடுகிறது.

    இந்த நீர் குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டை இன்று மாலை அல்லது இரவு வந்தடையும். சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் பகுதிக்கு மூலமாக பாகூர் ஏரிக்கு நீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து உள்ளனர்.

    அதன் வழியாக சுமார் 50 செமீ. உயரத்திற்கு தண்ணீர் வாய்க்காலில் ஓடுகிறது.

    ஆறு வற்றியிருந்த நிலையில் ஓரே மாதத்தில் 2-வது முறையாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அச்சத்திலும் உள்ளனர்‌. அணைக்கட்டுகளை புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையை பாதிக்க ப்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு போர்வை, பிஸ்கட் மற்றும் வயதானவர்களுக்கு வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வழங்கினார்.

    அப்போது கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், நகர செயலாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், நிர்வாகிகள் சிவ.மனோகரன், நாகரத்தினம், சொக்கலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    கபிஸ்தலம்:

    காவிரி டெல்டா பாசனத்–துக்காக முன்கூட்டியே இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத் தெரு மண்ணியாறு தலைப்பு பகுதிகளிலும், 

    கொட்டையூர் காவிரி ஆற்று பகுதிகளிலும், காவிரி ஆற்றில் இரு புறமும் ஏற்பட்ட அரிப்புகளை தடுக்கும் வண்ணம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும், கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் காவிரி ஆற்றில் நீர் ஒழுகி மற்றும் நடைபாதை அமைக்கும் பணியும் ரூ.30 கோடி செலவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வழக்கத்தைவிட முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் பணிகள் தீவிரமாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர்களிடம் அறிவுறுத்தி இரவு பகலாக பார்வையிட்டு வருகின்றனர். 

    உதவி பொறியாளர் வெங்கடேசனிடம் இதுகுறித்து கேட்டபோது மேட்டுதெரு மண்ணியாறு தலைப்பு பகுதியில் காவிரி இரு பக்கமும் நடைபெற்று வரும் தடுப்புசுவர் பணி நீர் மட்ட அளவு முடிக்கப்பட்டு விடும்.

     இந்த நீர் மட்ட அளவு முடிந்தாலே காவிரியில் தண்ணீர் செல்வதற்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும். மேலும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் எந்தவித பாதிப்புமின்றி செல்லும் என தெரிவித்தார்.


    மேலும் மேட்டு தெரு மண்ணியாறு தலைப்பு பகுதி, கொட்டையூர் பகுதி மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்று வரும் பணிகள் காவிரி தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வருவதற்கு முன்பு இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    ×