search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    X
    தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

    காவிரி ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    கபிஸ்தலம்:

    காவிரி டெல்டா பாசனத்–துக்காக முன்கூட்டியே இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத் தெரு மண்ணியாறு தலைப்பு பகுதிகளிலும், 

    கொட்டையூர் காவிரி ஆற்று பகுதிகளிலும், காவிரி ஆற்றில் இரு புறமும் ஏற்பட்ட அரிப்புகளை தடுக்கும் வண்ணம் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும், கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் காவிரி ஆற்றில் நீர் ஒழுகி மற்றும் நடைபாதை அமைக்கும் பணியும் ரூ.30 கோடி செலவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வழக்கத்தைவிட முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் பணிகள் தீவிரமாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர்களிடம் அறிவுறுத்தி இரவு பகலாக பார்வையிட்டு வருகின்றனர். 

    உதவி பொறியாளர் வெங்கடேசனிடம் இதுகுறித்து கேட்டபோது மேட்டுதெரு மண்ணியாறு தலைப்பு பகுதியில் காவிரி இரு பக்கமும் நடைபெற்று வரும் தடுப்புசுவர் பணி நீர் மட்ட அளவு முடிக்கப்பட்டு விடும்.

     இந்த நீர் மட்ட அளவு முடிந்தாலே காவிரியில் தண்ணீர் செல்வதற்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும். மேலும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் எந்தவித பாதிப்புமின்றி செல்லும் என தெரிவித்தார்.


    மேலும் மேட்டு தெரு மண்ணியாறு தலைப்பு பகுதி, கொட்டையூர் பகுதி மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்று வரும் பணிகள் காவிரி தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வருவதற்கு முன்பு இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×