search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதிஷ்டை"

    • ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உள்ள தூய பவுலின் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்தாண்டின் ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில், பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசைவ அசனவிருந்து நடைபெற்றது.

    இதில் இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த ஆலயத்தில் நடைபெறும் அசன விருந்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் பங்கேற்று ஒற்றுமையாக உணவருந்தி வருவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    • 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை மஹா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், 10.15 மணி முதல் 11.30 மணி வரை புதிய கொடி மரம் நிறுவுதல், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுர கலசங்களுக்கு பாலாலயம் செய்தல், 19-ந் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை கணபதி வழிபாடு, கிராமசாந்தி , அஷ்ட பலி பூஜை, 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விநாயகர் வழிபாடு, புனித தீர்த்த குட புறப்பாடு, முளைப்பாரி ஊர்வலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து நடைபெறும்.

    இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திஷா ஹோமம், காப்பு கட்டுதல், 25-ந் தேதி 9.30 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை 2-ம் கால யாக பூைஜ, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம் , மூலஸ்தான விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர் கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    நிகழ்வில் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

    பேட்டை சிவா, கோட்டூர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி, மடப்புரம், ரொக்க குத்தகை, அண்ணாநகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் விக்னேஷ், மாதவன், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் வினோத், நகர தலைவர் அய்யப்பன், ஒன்றிய தலைவர் பூபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    முடிவில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயபால் நன்றி கூறினார்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு
    • காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டம் முழுவதும் வெகு விமர்சையாக கொண் டாடப்பட்டது. இந்து முன் னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கோவில்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    இந்து முன்னணி சார்பில் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள னர். மற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று இரவு பூஜைகள் நடந்தது.

    இன்று 2-வது நாளாக காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அவல், பொரி, சுண்டல், சர்க்கரை பொங்கல் படைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களில் 2 தன்னார்வலர்கள் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரவு நேரங்களில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படுகிறது.

    சிலைகள் கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். 4 சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை களை எடுத்துச்செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது. அனுமதித்த வழித் தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளது.

    விநாயகர் சிலை கரைப் பதற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள் ளனர். மின்விளக்கு வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் அங்கு செய்யப்பட்டு வருகிறது.

    • விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
    • பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர். மேலும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட பூஜை பொருட்கள், பழ வகைகள், அவல்,பொறி, எருக்கம் பூ மாலை அருகம்புல் மாலை போன்றவற்றை ஆர்வமாக வாங்கி சென்றனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு சென்று அபிஷேகம் செய்து மற்றும் தீபாராதனை காண்பித்து கொழுக்கட்டை, நாவல் பழம் போன்றவற்றை படைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கோரினர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினார்.அதன்படி, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த பல்வேறு பதிகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மேலும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடும் இடங்களில் விழா குழுவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியுடன் 3 அல்லது 5-ம் நாள் விநாயகர் சிலையை அரசு அனுமதி வழங்கிய இடத்தில் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • விநாயகர் சிலைகள் 22, 23, 24-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டா டப்படுகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளிலும், பொது இடங்களிலும் கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்படு கிறது.

    நாளை (18-ந்தேதி) காலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சிலை களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு காலை, மாலை இரு வேலைகளிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொ லிக்கிறது. விநாயகர் கோவில்களிலும் சிலை களை பிரதிஷ்டை செய்வ தற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித் துள்ளது. சிலைகளை ஏற்க னவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். உரிய அனுமதி பெற்று சிலைகளை பதிவு செய்ய வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன் படுத்தக்கூடாது. ஓலையால் வேயப்பட்ட கூரையில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூ டாது. பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலைகள் அருகே 2 தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் கண் காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக் குட்பட்ட பகுதிகளில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 22, 23, 24-ந்தேதி ஊர்வல மாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. சிலை களை கரைப்பதற்கு 10 இடங்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    சொத்தவிளை கடற் கரை, கன்னியாகுமரி கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குதுறை கடற்கரை, பள்ளி கொண்டான் அணை கட்டு, வெட்டுமடை கடற் கரை, மிடாலம் கடற்கரை, தேங்காய்பட்டணம் கடற் கரை, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • 3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
    • இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. மயில்வாகன விநாயகர், சிவசக்தி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குபேர விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகர பகுதியில் 1,000 விநாயகர் சிலைகளும், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் வருகிற 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்தார்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை 18-ந் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    19-ந் தேதி பொங்கலூர், குண்டடம், காங்கயம், ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. வருகிற 20-ந் தேதி அவினாசி, உடுமலை, பல்லடம், செஞ்சேரிமலை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. 21-ந் தேதி திருப்பூரில் புதிய பஸ் நிலையம், செல்லம் நகர் பிரிவு, தாராபுரம் ரோடு ஆகிய 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி ஆலாங்காட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சிவலிங்கேஸ்வர சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள்.

    அதன்பிறகு விசர்ஜனம் செய்ய சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    • சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    • ஊர்வலமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மாவட்ட விநாயகர் கமிட்டி தலைவருமான சரண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் , சீர்காழி, மங்கை மடம், பூம்புகார், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய இடங்களில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு மறுநாள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மறுநாள் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றி ணைக்க ப்பட்டு பின்னர் ஊர்வ லமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தில் அனைத்து பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிலைகள் அமைக்க அதிரடி கட்டுப்பாடு
    • விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் போலீ சார் சிறப்பாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்துள்ள னர்.

    மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விநாய கர் சிலைகளை பொது மக்கள் வாங்கி செல்கின்ற னர். கோவில்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    பிரதிஷ்டை செய்யப்ப டும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை 2 வேளைக ளிலும் பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வரு கிறது. பிரதிஷ்டை செய்யப் படும் சிலைகளை 22, 23, 24-ந்தேதிகளில் ஊர்வல மாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வ லத்திற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டா டப்படு கிறது.

    சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சா லைத்துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறை யிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்ப டுவதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெறவேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனு மதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

    ஓலைப்பந்தல் அமைப்ப தைத் தவிர்க்க வேண்டும். சிலை நிறுவப்பட்ட இடத் தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலைவர்களின் தட்டிகள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் யாராவது 2 தன்னார்வ நல பாது காப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீசாருடன் ஆலோ சனை மேற்கொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் போலீசார் சிறப்பாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

    • கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார்
    • பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சிவசேனா, பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தரப்பில், சிலை கரைக்கப்படும் இடங்களில் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சொத்தவிளை பகுதியில் மின்விளக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலங்கள் சொல்லும் பகுதிகளில் மரக்கிளைகள் அதிகளவு உள்ளது. அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். கீரிப்பாறை பகுதியில் புதிதாக விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆட்டோக்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசிய போது கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது. சிலைகள் கரைப்பதற்கு 10 இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று காவல் துறையின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய காவல் ஆய்வாளரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும். ஊர்வலம், சிலையை கரைக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதை காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும். சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும், விதிமீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதிஷ்டை செய்ய கட்டுப்பாடு
    • ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். குமரி மாவட்டத்தில் விநாய கர் சதுர்த்தி விழா விமர்சை யாக கொண்டா டப்படுவது வழக்கம்.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப டும். விநாயகர் சதுர்த்தி யையொட்டி தற்பொழுது இரணியல் கண்ணாட்டு விளை, சுங்கான்கடை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. ஒரு அடி முதல் 7 அடி வரை உயரத்திற்கு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    அன்ன விநாயகர், கற்பக விநாயகர், வலம்புரி விநாயகர், தாமரை விநாயகர் என பல வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வருகிற 18-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படு கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைக ளில் கரைக்க 3 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 23-ந்தேதி தேதியும், இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 24-ந்தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படு கிறது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலங்கள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே பிர திஷ்டை செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை அலங்கரிக்க கூடாது.

    நீர்நிலைகள் மாசுபடு வதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்ப டுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கு அந்தந்த பகுதி போலீசாரிடம் உரிய அனுமதிபெற வேண்டும். புதிதாக இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிறர் மனதை புண்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் 11 இடங்களில் கரைப்பதற்கு போலீசார் அனுமதித்துள்ள னர்.

    சிலைகள் கரைக்க உள்ள இடங்களில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்வதற்கு பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 500 மரக்கூழ் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக சுற்றுச்சூழல் நண்பனான காகித மரக் கூழால் 500 விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வருகிற செப்டம்பர் 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. இதில் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பின்னர் செப்டம்பர் 19ந்தேதி ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், பரமக்குடி, உச்சிப்புளி ஆகிய இடங்களிலும், வருகிற 20ந்தேதி ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி ஆகிய இடங்களிலும் விநாய கர் சிலை ஊர்வலங்கள் நடக்க உள்ளது.

    இந்தாண்டு விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் நண்பன் என்ற முறையில் மரக்காகித கூழ் கொண்டு 4 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாட்டர் கலர் மூலம் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்னை தமிழை காக்க ஆன்மிகத்தை வளர்ப்போம்' என்ற கருப் பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்துக்களின் ஒற்றுமை மற்றும் எழுச்சி விழாவாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இருக்கும்.

    இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் விதமாக செய்யப்பட்டுள் ளது. இது மீன்களுக்கு உணவாகவும் பயன்படும். விநாயகர் சிலைகளில் சிம்ம வாகனம், மான் வாகனம், காளை வாகனம், மயில், அன்ன வாகனம் போன்ற வற்றில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    ×