search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
    X

    குமரி மாவட்டத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

    • சிலைகள் அமைக்க அதிரடி கட்டுப்பாடு
    • விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் போலீ சார் சிறப்பாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்துள்ள னர்.

    மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விநாய கர் சிலைகளை பொது மக்கள் வாங்கி செல்கின்ற னர். கோவில்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    பிரதிஷ்டை செய்யப்ப டும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை 2 வேளைக ளிலும் பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வரு கிறது. பிரதிஷ்டை செய்யப் படும் சிலைகளை 22, 23, 24-ந்தேதிகளில் ஊர்வல மாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வ லத்திற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டா டப்படு கிறது.

    சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சா லைத்துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறை யிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்ப டுவதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெறவேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனு மதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

    ஓலைப்பந்தல் அமைப்ப தைத் தவிர்க்க வேண்டும். சிலை நிறுவப்பட்ட இடத் தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலைவர்களின் தட்டிகள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் யாராவது 2 தன்னார்வ நல பாது காப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீசாருடன் ஆலோ சனை மேற்கொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் போலீசார் சிறப்பாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

    Next Story
    ×