search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள்"

    • பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
    • தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    சீர்காழி:

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    154-வது தொகுதியாக சீர்காழிக்கு நேற்றுவந்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது

    2024-ல் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு யாத்திரையில் பங்கேற்றுள்ளீர்கள். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நந்தனார் போன்ற மகான்கள் பிறந்த ஊரில் மகான்களின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த ஊர். சுதந்திர தாகம் தீட்டிய நீலகண்டபிரம்மச்சாரிக்கு ஒரு வேளை சாப்பிட உணவு இல்லை என பாரதியாரிடம் உணவுகேட்டார்.

    அப்போது முண்டாசு கவிஞர் பாரதியார் தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என நீலகண்டபிரம்மச்சாரிக்காக பாடலை பாடினார். பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.

    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகள், தமிழகத்தின் அரிதான 410, தேவார செப்பேடுகள் கிடைக்கப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் காலத்தின் பொக்கிஷம். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் ஆகியவற்றை ஸ்ரீ சட்டை நாதர் திருக்கோவிலுக்கு உள்ளேயே தான் வைக்க வேண்டும். தவிர மியூசியத்தில் இருக்க கூடாது.

    மயிலாடுதுறையை சுற்றிலும் நவகிரக கோவில்கள், சைவ வைணவ தளங்கள் ஆன்மீகவாதிகள் குடியிருக்க கூடிய எம்பி தொகுதியாக உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் ஆன்மீக தலங்களாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணத்தை மாற்றி காட்டுவோம். தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் வைடிப்பாக் கம் சாலை அருகே மோரை எவெரட்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் திடீரென்று சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை வைத்து வழிபட தொடங்கினர்.இது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர் நெல்லிக்குப்பம் போலீ சாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், வருவாய் துறை வருவாய் ஆய்வாளர் அன்வர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று இரவு விரைந்து சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிவ லிங்கம் மற்றும் நந்தியை அகற்ற வலியுறுத்தினர்.அப்போது அங்கிருந்த சுரேஷ் உட்பட 5 பேர், இந்த இடம் அரசுக்கு சொந்த மானது என்பதால் சாமி சிலைகள் வைக்கப்பட்டுள் ளது என போலீசாரிடம் தெரிவித்தனர். யாருடைய இடமாக இருந்தாலும், சாமி சிலைகளை வைத்து வழிபட உரிய அனுமதி பெற வேண்டும். எனவே, இங்கிருந்து சாமி சிலை களை உடனடியாக அகற்ற வேண்டும் என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்த னர்.

    அங்கிருந்தவர்கள் திடீ ரென்று சிவன், நந்தி சிலை களை கட்டிப்பிடித்து போலீ சாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சாமி சிலைகளை அதிரடியாக அகற்றினார்கள். மேலும், அகற்றப்பட்ட சாமி சிலை களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் திடீர் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
    • இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு ட்பட்ட சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபி ஷேகத்துக்கு யாகசாலை அமைக்க கோவிலின் நந்தவனத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

    அப்போது 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், தேவாரப்பதிக செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    பின்னர், இவை அனைத்தும் கோவியிலில் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளன.

    இந்நிலையில், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் மேற்பார்வையில், பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர் புனிதவதி, பிரசன்னா ஆகியோர் வழிகாட்டுதலின்படி ஐந்தாம் வகுப்பு மாணவ-மாணவிகள் 140 பேர், சமூக அறிவியல் பாடத்தில் பழைமையான சிலைகள் மற்றும் அகழ்வா ராய்ச்சி குறித்த பாடத்திற்காக இக்கோவி லுக்கு வந்து, மேற்கண்ட ஐம்பொன் சுவாமி சிலைகளையும், தேவாரப்பதிக செப்பேடு களையும் பார்வையிட்டனர்.

    இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து சமூக அறிவியல் ஆசிரியை சொர்ணா விளக்கிக் கூறினார்.

    சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்த சிலைகளை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    • ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
    • விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 10 சிலைகள் போலீஸ் பாதுகாப்போடு விதிமுறைகளுடன் ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து சிலைகளை படகு மூலம் கொண்டு கரைப்ப தற்காக திட்டமிட்டனர்.

    ஆனால் படகு ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனதால் சிலைகளை உடனே கரைக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களிடம் வலியுறுத்தினார்.

    கையில் எடுத்து சென்றால் சிலைகளை முறையாக கடலில் கரைக்க முடியாது. எனவே படகு வந்ததும் அதில் கொண்டு சென்று கரைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால், இந்து முன்னணி அமைப்பு பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய சிலைகளை பெண்களே கையில் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.

    பின்னர் படகு வந்ததும் அதில் கொண்டு சென்று நடுக்கடலில் விநாயகரை விஜர்சனம் செய்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் தீயணைப்பு துறையினர் கடலோர காவல் குழும போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட திருக்கோ வில் நிர்வாக அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் சுசீந்திரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், ஜோதீஷ்குமார், சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவனந்த புரம் பத்மநாபசாமி கோவி லில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக வருகிற 12-ந்தேதி புறப்பட்டு செல்கிறது. மீண்டும் சாமி சிலைகள் திருவனந்த புரத்தில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு குமரி மாவட்டத் திற்கு வருகிறது. சாமி சிலை கள் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதையும் திருவனந்த புரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு திரும்பி வருவதையும் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் திருக்கோவில் நிர்வாகம் மேற்கொள்வது, மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கும் பட்டு மற்றும் துண்டுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய இணை ஆணையரிடம் அனுமதி கேட்பது, குமரி மாவட்ட திருக்கோவில்களில் நடை பெறும் திருவிழாக்களுக்கு கோவில் மேலாளர் மற்றும் ஸ்ரீ காரியங்களுக்கு முன் பணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

    • நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்
    • மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிவசேனா, இந்து மகா சபா, இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேலைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிவ சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று காலையில் டெம்போக்களில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வந்தனர். நாகராஜா திடலில் இருந்து இன்று மதியம் விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக் கப்படுகிறது. இதையடுத்து நாகர்கோவிலில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் ஊர்வலத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித் துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். பட்டாசுகள் வெடிக்க கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் ஊர்வலத்தையடுத்து முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். நாளை (23-ந்தேதி) இந்து மகாசபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ள விநாயகர் சிலைகளும், நாளை மறுநாள் (24-ந்தேதி) இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

    • அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை அதிராம்பட்டினம் வண்டிப் பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து விநாயகர் ஊர்வலம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வழியாக ஏரிப்புறக்கரை கடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

    ஏரிப்புறக்கரையில் சிலைகளை கரைக்க கடற்கரையில் படகு தயார் நிலையில் நிறுத்தி வைக்கபட்டது.

    500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    • நகரில் மொத்தம் 41 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சீர்காழி நகர் மற்றும் புளிச்சக்காடு, நந்தியநல்லூரர், பட்டவி ளாகம், திட்டை, கோயில்பத்து, வினாயக ர்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆபத்து காத்தவிநாயகர், கணநாதர், சித்திவிநாயகர்,விஸ்வரூப விநாயகர்.

    மாணிக்க விநாயகர், செங்கழுநீர் விநாயகர், ராஷ்ட்ர விநாயகர், சித்திவிநாயகர், வீரசக்திவிநாயகர், செல்வவிநாயகர் என 41 இடங்களில் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3தினங்கள் வழிபாடு நடைபெற்றது.இதனிடையே திங்கள்கிழமை 5விநா யகர்சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில் செவ்வாய் இரவு மீதமுள்ள 36விநா யகர்சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பேன்டு வாத்தியம், வாணவே டிக்கையுடன் ஊர்வலமாக பழைய பேருந்துநிலையத்தில் ஒன்றிணைந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக உப்பனாற்றுக்கு சென்றது.

    உப்பனாற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சர ண்ராஜ்,விநாயகர் சதுர்த்தி விழாக்குழு ஒருங்கிணை ப்பாளர் வி.கே.செந்தில்கு மார், மற்றும் பலர் பங்கே ற்றனர். சீர்காழி டி.எஸ்.பி.லா மெக் மேற்பார்வையில் , காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ௨௦௦-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டி ருந்தனர். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவில் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு பூதலூர் பெரியார் புரத்தில் இருந்து அதிரடி இசை முழங்க ஊர்வலம் தொடங்கியது.ஊர்வலம் வடக்கு பூதலூர் வந்த போது மழை பெய்தது மழையில் நனைந்து கொண்டே விநாயகர் ஊர்வலம் சென்று வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

    • அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம்.
    • சிலைகளை செய்வதற்கு ரசாயன வண்ணங்கள் பயன்படுத்த தவிர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும் தோப்பு துறை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியும் இணைந்து மாசில்லாத இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    வேதாரண்யம் நகராட்சியில் இருந்து பேருந்து நிலையம் கடைவீதி வழியாக உப்பு சத்தியாகிரகம் நினைவு மண்டபம் வரை நடைபெற்ற பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியை நகராட்சி தலைவர் புகழேந்தி தெரடங்கி வைத்தார்.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொழுது களிமண், மஞ்சள் ,அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம், ரசாயன வண்ணங்களை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக், தர்மாகோல், ரங்கோலி ஸ்டிக்கர், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்,

    இயற்கையில் கிடைக்கும் மரப்பட்டைகள் இயற்கை வண்ணங்கள் பூக்கள் வண்ணக்கற்கள் தென்னை தோரணங்கள் மாவிலை இவற்றை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம், அலங்காரம் செய்த குப்பைகளை நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு ,பிளாஸ்டிக் மறுசுழற்சி, மறு பயன்பாடு இவற்றின், மூலம் பிளாஸ்டிக் நீர் நிலைகளை சென்றடையாமல் தவிர்க்கலாம், மாசில்லாமல் விநாயகர் வழிபட்டு சுற்றுச்சூழலை காப்போம் என்று மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்து பேரணியில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செயஙயபட உள்ளது.
    • செவ்வாய்க்கிழமையன்று மாலை கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் புதிய பஸ் நிலையம், திருவள்ளுவர் நகர், கல்லாங்காடுவலசு, குமாரவலசு, லைப்ரரி, உப்பு பாளையம், புதுக்காடு, சிவநாதபுரம், ஏபி புதூர், சீரங்க ராய கவுண்டன் வலசு, ஓலப்பாளையம் அருகே உள்ள அனுமந்தபுரம், முத்தூர், எல் கே சி நகர் தண்ணீர் டேங், நடேசன் நகர், பழனிசாமி நகர், மணியக்காரன் பேட்டை, ஆகிய 16இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    பிறகு செவ்வாய்க்கிழமையன்று மாலை வீரகுமாரசாமி திருக்கோவில் வளாகத்திலிருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடுமுடி ஆற்றில் கொண்டு சென்று கரைக்க போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • சிலைகள் 1 முதல் 9 அடி வரை வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
    • இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    பல்லடம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18 ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக பல்லடம் அருகே உள்ள அலகுமலை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இங்கு திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 ஆயிரம் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    கந்த சஷ்டி கவசத்தை போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர்,கொரோனாவை வென்ற விநாயகர், சிவலிங்கத்தை தூக்கி வரும் பாகுபலி விநாயகர், ஆறு கரங்கள் ஐந்து தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், சித்தி புத்தி என இருவருடன் எழுந்தருளும் விநாயகர், உள்ளிட்ட புதிய வடிவ விநாயகர் சிலைகள் உள்ளன . 1 முதல் 9 அடி வரை வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது :-

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. திருப்பூர்,கோவை, ஊட்டி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. விநாயகர் சிலைகள் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற ரசாயனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இதனால் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரையாது. சுற்றுப்புற சூழல் மாசு அடையும் என்கின்ற நோக்கில் அரசு ரசாயன கலவை மூலம் சிலைகள் தயாரிக்க தடை விதித்தது. தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் காகித கூழ் மாவு,குச்சி கிழங்கு மாவு உள்ளிட்ட இயற்கை பொருட்களால் சிலைகளை தயாரித்துள்ளோம். சிலைகளை விசர்ஜனம் செய்யும்போது மிக எளிதில் தண்ணீரில் கரைந்து விடும்.

    இந்த ஆண்டு 3 அடி முதல் 9 அடி வரையிலான சித்தி விநாயகர், பால விநாயகர், சிம்மவிநாயகர் கந்த சஷ்டி கவசம் போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர் உள்பட பல்வேறு புதிய தோற்றங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வாட்டர் கலர் என்னும் இயற்கை வர்ணம் கொண்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. விநாயகர் சிலை குளம், குட்டைகளில் கரைத்தவுடன் அங்கு வாழும் மீன்களுக்கு அவை உணவாகப் போகும் வகையில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    சிலை தயாரிப்பில் எந்த இடத்திலும் ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு அன்னை தமிழைக் காக்க ஆன்மீகம் வளர்ப்போம் என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த உள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில் 5,000 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலை பிரதிஷ்டை செய்து யாகவேள்வி வழிபாடு நடத்தி ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்து சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

    கடந்த ஆண்டு கோவை கோட்டத்தில் ஐந்தாயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு சிலை பிரதிஷ்டை செய்து பொதுக்கூட்டம் ஊர்வலம் நடத்தி அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருப்பூர் மாநகரில் 4 நாட்களும் பல்லடத்தில் 3 நாட்களும் பொங்கலூர் பகுதியில் 2 நாட்களும் என விநாயகர்சதுர்த்தி விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உடன் இந்து முன்னணி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் இருந்தார்.

    • அண்ணா, பெரியார் பிறந்தநநாளையொட்டி அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தன்மானமுள்ள தமிழர்களுக்கு திருவிழாவாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதா வது-

    பகுத்தறிவு என்கின்ற சுயமரியாதை விதையை நமக்கு ஊட்டி தட்டி எழுப்பிய அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி, அதைப் போன்று ஐயா பெரியாரின் தலைமைச் சீடர் காஞ்சி தந்த கருவூலம், தென்நாட்டு பெர்னாட்சா, தமிழ்நாட்டு இங்கர்சால், மறுமலர்ச்சி தமிழினத்தின் தூதுவன், காஞ்சித் தலை வன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நாளை (15-ந் தேதி) இரண்டும் உண்மை யான திராவிட இயக்க தொண்டர்களுக்கு, தன்மானமுள்ள தமிழர்க ளுக்கு திருவிழாவாகும்.

    அந்த அடிப்படையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஐயா அவர்க ளின் பிறந்தநாளையும், அண்ணா அவர்களின் பிறந்த நாளையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள், அனைத்து அணி களின் நிர்வாகிகள், கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை உள்ள பொறுப் பாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி யும், அதைப்போன்று பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித் தும் இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாட வேண்டுகி றேன்.

    சிலைகள் இல்லாத்த இடத்தில் ஐயா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டா டிட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் தலைமைக் கழகத் தின் சார்பில் கேட்டுக்கொள் கின்றேன்.

    தலைமைக் கழகம் சார்பில் மதுரையில் அன்னை இல்லம் பல்லவன் நகர் 3-வது தெருவில் எனது தலைமையில் காலை 9 மணிக்கு நாளை (15-ந் தேதி) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளும், வருகிற 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும் கொண்டா டப்படும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×