search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
    X

    விற்பனைக்கு தயாரக உள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.

    விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்

    • 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது
    • விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    பல்லடம்

    விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 18 ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம்புதூரில் கடந்த 12 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயாரிப்பு குழுவினர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 400 சிலைகள் தயாரித்தோம். இந்த ஆண்டுக்கான சிலைகள் தயாரிப்பு பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.இங்கு இது வரை 150சிலைகள் மட்டுமே வடிவமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.3 அடி முதல் 16 அடி வரையிலான சிலைகள் ரூ.3500 முதல் ரூ.34 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் கிழங்கு மாவு, பேப்பர் தூள் மூலம் தயாரித்து வாட்டர் பெயிண்டிங் அடித்துள்ளோம். விசர்ஜனம் செய்யும் போது அரை மணி நேரத்தில் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும்.

    மேலும் மூலப் பொருட்கள் விலை உயர்வு,தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் விநாயகர் சிலைகள் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×