பழமையான 3 கற்சிலைகள் கண்டெடுப்பு

3 சிலைகளையும் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட கற்சிலைகள்.
மீட்கப்பட்ட கற்சிலைகள்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடி தொழிலுக்கு சென்று வரும் நிலையில் கடற்கரையோர பகுதியில் கற்சிலை ஒன்று தென்பட்டதை கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனை எடுத்து மூன்று சிலைகளையும் மீட்ட மீனவர்கள் இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை யினர் விரைந்து சென்று சிலைகளை கைப்பற்றிய நிலையில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர்.

இதனை எடுத்து கடற்கரையோரம் மீட்கப்பட்ட இரண்டடி உயரம் உள்ள பெருமாள் கற்சிலை ஒரு அடி உயரமுள்ள பெருமாள் சிலை அதேபோல் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை ஆகிய மூன்று சிலைகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் பாதுகா ப்பாக ஒப்படைத்தனர்.

தீவு கிராம கடற்கரையோர பகுதியில் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலைகள் எப்படி தீவு கிராம பகுதிக்கு வந்தது என்பது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com