search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி குமரியில் 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
    X

    விநாயகர் சதுர்த்தியையொட்டி குமரியில் 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

    • வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்
    • விநாயகர் சதுர்த்தி விழா தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க ப்படும். குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்பட பல்வேறு இந்த அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களிலும், வீடுக ளிலும், கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைக்கப்படும்.

    அகஸ்தீஸ்வரம், ராஜா க்கமங்கலம், தோவாளை, மேல்புறம் உள்பட மாவட்ட த்திலுள்ள 9 ஒன்றியங்க ளிலும் 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஒரு அடி முதல் 12 அடி வரை உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பூஜை க்காக வைக்கப்படுகிறது. அன்ன விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர், சிம்ம விநாயகர், ராஜ விநாயகர், கருட விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பூஜை க்கு வைக்கப்படும். தற்போது விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்து மகா சபா சார்பில் தெற்கு சூரங்குடியில் விநா யகர் சிலைகள் தயாரிக்க ப்பட்டு வருகிறது. இதே போல் வில்லுக்குறி பகுதியி லும் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் நிறைவடைந்து வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    விநாயகர் சிலை பிரதி ஷ்டை செய்வதற்கு போலீ சார் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை அறி வித்துள்ளனர். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிதாக வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்து அமைப்பினர் வேறு சில இடங்களிலும் புதிதாக விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்ய அனுமதி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து ள்ளனர்.

    இதுதொடர்பாக போலீ சார், அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே கரைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும். புதிதாக வேறு இடங்களில் கரைக்கக்கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள க்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொட ர்பாக பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டு விநாயகர் விழாவை உற்சாகமாக வழக்கத்தை விட விமர்சையாக கொண்டாடுவதற்கும் தயாராகி வருகிறார்கள். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா தற்போது களை கட்ட தொடங்கியுள்ளது.

    Next Story
    ×