search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி"

    • நல்யாற்று நடுவில் திருமால் எழுந்தருளுவதாக பரிபாடல் கூறுகிறது.
    • மருதநிலத்திலும் சங்க காலத்திலிருந்தே திருமால் கோவில் உண்டென்று தெரிகிறது.

    நல்யாற்று நடுவில் திருமால் எழுந்தருளுவதாக பரிபாடல் கூறுகிறது.

    காவிரி-கொள்ளிடத்தின் நடுவே பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இப்பாடலுக்கு விளக்கமாக அமைகிறார்.

    மாயோன் மேயகாடுறை உலகமும் என தொல்காப்பியம் மாயோனின் உறைவிடமாக கானகத்தைக் குறிப்பிடுகிறது.

    காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலக் கடவுளாக திருமாள் வழிபடப் பெறுகிறான்.

    திருமால் காடு, மலை, ஆற்றிடைக்குறை ஆகிய இடங்களில் உறைவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    மருதநிலத்திலும் சங்க காலத்திலிருந்தே திருமால் கோவில் உண்டென்று தெரிகிறது.

    • 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார்

    திருச்சி ஒயமரி சுடுகாடு தில்லைநாயகம் படித்துறை அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்வது இறந்துபோன ஆண் நபர் யார் என்பது குறித்து இவர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாஹாளய அமாவாசை
    • திருச்சி காவிரி படித்துறைகளில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்


    திருச்சி.


    புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மகாளய அமாவாசை தினமான புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளும், தான தர்மங்களும் நம் முன்னோர்களை மோட்சத்தை அடைய செய்யும் என்பது நம்பிக்கை. அதனாலேயே மகாளய அமாவாசையை சர்வபித்ரு மோட்ச அமாவாசை என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் புரட்டாசி மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.


    மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து, அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.


    தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை தானமாக வழங்கினர்.


    இதேபோல் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கருட மண்டபம், கீதாபுரம் படித்துறை, திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், முக்கொம்பு உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


    தொடர்ந்து தர்ப்பணம் கொடுத்தவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.


    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை தந்ததால், அம்மா மண்டபம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்து திருவனைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் செல்கின்றன.





    • காவிரி நீர் பெற்று குறுவை பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது.அந்த வகையில் இன்று தே.மு.தி.க. சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கருகிய குறுவை பயிர்களை கண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த விவசாயி ராஜ்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போராட்டம் தொடங்கி நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் சூரியமூர்த்தி, தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளர் கரம்பை சிவா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் போது உடனடியாக காவிரி நீர் பெற்று குறுவைப் பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

    • அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள்
    • காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று கோட்டூர்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பற்றலாம் என கருதுகிறோம்.

    தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள்.

    அவர்களுக்குரிய தண்ணீரை கேட்பதாக அங்குள்ள விவசாயிகள் தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு. ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்த பிரச்சினை இல்லை. கண்ணை மூடி திறந்து விடுவார்கள்.

    தற்போதைய நிலையில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், தமிழகத்திற்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அருமையாக தெரிவித்து இருக்கிறது.

    மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை. எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். பேச்சுவார்த்தை என்பது இனிமேல் இல்லை. பேச்சுவார்தைக்கு போனால் நமது கோரிக்கைகளை மழுங்கடித்து விடுவார்கள். இனிமேல் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை.

    • வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
    • கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் எனவும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் டெல்டா விவசாயிகளை பாதுகாக்க கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற்று கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு போஸ்ட் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மோகனதாஸ்,

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

    • திருச்சி சிந்தாமணி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய காவிரி கரையில் இறந்து கிடந்த முதலை குட்டியால் பரபரப்பு
    • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    திருச்சி  

    திருச்சி,மேல சிந்தாமணி, மகாத்மா காந்தி படித்துறையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குளித்து வருகின்றனர்.

    கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வந்தது.

    இதற்கிடையே இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்றின் கரையோரம் சுமார் ஒன்றரை நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று கிழிந்த ஒரு வலையில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது.

    அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளதாக

    அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆற்றின் மையத்தில் உள்ள நாணல் புதரில் மறைந்த வசிக்கும் முதலைகள் குட்டிகளை ஈன்றிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுவரை அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் முதலைகள் நடமாட்டம் இருக்கும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே உடனடியாக முதலைகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    விவசாய பாசனத்துக்காக முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு காவிரி நீர் கொண்டு வரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

    விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. போதியளவு ஆற்றுப்பாசனம் வசதி கிடையாது. மழைக்காலங்களில் தான் அந்த ஆற்றுப்பாசனமும் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறும் கிடையாது. ஆனாலும் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நெல், நிலக்கடலை, கரும்பு முதலியவை விளைவிக்கப்படும் முக்கியமான பயிர்கள் ஆகும்.

    தமிழ்நாட்டில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், பருத்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது.

    கோடை காலத்தில் இருந்த வெயிலின் தாக்கத்தை விட தற்போது கடந்த சில நாட்களாகவே அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே வானம் பார்த்த பூமியான வறட்சி மாவட்டமான பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் அதாள பள்ளத்துக்கு சென்று விட்டன. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய கிணறுகளில் தண்ணீர் அடியில் சென்று விட்டது. குறிப்பாக மலையடிவாரங்களில் உள்ள விவசாய கிணற்றுகளில் தண்ணீர் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சில விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி சென்றால் விவசாயிகள் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற வாய்ப்புள்ளது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி ஆற்றுப்பாசனம் கொண்டு வந்தால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையும் இருக்காது. நிலத்தடி நீர்மட்டமும் உயரும். திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து காவரி நீரை கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன்:-

    திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வரப்படும் காவிரி நீரை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நிரப்பி ஏற்கனவே உள்ள பாசன வாய்க்கால்கள் மூலம் காவிரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை விரைந்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

    தமிழ்நாடு கிணற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாரயணசாமி:- திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் மார்க்கமாக கீராம்பூர் ஏரி அல்லது பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் வழியாக காவிரி நீரை கால்வாய் மூலம் களரம்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்பட்டால் லாடபுரம் 2 ஏரிகளும், அதனை தொடர்ந்து குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் பெரிய ஏரி, வெள்ளந்தாங்கியம்மன் ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, சிறிய ஏரி வரை காவிரி நீரை கொண்டு செல்ல வாய்க்கால் வசதி இருக்கிறது. பின்னர் காவிரி நீர் மருதையாற்றில் கலந்து விடும். சாத்திய கூறுகள் இருந்தால் களரம்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். அல்லது லாடபுரம் ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் காவிரி நீரை கொண்டு செல்லலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஒரு தனியார் டயர் தொழிற்சாலை மட்டுமே உள்ளது. அதிலும் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்ட மக்களுக்கு எப்போதும் விவசாயம் தான் கைகொடுக்கும். பெரும்பாலும் கிணற்று பாசனம் உள்ள பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி நீரை கொண்டு வந்தால் விவசாயம் இன்னும் வளர்ச்சி அடையும். வீணாக கடலுக்கு போகிற போது தான் காவிரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு திருப்பி விட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டால் ஏற்கனவே காவிரி நீர் பாசனம் பெறும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    ஆலத்தூர் தாலுகா, நாட்டாமங்கலத்தை சேர்ந்த விவசாயி பாபநாசன்:- காவிரி ஆற்றின் நீரை கால்வாய் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். நிலத்தடி நீர் மட்டமும் உயரும், குடிநீர் பிரச்சினையும் ஏற்படாது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.200 முதல் ரூ.300 கோடி வரை செலவாகலாம். இதை மாநில அரசு அல்லது மத்திய அரசு செயல்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே மேட்டூர் அணையின் உபரி நீரான காவிரி நீரை இணைப்பு கால்வாய் துறையூர், தா.பேட்டை வரை உள்ள ஏரிகளில் தேக்கி விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தும் விதமாக சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆறுகளை இணைத்து கீராம்பூர் ஏரி வரை நீர் வழங்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தையும் இணைத்தால் எளிதாக காவிரி நீரை கொண்டு வந்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லை என்று கூறி, சில நீர் நிலைகளில் தான் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பெரிய நிதி தேவைப்படும். இந்த திட்டம் கொண்டு வர சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்று முதலில் தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களை கொண்டு குழு அமைத்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். சாத்திய கூறுகள் இருந்தால் நிதி ஒதுக்கி விரைந்து திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசியல்வாதி ஒருவர் பேசியது அவரது சொந்த கருத்து. அவர்களுடைய மாநிலத்தில் விவசாயிகளின் ஆதரவை பெறுவதற்காக காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இரு மாநில அரசுகளும் பேசி பயனில்லாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இடையிடையே அவ்வப்போது அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து டெல்டா பகுதிகளில் பயிர்கள் பாதிக்காத வண்ணம் தண்ணீர் கிடைப்பதற்கு வழி வகை செய்வார். நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூரை இணைக்ககோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெ–ரும் கண்டன ஆர்பாட் டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அம்சமாக காவிரி தண்ணீரை திறக்க வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி–களை இணைத்திட வேண்டும்.

    சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்கக் கூடாது, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், விவ–சாயிகளின் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட் டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டகஙகுழு உறுப்பி–னர் ஜாகிர் உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன் மற்றும் நிர்வா–கிகள் துரை பாஸ்கரன், ராமதாஸ், பைசூர் ரஹ்மான், சிவக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக்கழக நிர்வாகி–கள் கலந்துெகாண்டனர்.

    கொளுத்தும் வெயிலை–யும் பொருட்படுத்தாமல் மாவட்ட அளவில் நடை–பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற–னர்.

    • மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் ரூ.3 ஆயிரம், பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ.75 வழங்கிட வேண்டும்.கறிக்கோழிகள் வளர்ப்பிற்கு கிலோ ரூ.12 விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட வேண்டும். இந்திய அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைக்க வேண்டும்.தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளதை போல வருடம் தோறும் ரூ.10 ஆயிரம் உழவு மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். தென்னை, பனைகளில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

    • மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
    • நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எழுதி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

    இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.

    தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கடந்த 5.7.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சனையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டிருந்தார்.

    3.7.2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் கூறினோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4.7.2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஜல் சக்தி துறை அமைச்சர் , கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்து வதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    ×