search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி
    X

    தருமபுரி அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி

    தருமபுரி அருகே ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    தருமபுரி மாவட்டம் கெத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) டிரைவர். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் குளிப்பதற்கு இவரது நண்பர் துரைசாமி என்பவரும் வந்துள்ளனர். பண்ணந்தூர் செல்லும் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகே ஆற்றில் இருவரும் குளித்து விட்டு கரைமீது வந்துள்ளனர். தண்ணீர் தாகம் அதிகமாக உள்ளது என்று சிவக்குமாரை அங்கேயை இருக்க சொல்லவிட்டு துரைசாமி மட்டும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பார்த்து போது சிவக்குமார் அந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் இரவு முழுவதும் சிவக்குமாரை தேடி இல்லாததால் இது குறித்து பாரூர் போலிஸில் புகார் கொடுத்தார்கள்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தென் ஆற்றில் முழுவதும் தேடியதில் இன்று காலை ஆற்றின் ஓரத்தில் சிவக்குமார் தண்ணீரில் பிணமாக மிதப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் போலிசார் அனுப்பி வைத்தார்.
    Next Story
    ×