search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்"

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அசோலாவில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் கோழி மற்றும் கால்ந

    டைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்தினை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கலந்து கொண்ட தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்ட தீணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் ராஜன் தேஜேஸ்வர் - தருஷி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செயல்’ படத்தின் முன்னோட்டம். #Seyal
    சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘செயல்’.

    இதில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் தருஷி நடிக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக்சந்திரா அறிமுகமாகிறார்.

    ஒளிப்பதிவு - வி.இளைய ராஜா, இசை - சித்தார்த் விபின், எடிட்டிங் - ஆர்.நிர்மல், ஸ்டண்ட் - கனல் கண்ணன், நடனம் - பாபா பாஸ்கர், ஜானி, கலை - ஜான் பிரிட்டோ, தயாரிப்பு - சி ஆர்.ராஜன்.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...



    “ வட சென்னையில் தங்க சாலை மார்கெட்டை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கும் ரவுடியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர்பாராத விதமாக அடித்து விடுகிறான். எனவே, ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி அடிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் தனது கை ஓங்கும் என்று ரவுடி நினைக்கிறான்.

    இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா? மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

    படம் மே 18-ஆம் தேதி (நாளை) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. #Seyal

    ×