என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "munishkanth"

    பிரணவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

    சென்னையில் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் முனிஷ்காந்த். மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்களுக்கு வெவ்வேறு கனவுகளும் இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முனிஷ்காந்த் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். ஆனால், முனிஷ்காந்திற்கு சொந்த ஊரில் நிலம் வாங்கி செட்டிலாக வேண்டும் என்பது கனவு.

    ஆனால், விஜயலட்சுமிக்கு சென்னையிலேயே சொந்தமாக வீடு வாங்கி இங்கேயே செட்டில் ஆக வேண்டும் என்பது கனவு. இதற்கிடையே, ஊரில் பெரிய ஆளாக இருந்த முனிஷ்காந்தின் தந்தையின் சொத்து மூலம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை கிடைக்கிறது. அதற்குள், நமக்கு வரப்போகிறது என்று இருவரும் தாம் தூம் என்று கடன் வாங்கி செலவு செய்கிறார்கள்.

    இந்தநிலையில், காசோலை தொலைந்துவிடுகிறது. இறுதியில் காசோலை கிடைத்ததா? தங்களது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற கனவில் மிதந்த இவர்களின் மிடில் கிளாஸ் வாழ்க்கை மாறியதா என்பது படத்தின் மீதிக்கதை...

    நடிகர்கள்

    மிடில் கிளாஸ் நாயகனாக வரும் முனிஷ்காந்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஒரு குடும்பத் தலைவனாக, மிடில் கிளாஸ் அப்பாவாக தனது நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்ப தலைவி கதாப்பாத்திரத்தில் விஜயலட்சுமி அசத்தி இருக்கிறார். இவர்களை தாண்டி கோடாங்கி வடிவேல், குரேஷி, காளி வெங்கட், ராதா ரவி, வேல ராமமூர்த்தி ஆகியோரும் கதாப்பாத்திற்கு ஏற்ப சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இயக்கம்

    ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக எடுத்துள்ளார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து, மாத சம்பளத்தை மட்டுமே வைத்து ஒரு குடும்பத்தை நடத்தும் ஒரு சராசரி தம்பதி படும்பாடை அழகான காட்சிகள் மூலம் எடுத்துரைத்துள்ளார். படத்தில் சில ஏற்றம் இறக்கங்கள் இருந்தாலும் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் படம் நகர்கிறது.

    இசை

    பிரணவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

    • படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    • மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி "மிடில் கிளாஸ்" என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    நடுத்தர குடும்பங்களின் இன்னல்களை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

    • ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களை தயாரித்தனர்.
    • முனீஸ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி   "மிடில் கிளாஸ்" என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது. 

    இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    நடுத்தர குடும்பங்களின் இன்னல்களை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி, தனது புதிய படமான “மிடில் கிளாஸ்”-இன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி, தனது புதிய படமான "மிடில் கிளாஸ்"-இன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார்.படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    படம் 2022-ல் படப்பிடிப்பைத் தொடங்கியது. ஆரம்பத்தில், இந்தப் படம் KJR Studios மற்றும் கௌஸ்துப் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    தொழில்நுட்பக் குழு:

    ஒளிப்பதிவு: சுதர்ஷன் ஸ்ரீநிவாசன்

    எடிட்டிங்: சான் லோகேஷ்

    இசை: பிரணவ் முனிராஜ்

    திரைப்படம் இந்தாண்டு வெளியாக இருக்கிறது. முனீஷ்காந்த் இந்த ஆண்டு பெருசு, கேங்கர்ஸ், படைத் தலைவன், ஜென்ம நட்சத்திரம், சரண்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமி அகத்தியன், கடைசியாக 2023-ல் இறைவன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் முனீஸ்காந்த் ‘காடப்புறா கலைக்குழு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஜூலை 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காடப்புறா கலைக்குழு'. சக்தி சினி புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது, இந்த படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குனர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.  இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி.  நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள் என்று பேசினார்.


    இதைத்தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, எனக்கு இது மிக முக்கியமான படம்,  இயக்குனர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்ஷனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முனீஷ்காந்த் ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவர்களுக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார் என்று பேசினார்.

    மேலும் இயக்குனர் ராஜா குருசாமி பேசியதாவது, முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி.  படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள். முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும். நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி என்று பேசினார்.

    • முனிஷ் காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’.
    • இப்படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார்.

    இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கும் படம் 'மிடில் கிளாஸ்'. முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன், குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கவுள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா மற்றும் கதிர்மொழி பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.


    படக்குழு

     மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 27- ஆம் தேதி தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பாலய்யா இயக்கும் டார்க் காமெடி திரில்லர் படத்தில் யோகி பாபுவும், முனிஷ்காந்தும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள். #YogiBabu #Munishkanth #DarkComedy
    ஹங்கிரி உல்ப் என்டர்டெயின்மென்ட் மற்றும் புரொடக்‌ஷன் எல்எல்பி நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.

    இப்படத்தை இயக்குவது குறித்து பாலய்யா கூறும்போது, ‘இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். விஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்கிறார். 

    இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, சிஎஸ்கே மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், இந்த பெயரிடப்படாத படம் 'டார்க் காமெடி திரில்லர்' வகையைச் சேர்ந்தது.  யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 



    இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷமந்த் (இசை), ஏ.விஸ்வநாத் (ஒளிப்பதிவு), எம்.முரளி (கலை இயக்குநர்) மற்றும் தினேஷ் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
    ஜெயம் ரவி நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் `அடங்க மறு' படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய ஜெயம்ரவி, இந்த படத்தில் நடிக்கும் போது, எனது மனைவி எனக்கு அடங்கி இருந்ததாக கூறினார். #AdangaMaru #JayamRavi
    ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான படம் அடங்க மறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் ஜெயம் ரவி பேசும்போது,

    ‘இந்த படத்தை என் மாமியார் சுஜாதா தயாரித்து இருந்தார். என் மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி இருந்தது என்பது இந்த படத்தில் நான் நடித்த சமயத்தில் மட்டும்தான்.

    ஆர்த்தி ஏதாவது சண்டை போட்டால் படப்பிடிப்புக்கு செல்லமாட்டேன் என்று பிளாக்மெயில் செய்ய தொடங்கினேன். என்னுடன் சண்டை போடுவதற்காகவே படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்த முடியுமா? என்று அம்மாவிடம் ஆர்த்தி கேட்பார்.



    அந்த அளவுக்கு அவரை அதட்டி வைத்து இருந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் அவர் அடங்கியே இருந்தார்’ என்று கூறினார். இதை கேட்டு மேடையில் இருந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும், மாமியார் சுஜாதாவும் சிரித்தனர். #AdangaMaru #JayamRavi #AdangaMaruSuccessMeet

    ஜெயம் ரவி பேசிய வீடியோவை பார்க்க:

    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அடங்க மறு' படத்தின் விமர்சனம். #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
    சென்னையில் மைம் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ரடராக பணிக்கு சேர்கிறார் ஜெயம் ரவி. அதே காவல்நிலையத்தில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்ரடராக இருக்கிறார் அழகம் பெருமாள். 

    ஜெயம் ரவி தனது அப்பா பொண்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சினி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணனின் மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக்கார பெண்ணான ராஷி கண்ணாவும், இவரும் காதலிக்கிறார்கள்.



    நேர்மையான போலீஸான ஜெயம் ரவி தனது வேலையை சரியாக செய்ய வேண்டும், யாருக்கும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இந்த நிலையில், ஜெயம் ரவி விசாரிக்கும் வழக்குகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சம்பந்தம் இருப்பதை ஜெயம் ரவி கண்டுபிடிக்க, அந்த வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு ஜெயம் ரவிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறார்கள்.

    இந்த நிலையில், மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி அந்த பெண் தற்கொலை செய்யவில்லை, இளைஞர்கள் சிலர் இணைந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டதை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.



    ஜெயிலில் தனது மகனை அடித்ததற்காக ஜெயம் ரவியை பழிவாங்க, அவரது குடும்பத்தினரை கொன்று விடுகிறார்கள். மேலும் இந்த வழக்கை விபத்து என்றும் மாற்றிவிடுகின்றனர்.

    இதனால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதற்கு காரணமானவர்களை அவர்களது தந்தையின் மூலமே பழிவாங்குவதாக சபதம் செய்கிறார்.

    கடைசியில், ஜெயம் ரவி தனது சபதத்தை நிறைவேற்றினாரா? ராஷி கண்ணாவுடன் இணைந்தாரா? அடங்க மறுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தனி ஒருவனாக படத்தை தனது தோள்மேல் தூக்கி செல்கிறார். காதல், பாசம், சண்டை என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஷி கண்ணாவுக்கு இந்த படம் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறார். திரையில், அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார்.

    பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சினி, சுப்பு பஞ்சு, மீரா வாசுதேவன் என அனைவரும் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். குறிப்பாக சுப்பு பஞ்சுவின் இரு குழந்தைகளும் கவரும்படியாக நடித்துள்ளார்கள். மைம் கோபி, சம்பத் ராஜ், முனிஸ்காந்த், அழகம்பெருமாள் போலீஸாக கலக்கியிருக்கிறார்கள்.



    என்னதான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் அதனை மீற முடியாது என்பதை மையப்படுத்தி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் தங்கவேல். நேர்மையான போலீஸ் ஒருவரை என்ன தான் அடக்க நினைத்தாலும், ஒருநாள் அவரது உணர்ச்சி வெடித்து, அடங்க மறுப்பதையும், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றத்தையும் படமாக உருவாக்கி இருக்கிறார். வசனங்கள் சிறப்பாக உள்ளது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அடங்க மறு' அத்து மீறு. #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்க மறு' படத்தின் முன்னோட்டம். #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
    ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள படம் `அடங்க மறு'.

    ஜெயம் ரவி நாயகனாகவும், ராஷி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், கலை - லால்குடி என் இளையராஜா, சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சிவா, வசனம் - விஜி, நடனம் - தினேஷ், ஆடை வடிவமைப்பு - ஜே.கவிதா, இணை தயாரிப்பாளர் - ஆனந்த் ஜாய், தயாரிப்பு நிறுவனம் - ஹோம் மூவி மேக்கர்ஸ், தயாரிப்பு - சுஜாதா விஜயகுமார், இயக்கம் - கார்த்திக் தங்கவேல்.



    படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பேசியதாவது,

    நான் 10 வருடத்திற்கு முன்பே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளிபோட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கதையை சுஜாதா விஜயகுமார் அவர்களிடம் சொன்னேன், அவருக்கு பிடித்து போனது. ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க, பிடிச்சா பண்ணலாம் என்றார். கடந்த 3 வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். 

    எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர். நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியை விட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. விஜி சார் வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

    விஜய்யின் ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில் ராஜன் தேஜேஸ்வர் - தருஷி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய ‘செயல்’ படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது. #Seyal
    ரவி அப்புலு இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் `செயல்'. ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் தாருஷி நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் காமெடி கலந்த அதிரடி படமாக உருவாகி இருக்கிறது. 



    வடசென்னை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபல ரவுடியை அடிக்கும் நாயகன், நாயகனை பழிவாங்க துடிக்கும் ரவுடி என அடிதடி, காமெடியுடன், காதலையும் சேர்த்து வழங்கியிருக்கும் இந்த படம் வெளியாகி 3 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    அந்த போஸ்டரில் `நல்ல படம்... ஆனா, பாக்கதான் ஆளில்ல..' என்று படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். #Seyal

    ரவி அப்புலு இயக்கத்தில் ராஜன் தேஜஸ்வர் - தாருஷி நடிப்பில் வெளியாகி இருக்கும் `செயல்' படத்தின் விமர்சனம். #SeyalReview #RajanTejaswar
    அப்பாவை இழந்த நாயகன் ராஜன் தேஜஸ்வர், அம்மா ரேணுகா சவுகானுடன் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். இந்திய விண்வெளி மையமான நாசாவில் வேலைபார்க்க வேண்டும் என்ற கனவுடன் வலம் வருகிறார் நாயகன் ராஜன். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ராஜனின் அம்மா, கட்டணம் செலுத்தவில்லை என்று பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்காக போராடுகிறார். 

    பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த நிலையில் பள்ளிப் படிப்பை முடிக்கும் ராஜன், தனது அம்மாவை சிறையில் இருந்து ஜாமீனில் எடுப்பதற்காக படித்துக் கொண்டே வேலைக்கும் செல்கிறார். மேலும் தனது கனவை நோக்கி ஓட முடியாமல், இன்ஜினியரிங் படித்துவிட்டு கேரளாவில் கார் கம்பெனி ஒன்றிலும் வேலைக்கு சேர்கிறார். 



    இதற்கிடையே சென்னையில், ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரது பகுதியில் பிரபல ரவுடியை ராஜன் அடித்து துவம்சம் செய்கிறார். அந்த சண்டைக்கு பிறகு அவந்த ரவுடியின் மவுசு குறைகிறது. அந்த பகுதியில் இருக்கும் அனைவரும் அந்த ரவுடியை மதிக்கவில்லை, மேலும் கிண்டலும் செய்கின்றனர். இதையடுத்து தன்னை அடித்த ராஜனை, அதே மார்க்கெட்டில் வைத்து திருப்பி அடிக்க வேண்டும் என்று அந்த ரவுடி முடிவு செய்கிறார்.

    இந்த நிலையில், அந்த ரவுடியின் மனைவியும் அவரை விட்டு பிரிகிறார். கேரளா சென்ற நாயகனை சென்னைக்கு கூட்டிவர முன்னாள் ரவுடிகளான ஆடுகளம் ராமதாஸ் கேரளா செல்கிறார். கேரளாவில் தனது பள்ளித்தோழியான நாயகி தாருஷியிடம் தனது காதலியை சொல்ல முயற்சி செய்கிறார். ராஜனின் காதலுக்கு ராமதாசும் உதவுகிறார். 



    இதற்கிடையே தான் அடித்துவிட்டு வந்த ரவுடியின் மகனின் படிப்பு செலவையும் ராஜனே ஏற்றுக்கொள்கிறார். அவனது கனவையும் நிறைவேற்றி வைப்பதாக உறுதி கூறுகிறார். 

    கடைசியில் ராஜனை அந்த ரவுடி திருப்பி அடித்தாரா? அந்த ரவுடியின் மகனை படிக்க வைத்து, அவனது கனவை நாயகன் நிறைவேற்றி வைத்தாரா? நாயகியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    முதல் படம் என்றாலும் காதல், ஆக்‌ஷன், பாசம் என நாயகன் ராஜன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் தாருஷி வரும் காட்சிகளும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ராஜனின் அம்மாவாக ரேணுகா சவுகான் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயபாலன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராமதாஸ் காமெடியில் கலக்கியிருக்கிறார். 



    தனது கனவை நிறைவேற்ற முடியாத நாயகன், வேறொரு மாணவனின் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதும், தன்னை அடித்துவிட்டு வெளியூருக்கு செல்லும் நாயகனை பழிவாங்க நினைக்கும் நாயகன் என வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் காமெடி, ஆக்‌ஷன் என ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் ரவி அப்புலு. கொடூரமான வில்லனை அடித்து டம்மி பீசாக்குவது, மீண்டும் அவன் தனது கெத்துக்கு வர போராடுவது போன்ற காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். 

    சித்தார்த்த விபினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. வி.எளையராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `செயல்' சிறப்பு. #Seyal #SeyalReview #RajanTejaswar #Tharushi

    ×