என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training"

    ரெயில்வே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.   இந்த  தொடக்கவிழாவில் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ெரயில்வே அதிகா–ரிகள் உடன் இருந்தனர். 

      டிக்கெட் பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குப–வர்கள், ெரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் அலுவலகத்தில் பணி–புரியும் அலுவலர்கள், கூட்ஷெட்டில் பணிபுரியும் ெரயில்வே தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

     இந்தப் பயிற்சியில்  ெரயில் பயணிகளுக்கு  சேவைகளை எப்படி சிறப்பாக செய்வது, ெரயில் பயணிகளின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்வதைப் பற்றி, பயணிகளின் தேவைகளை நன்றாக அறிந்து அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், கனிவான முறையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது  குறித்து பயிற்சி  அளிக்கப்படுகிறது.
    பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு மண் மாதிரி சேகரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கட்ட முறையில் மண் மாதிரி சேகரித்தல் பற்றிய பயிற்சி நடந்தது. பயிற்சியினை நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர்( தரக்கட்டுப்பாடு)செல்வி தொடங்கி வைத்தார். 

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தராஜன் ஆகியோர் மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள், கிராம வரைபடங்களில் கட்ட முறை அளவீடு செய்தல் ஆய்வு செய்தல் பற்றி எடுத்துக் கூறினர். 

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி அலுவலர்கள் நாகராஜ், பூபதி, ரகுபதி, கவுசல்யா மற்றும் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலதுறை சார்பில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில்  திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

    மேலும் வேளாண்மை சார்ந்த இடங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை மூலம் அழைத்து செல்ல உள்ளனர். விருப்பம் உள்ள விவசாயிகள்   உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இதில் இருக்கூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர் ஊராட்சிப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    எனவே கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.
    கடையம்:
     
    கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி சமுதாய நலக் கூடத்தில்  வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி யோகா பயிற்சி கடந்த 60 நாட்காக நடைபெற்று வருகின்றது . 

    சிறப்பு பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் மற்றும் மண்டல தலைவர் அண்ணாமலையார், பேராசிரியர் பழனி, விஜி ஆகியோர் கலந்து கொண்டனர் . 

    யோகா பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பயிற்சி இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
    செங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி நடைபெற்றது.
    செங்கோட்டை:

    கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்தும் விதமாக செங்கோட்டை நகராட்சியில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கு காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் ஏற்பாட்டில் எளிய முறையில் பயிற்சியாளர்களை கொண்டு ஒவ்வொரு வார இறுதி நாளான சனிக்கிழமையில் இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்பு வாணியர் சமுதாய மண்டபத்தில் நடைபெறுகிறது. 

    இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி வகுப்பினை நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் தொடங்கி வைத்தார். இவர்களுக்கு பயிற்சியாளர் ராஜா பயிற்சி அளித்தார். இதில் செங்கோட்டை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராஜீவ் காந்தி உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் 4-ந் தேதி தொடங்குகிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்  கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி வகுப்பு சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெறுகிறது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) என மொத்தம் 17 நாட்கள் (100மணி நேரம்) பயிற்சி வகுப்பு நடைபெறும். 

    பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பயிற்சியினை முடித்தவர்கள் அரசு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளாராக பணியில் உள்ளனர். 

    பயிற்சியில் சேர குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. ஆண், பெண் இருபாலரும் எந்த பகுதியில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகவும். மேலும் தொடர்ப்புக்கு 04575 - 243995, 79048 70745 மற்றும் 9786750554 ஆகிய தொலைபேசி எண்களிலும்   தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் கற்பிக்கும் 1866 ஆசிரியர்களுக்கு நேரடிப்பயிற்சி வழங்க உள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகள்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 23 ம் கல்வி ஆண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2022 - 23 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு நாட்காட்டியின்படி எண்ணும் எழுத்தும் திட்ட மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் சங்கர் மற்றும் பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆகியோர் தலைமை ஏற்றுத் தொடங்கி வைத்தனர்.

    பயிற்சி நிறுவன முதல்வர் தனது தலைமை உரையில், எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம், குறிக்கோள்கள், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்தல், வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல், கற்றல் மூலைகளின் பயன்பாடு, மதிப்பீட்டுப் பணியின் முக்கியத்துவம், வட்டார அளவில் நடைபெறும் பயிற்சி திட்டம் குறித்து விளக்கி கூறினார்.

    மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் கௌரி, மகேஸ்வரி, தெய்வானை, காளிதாஸ், நாகராஜன், சிந்துஜா, காசி, உமாதேவி, கார்த்திகேயன், தமிழ்செல்வி, ஸ்ரீதர், குமார், பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாவட்ட அளவில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சியினை வழங்கினர்.

    இப்பயிற்சியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கம், கையேடுகள் அறிமுகம், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், கதைக்களம், படைப்பாற்றல் களம், கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உருவாக்குதல், செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல், உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளுதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டன. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் கற்பிக்கும் 1866 ஆசிரியர்களுக்கு நேரடிப்பயிற்சி வழங்க உள்ளனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் விமலா தேவி, பாபி இந்திரா, முனைவர் சரவணகுமார், விரிவுரையாளர்கள் ராஜா, பிரபாகர், சுகுணா, கௌசல்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கற்க, கசடற கல்வி அறக்கட்டளை மற்றும் வி டீம் சமூக சேவை அமைப்பு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

    இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் தாளாளர் எம்.எம்.கே. முஹைதீன் இபுராஹிம் தலைமை வகித்தார். கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஷேக் தாவூத், திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, திருப்புல்லாணி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சேதுபதி, இல்லம் தேடி கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகவேல் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமில் கலந்துகொண்ட 70-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆளுமைத்திறன், ஆங்கில பயிற்சி, கைவினைப் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளை அளித்ததால் குழந்தைகள் பெரிதும் பயன் அடைந்ததாக குழந்தை களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். 

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வி டீம் சமூக சேவை அமைப்பு நிர்வாகி எம்.எம்.கே.பாத்திமா நவ்ரா கற்க, கசடற கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஆய்சத் ஷிபான் செய்தனர்.
    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் மாநில அளவிலான கோடைகால கபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் 5-ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெற்றது.

    நிறைவு விழாவில் அமைச்சரும், தூத்துக் குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது:-

    கபடி விளையாட்டில் சாதனை படைத்தது சன் பேப்பர் மில். அர்ஜுனா விருது பெற்ற வீரர்கள் கன்னியாகுமரி ராஜரத்தினம், மணத்தி கணேசன் ஆகியோரை உலகிற்கு அடையாளப்படுத்தியது கபடி.

    விளையாட்டு அகடமி விரைவில் இப்பகுதியில் தொடங்கப்படும். மேலும் கல்லூரி பள்ளி மாணவ- மாணவிகள் தாங்கள் படிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகள் கிடைப்பதற்கு உரிய வழிமுறைகள் பெற்றுத் தரப்படும். அரியானாவில் எப்படி வீரர்கள் உருவாக்கப்படுகிறார்களோ அதே போன்று தமிழகத்திலும் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்.

    விளையாட்டு வீரர்கள் தங்களது முயற்சியை கை விட்டு விடக்கூடாது. விளையாட்டு போதைப் பொருட்களிலிருந்து அடிமையாவதை தடுக்கும். எனவே அனைவரும் சீரிய முறை யில் பயிற்சிகள் மேற்கொண்டு விளையாட் டில் மென் மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்விற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கி பேசியதாவது: -

    கபடி விளையாட்டு தேசிய அளவில் 1972-லும் உலக அளவில் 2004-லும் இந்திய அளவில் மகளிர் 2005-லும் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பதற்கு மூன்று முக்கிய கோட்பாடுகளை கையாள வேண்டும். ஒன்று ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ வேண்டும் தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை அதன் நுணுக்கங்களை கற்று ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும்.

    இரண்டாவது தாயையும் தகப்பனையும் கனம் பண்ண வேண்டும். கனம் பண்ணும் போது உங்களுக்கு சந்தோஷம், சமாதானம் கிடைக்கும். மூன்றாவது உண்மையுள்ள மனிதன் உயர்த்தப்படுவான் என்று வேத வசனத்தின்படி உண்மையுடன் நடக்க வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளை நீங்கள் கை கொண்டு நடந்தால் விளை யாட்டுத்துறையில் நீங்கள் உலகளவில் சாதிக்கலாம் என்று பேசினார்.

    விழாவில் முகாம் பொறுப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், முகாம் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார்,விளையாட் டுத்துறை பொறுப்பாளர் எட்வின், திமுக மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன்,

    தொழிலதிபர் ஜி ஆர் ரமேஷ் கிருஷ்ணன் டாக்டர் அன்பு ராஜன் நடுவர் குழு சேர்மன் கண்ணன் கன்வீனர் நடுவர்கள் மைக்கேல், அசோக்,அர்ஜுனன் பொன்னையா சாமுவேல், ஜானகிராமன், வேல்மணி, சிவா,மந்திரம், தமிழ்மணி, அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயேசுவிடுவிக்கிறார் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் அன்புராஜன் நன்றி கூறினார்.

    முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபடி கழகமும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும் புதுவாழ்வு சங்கமும் இணைந்து செய்திருந்தனர்.

    • மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • நடவு முறை , குழி எடுத்தல், உரமிடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் அமைந்துள்ளது. இங்கு குட்டை நெட்டை இடங்களில் பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் தென்னை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் குறித்தும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இங்கு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 19 விவசாயிகள் திருமூர்த்தி நகர் தென்னை வளர்ச்சி மையத்தில் பார்வையிட்டனர். அங்கு மேலாளர் ரகோத்தமன் தலைமையில் விவசாயிகளுக்கு நாற்றை தேர்ந்தெடுத்தல் ,நடவு முறை , குழி எடுத்தல், உரமிடுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தகவலை தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • பயிற்சி வகுப்பில், 3 வயது முதல் 7 வயது வரையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
    • பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பள்ளி மாணவா்களுக்கான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    திருப்பூரை அடுத்த குன்னங்கல்பாளையம் சாமத்தோட்டம் நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், 3 வயது முதல் 7 வயது வரையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இவா்களுக்கு ஆத்திசூடி, கொற்றைவேந்தன் பயிற்சி வகுப்புகளும், 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு திருக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை 99439-48156, திருக்கு ஆய்வாளா்கணேசனை 99948-92756 என்ற செல்போன் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு போலகம் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் லதா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் எரவா ஞ்சேரி ஊராட்சி துறையூ ரில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலத ண்டாயுதம் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    ×