search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிற்சியில் பங்கேற்றவர்கள்.
    X
    பயிற்சியில் பங்கேற்றவர்கள்.

    வேளாண்மை அலுவலர்களுக்கு மண் மாதிரி சேகரித்தல் பயிற்சி

    பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு மண் மாதிரி சேகரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கட்ட முறையில் மண் மாதிரி சேகரித்தல் பற்றிய பயிற்சி நடந்தது. பயிற்சியினை நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர்( தரக்கட்டுப்பாடு)செல்வி தொடங்கி வைத்தார். 

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தராஜன் ஆகியோர் மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள், கிராம வரைபடங்களில் கட்ட முறை அளவீடு செய்தல் ஆய்வு செய்தல் பற்றி எடுத்துக் கூறினர். 

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி அலுவலர்கள் நாகராஜ், பூபதி, ரகுபதி, கவுசல்யா மற்றும் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×