search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு பயிற்சி"

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலதுறை சார்பில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில்  திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

    மேலும் வேளாண்மை சார்ந்த இடங்களுக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை மூலம் அழைத்து செல்ல உள்ளனர். விருப்பம் உள்ள விவசாயிகள்   உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இதில் இருக்கூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர் ஊராட்சிப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    எனவே கபிலர்மலை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    ×