search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேத்துப்பட்டில் விவசாயிகளுக்கு பயிற்சி
    X

    சேத்துப்பட்டில் விவசாயிகளுக்கு பயிற்சி

    • பயிர் சாகுபடி நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில். வேளாண்மை தொழில்நுட்ப முகமை, மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம். மாநிலத்திற்குள் விவசாயிகளுக்கு பயிற்சி சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணசாமி, தலைமையில் புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்வி நிலையம் தேசிய பயிறு வகை ஆராய்ச்சி மைய வளாகத்தில் பயிற்சி நடந்தது.

    வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் யுவராஜா, வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விதைகள், விதைகளின் தன்மைகள், விதை தேர்வு செய்யும் முறைகள், விதை நேர்த்தி, பயிர் வகைகளில் பூச்சி நோய், மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, மற்றும் பயிர் வகையில் களை கட்டுப்பாடு, பயிர் வகை உற்பத்தி தொழில்நுட்பங்கள், மற்றும் மண்வள மேம்பாடு, ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியில் ஜமுனாமரத்தூர், போளூர், கலசப்பாக்கம், ஆரணி, சேத்துப்பட்டு, ஆகிய வட்டாரங்களை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமில் வேளாண்மை கல்வி மைய இணை பேராசிரியர் ஞானசேகரன், உதவி பேராசிரியர் ராம் ஜெகதீசன், பயிற்சி உதவியா ளர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர் மேனகா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி ஏற்பாடுகளை சேத்துப்பட்டு வட்டார தொழில் நுட்ப மேலாளர் சேகர், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆனந்த், வினோத், ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×