search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAINING FOR FARMERS"

    • மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம்
    • வேளாண்மை துறை சார்பில் நடந்தது

    ஜோலார்பேட்டை:

    திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஊராட்சிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை வட்டார உதவி இயக்குனர் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர் அனிதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் ராஜா வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகள் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லி கலப்பில்லதா இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி ஒரு தோட்டத்தில் நடைபெற்றது.
    • இந்த பயிற்சியில் விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி மாரம்பாடி ஆரோக்கியம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் புகையிலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மணிவேல் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

    பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராமசாமி. அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் உதயகுமார் செய்திருந்தார். இப்பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார். இதில், விதைச் சான்று அலுவலர் நாசர் அலி, உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் பங்கேற்று, அரசு துறை சார்ந்த மானிய திட்டங்கள், சந்தேகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    மேலும், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி மானியம், ஒரு பருகரணை நடுவதால் ஏற்படும் நன்மைகள், இயந்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், நீர் மற்றும் உர மேலாண்மை, சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    வட்டாரத் திட்ட மேலாளர் பிரபாகரன், உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.

    உதவித் திட்ட மேலாளர் தியாகராஜன் சிறுதானியத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். விதை சான்று அலுவலர் நாசர் அலி, விதைப்பண்ணை அமைத்தல், விதை தேர்வு, ரகங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.

    இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி நிபுணர்கள் பேசினார்கள்
    • பல்வேறு விவசாய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு மையம் மற்றும் விரிவாக்க கல்வி இயக்ககம், தைவானில் உள்ள உலக காய்கறி மையம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் நடைபெற்றது.

    செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள், களை மற்றும் பூச்சி மேலாண்மை, பயிர்களைத்தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கான இயற்கை வழி தீர்வுகள் என விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளைப்பற்றி அந்தந்த துறையைச்சேர்ந்த நிபுணர்கள் பேசினார்கள். குறிப்பாக, நூற்புழு வகைகள், அதன் தாக்குதல்கள், அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி சீனிவாசன் விளக்க மாக எடுத்துரைத்தார்.

    பயிர்களை தாக்கும் நோய்கள், நோய்க்கா ரணிகளான பூஞ்சைகள், வைரஸ்கள் குறித்து பல தகவல்களுடன் பயிர் நோயியல் துறை யைச்சேர்ந்த அங்கப்பன் விளக்கினார். உயிரி தொழில்நுட்பவியல் துறையைச்சேர்ந்த மணி கண்ட பூபதி, உதவி தோட்டக்கலைத் துறை இயக்குநர் நந்தினி, பயிற்சிப் பிரிவு மற்றும் வேளாண் விரிவாக்க கல்வி இயக்ககத்தை சேர்ந்த ஆனந்தராஜா, ஈஷா மண் காப்போம் இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் தங்கள் துறைசார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.

    மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    • பயிர் சாகுபடி நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில். வேளாண்மை தொழில்நுட்ப முகமை, மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம். மாநிலத்திற்குள் விவசாயிகளுக்கு பயிற்சி சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணசாமி, தலைமையில் புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்வி நிலையம் தேசிய பயிறு வகை ஆராய்ச்சி மைய வளாகத்தில் பயிற்சி நடந்தது.

    வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் யுவராஜா, வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விதைகள், விதைகளின் தன்மைகள், விதை தேர்வு செய்யும் முறைகள், விதை நேர்த்தி, பயிர் வகைகளில் பூச்சி நோய், மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, மற்றும் பயிர் வகையில் களை கட்டுப்பாடு, பயிர் வகை உற்பத்தி தொழில்நுட்பங்கள், மற்றும் மண்வள மேம்பாடு, ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியில் ஜமுனாமரத்தூர், போளூர், கலசப்பாக்கம், ஆரணி, சேத்துப்பட்டு, ஆகிய வட்டாரங்களை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமில் வேளாண்மை கல்வி மைய இணை பேராசிரியர் ஞானசேகரன், உதவி பேராசிரியர் ராம் ஜெகதீசன், பயிற்சி உதவியா ளர் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியர் மேனகா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி ஏற்பாடுகளை சேத்துப்பட்டு வட்டார தொழில் நுட்ப மேலாளர் சேகர், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆனந்த், வினோத், ஆகியோர் செய்து இருந்தனர்.

    • மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி சிலுவம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • உதவி வேளாண்மை அலுவலர் சதிஸ்குமார் வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், பயிர்க் காப்பீடு திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் உயிர் உரங்கள் மூலம் மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி சிலுவம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு பயிற்றுநர் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு) மாதேஸ்வரன் கலந்து கொண்டு, பசுந்தாள் எருவானது நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி தன்னுடன் வைத்து கொண்டு பயிருக்கு தேவைப்படும் போது எளிதில் கிடைக்க செய்வதன் மூலம் சத்துக்கள் விரயமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் தக்கை பூண்டு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பில்லிப்பயறு, காராமணி போன்ற பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகி அதிக மகசூல் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

    வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா உயிர் உரங்கள் மண்ணில் உயிரியல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இயற்கை வளத்தை தக்க வைக்கிறது. பயிர் வறட்சியை தாங்கி வளர உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. ரசாயன தழைச்சத்து, மணிச்சத்து உரங்கள் 25 சதவீதம் குறைவதால் சாகுபடி செலவு குறைகிறது என பயிற்சியளித்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் சதிஸ்குமார் வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், பயிர்க் காப்பீடு திட்டம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்கள் குறித்து விளக்கமளித்தனர். இதில் சிலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    • இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை மலை பயிர்கள் துறை அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு அளியூர் கிராமத்தில் சிக்மா இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் ஹீலாமோரி தலைமை தாங்கினார். நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை பயிற்சி நிலையத்தில் அறங்காவலர் குமார், தொழில்நுட்ப வல்லுநர் மகேஷ் மற்றும் ரமேஷ் சிறப்புரையாற்றினர். தோட்டக்கலை இயக்குனர் ஐஸ்வர்யா இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளித்தார். குமரகுரு இயற்கை வேளாண்மை குறித்தான இடர்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

    • விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி குறித்து விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் கம்பம் தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

    கம்பம்:

    கம்பம் வட்டார தோட்டக்கலை மலைப்பயி ர்கள்துறை மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி இணைந்து விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி குறித்து விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் கம்பம் தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் தொடங்கி வைத்து பேசி னார். விவசாய உள்கட்டமை ப்புக்கு தேவைப்படும் கடனுதவி மற்றும் மானிய விபரங்களும், குறிப்பாக ரூ.17.5 லட்சம் 35 சதவீத மானியத்தில் ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, விவசாயிகளுக்கு தேவை யான எந்திரங்கள் கொள்முதல், அறுவடை பின்செய் நேர்த்தி கட்ட மைப்புகளுக்கான கடனுதவி மற்றும் மானிய விபரங்கள் தொடர்பாக விளக்கங்களை தோட்டக்கலை துறை சார்பாகவும் வங்கி அலுவலர்கள் சார்பாகவும் விளக்கி கூறப்பட்டது.

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களும், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தக்காளி, மிளகாய், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, தென்னைக்கு ஊடுபயிராக கொக்கோ, அத்தி கன்றுகள் மானியத்தி லும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கொட்டைமுந்திரி மற்றும் முருங்கை கன்றுகள் மானியத்திலும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் காய்கறி விதை கள் மானியத்தில் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் பாண்டியராணா விளக்கி கூறினார்.

    இக்கூட்டத்தில் ஹெச்.டி.எப்.சி வங்கி மண்டல விவசாய முதன்மை அலுவலர் ஷியாம் சுந்தர ரெட்டி, வங்கி மேலாளர்கள் தினேஷ், பாலமுரளி மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் விவேகா னந்தன், சுதாகர் செய்தி ருந்தனர்.

    • வேளாண்மை எந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • 70-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    அரவேணு

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமம் கேசலடாவில் வேளாண்மை எந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சிக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார். கோவை மாவட்ட விதை சான்றளிப்பு துறை அலுவலர் கலந்து கொண்டு விதை சான்றளிப்பு முறைகள் குறித்து விளக்கினர். துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    முன்னாடி விவசாயி கிருஷ்ணன் நவீன வேளாண்மை எந்திரங்கள் மற்றும் பண்ணை கருவிகளின் முக்கியத்துவம் குறித்து பண்ணை எந்திரங்களின் செயல்பாடுகளில் செயல்முறை விளக்கம் அளித்தார். கிஷான் கிராப்ட் நிறுவனத்தின் நிர்வாகி பகவதி ராஜ் பண்ணை கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

    ஆட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கம் குறித்து விளக்கினார். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் துரை வரவேற்றார். செயலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். 70-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • விவசாயிகளுக்கு ‘மண்புழு உரம் தயாரித்தல் ’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டரங்கில் நடைப்பெற்றது.
    • மாசற்ற சுற்றுபுறசூழலுக்கு உகந்த பண்ணை கழிவுகளை மறுசு ழற்சி செய்யும் தொழில் நுட்ப முறைகளை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரம், நல்லூர் கிராம முற்போக்கு விவசாயிகளுக்கு 'மண்புழு உரம் தயாரித்தல் '' குறித்து தொழில்நுட்ப பயிற்சி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டரங்கில் நடைப்பெற்றது. பயிற்சிக்கு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில் மண்புழு உரம் என்பது மண்புழு உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. மண்புழு உரம் நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக கழிவுகளை மக்கச் செய்வதற்கான ஒரு சிறந்த பயனுள்ள செலவு குறைந்த மற்றும் மாசற்ற சுற்றுபுறசூழலுக்கு உகந்த பண்ணை கழிவுகளை மறுசு ழற்சி செய்யும் தொழில் நுட்ப முறைகளை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியில் பாலப்பட்டி, மோகனூர், பார்வதி இயற்கை பண்ணை, மு ற்போக்கு விவசாயி, அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற்ற வேலுச்சாமி, மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை, மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டியில் அளவு, மண்புழு உரத்தின் பயன்களான மண் அமைப்பு மேம்படும், நீர்ப்பிடிப்பு திறன் கூடுகிறது, மண்அரிமானம் காக்கிறது, பயிர்கள் எளிதில் சத்துக்களை கிரகிக்க உதவுகிறது,

    மண்புழு கழுநீர் மிக சிறந்த நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது இதனை இலைவழியாக வழங்கும் போது குறைந்த செலவில் அதிக மகசூல் போன்ற காரணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து பயிற்சி அளிக்கப்பட்டது.துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்து களை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி வட்டா ரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட

    அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி வரவே ற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி பழனியப்பன் பங்கேற்று விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வேளாண்மை அலுவலர் பழனிசாமி கோடை உழவு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவ

    லர் தங்கவேல் சோயா பீன்ஸ் பயிர் சார்ந்த திட்ட ங்கள் குறித்தும் பேசினர்.

    முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட களப்பணியாளர்கள் செல்வி, கண்ணன் மற்றும் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    அரவேணு :

    கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கான இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    கோத்தகிரி தோட்டகலைதுறை மூலம் நடைபெற்ற இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். நீலகிரி தோட்டகலை இயற்கை விவசாய சங்க செயலாளர் ராம்தாஸ் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

    ×