search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in the scheme"

    • கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்து களை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி வட்டா ரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கெடிகாவல் கிராமத்தில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கவனமாக கையாளும் தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்ட

    அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி வரவே ற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி பழனியப்பன் பங்கேற்று விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையுறை, முக கவசம், கண்ணாடி மற்றும் அதற்குரிய உடைகளை பயன்படுத்தி கவனமுடன் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வேளாண்மை அலுவலர் பழனிசாமி கோடை உழவு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவ

    லர் தங்கவேல் சோயா பீன்ஸ் பயிர் சார்ந்த திட்ட ங்கள் குறித்தும் பேசினர்.

    முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட களப்பணியாளர்கள் செல்வி, கண்ணன் மற்றும் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×