search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training of farmers on"

    • துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
    • தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    ஈரோடு:

    பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

    பவானி வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி வேளாண்மை திட்டங்கள் மற்றும் துவரை நடவுமுறை பயிரிட்டு அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார்.

    கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் சீனிவாசன் துவரை பயிரில் விதை நேர்த்தி முறைகள் மற்றும் நாற்றங்கால் அமைப்பது மற்றும் 30-35 நாட்களில் நுனிக்கிள்ளுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு துவரை பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    அம்மாபேட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் இழுப்பிலி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜமோகன் தலைமையேற்று விவசாயி களை வரவேற்று மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.

    பயிற்சியில் வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் பாரம்பரிய ரகங்கள் பற்றியும், அங்கக வேளா ண்மையின் முக்கியத்து வம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

    மேலும் அங்கக வேளா ண்மை சாகுபடியில் உயிர் உரங்கள் பயன்பாடு விரிடி, சூடோமோனஸ் போன்ற உயிர்காரணிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்று பெறுவதன் முக்கியத்துவம், அதை இணைய வழியில் பதிவு செய்தல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாட்டி னை ராஜேந்திரன் மற்றும் கயல்விழி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சென்னிமலை வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
    • இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஈரோடு:

    சென்னிமலை வட்டா ரத்தில் குப்பிச்சிப்பா ளையம் கிராமத்தில் பாரம்பரிய வே ளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் தலைமையிலும், குப்பிச்சி பா ளையம் ஊராட்சி மன்ற தலை வர் பொன்னுச்சாமி முன்னி லையிலும் நடைபெற்றது.

    இப்பயிற்சியில் விதைச்சா ன்று அலுவலர் கணேசமூர்த்தி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதோடு அதன் நன்மை கள் மற்றும் அங்ககச்சான்று பெறுவ தற்கான நடைமுறை கள் இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், உழவர் தொகுப்புகள் உருவா க்குதல் போன்றவற்றை தெளி வாக விளக்கிக் கூறினார்.

    சென்னிமலை வேளா ண்மை உதவி இயக்குநர் சாமு வேல் அங்கக வேளாண்மை முறையில் பயிர்சாகுபடி செ ய்வதால் என்னென்ன பய ன்கள் என்பது குறித்து பேசி னார். மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலு வலர் யுவராஜ் மண் பரிசோ தனை குறித்தும் மண் மாதிரி கள் எடுப்பது குறித்தும் விள க்க மாக எடுத்து கூறினார்.

    மேலும் இப்பயிற்சியில் பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை குறித்து அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் விள க்கமாக எடுத்துரைத்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசா யக்குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சி க்கான ஏற்பா டுகளை உதவி வேளாண்மை அலுவலர் வேலுமணி, கார்த்திகேயன் மற்றும் தொகுப்பு ஒருங்கி ணைப்பா ளர் ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×