search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training to farmers on beekeeping"

    • இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது.
    • தேன் வளர்ப்பு பெட்டிகள் தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    சின்னனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் மத்திய அரசின் கதர்கிராம தொழில்கள் ஆணையத்தின் சார்பில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை மண்டல கோட்ட இயக்குனர் அசோகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தேனீக்கள் வளர்ப்பு மற்றும் அவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எவ்வாறு தயாரிப்பது, உற்பத்தி பொருட்களை சந்தைப்ப டுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச ங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    மேலும் தொழில் முனைவோர்களை உருவாக்கிடும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் நிகழ்ச்சியில் துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரை த்தனர்.

    பின்னர் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மானியமாக தேனீ வளர்ப்பு பெட்டிகளை பெற்று வெற்றிகரமாக தொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.

    முன்னதாக இளைய தலைமுறையினருக்கு தேனீ க்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேனீக்களின் முக்கிய த்துவம்" என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க ப்பட்டன.

    பின்னர் கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட இயக்குனர் அசோகன் கூறுகையில்,

    தேன் புரட்சி திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட தேன் வளர்ப்பு பெட்டிகள் இலவசமாக வழங்கியுள்ள தாகவும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கு மட்டும் 1000 பெட்டிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    ×