search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் மூட்டை"

    • ஆற்றின்கரையோர பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
    • கரையில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதற்கு சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பாபநாசம்:

    கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியே ற்றப்படும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி அரசலாற்றின் கரையோரம் உள்ளகிராம ங்களுக்கு வருவாய், பொது ப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றின்கரை யோர பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் நீரோட்டத்தில் வலுவிளக்கும் ஆற்றின் கரைபகுதிகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன. மேலும், கரையில் உடைப்பு ஏற்பட்டா ல் சரி செய்வதற்கு சவுக்கு கட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை அப்பகுதியினர் கண்டு ரசித்து வருகின்றனர். காவிரி ஆற்றின் கரைகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×