search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revanth Reddy"

    • தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
    • புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    அமராவதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னரைச் சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், அக்பருதின் ஒவைசி எம்.எல்.ஏவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நியமித்தார். இதையடுத்து, அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    • தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
    • பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரேவந்த் ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்துள்ளார்.
    • சீதக்கா 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று (டிசம்பர் 07) பதவியேற்றுக் கொண்ட நிலையில், இவருடன் 11 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    காங்கிரஸ் தலைமையிலான 11 பேர் அடங்கிய அமைச்சரவையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் சீதக்கா. நக்சலைட் அமைப்பில் இருந்து, அரசியலில் எண்ட்ரி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்று இருக்கும் சீதக்கா அம்மாநில அரசியல் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்து வருகிறார்.

     


    ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முலுகு மாவட்டத்தை அடுத்த ஜகன்னபேட்டாவில் ஆதிவாசி குட்டி கோயா குடும்பத்தில் சாரையா மற்றும் சாரக்கா தம்பதிக்கு பிறந்தவர் தான் சீதக்கா. தனது குடும்பத்தில் இளம் குழந்தையாக பிறந்த தன்சாரி அனுசுயா என்கிற சீதக்கா தனது 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    1980-களில் மாவோயிஸ்ட் அண்ணன்களின் கருத்தியலை விரும்பிய சீதக்கா அவர்கள் நில உரிமையாளர்களை எதிர்கொண்டு சண்டையிட்ட விதத்தால் அமைப்பில் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பத்தாரை போன்றே சீதக்காவும் தனது வாழ்க்கையை சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தியாகம் செய்ய முன்வந்தார்.


     

    பெற்றோரால் அனுசுயா என்று பெயர்சூட்டப்பட்ட இவருக்கு நக்சல் படையை சேர்ந்த தலைவர்களே சீதா என்ற புதிய பெயர் சூட்டினர். இந்த பெயர் தான் காலப்போக்கில் சீதக்கா என்று மாறியது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து பயணித்த சீதக்கா கமாண்டோவாக பணியாற்றி வந்தார். ஒருகட்டத்தில் மாவோயிஸ்டுகளின் அரசியல் கருத்துக்களில் முரண்பாடு ஏற்பட, அந்த அமைப்பில் இருந்து வெளியேறி 1997-ம் ஆண்டு சரண் அடைந்தார்.

    பிறகு, அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியின் போது பொது வாழ்க்கையை தொடங்கிய சீதக்கா, வழக்கறிஞர் அவதாரம் எடுத்து பழங்குடியிர் மற்றும் முலுகு பகுதியின் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடினார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் முலுகு தொகுதியில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்ட சீதக்கா, சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.



    பிறகு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய சீதக்கா தனது சமுதாயம் பற்றிய ஆய்வு செய்து பட்டம் பெற்றார். அந்த வகையில் முலுகு தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினரான சீதக்கா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஆர்.எஸ். கட்சியின் பேட் நாகஜோதியை 33 ஆயிரத்து 700 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

    தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட அதிக வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற சீதக்கா, தெலுங்கானா மாநிலத்தின் பழங்குடியின நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பின் போது இவரது பெயர் அழைக்கப்பட்டதும், அங்கிருந்த கட்சி தொண்டர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் ஆரவாரம் சில நொடிகள் வரை நீடித்தது. இதன் காரணமாக உறுதிமொழி ஏற்க சீதக்கா சில நொடிகள் மேடையிலே காத்திருந்தார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • ரேவந்த் ரெட்டியை தொடர்ந்து, 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தெலுங்கானாவின் புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
    • இன்று மதியம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    ஐந்து மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ரேவந்த் ரெட்டிதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவரை காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் களம் இறக்கியது. கமாரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார். மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    ரேவந்த் ரெட்டியை முதலமைச்சராக தேர்வு செய்ய கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கட்சி மேலிடம் அவரை முதலமைச்சராக தேர்வு செய்தது. இன்று மதியம் அவர் தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகை சந்திப்பின்போது, உங்களுடைய டி.என்.ஏ.-வை காங்கிரஸ் டி.என்.ஏ-வாக பார்க்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரேவந்த் ரெட்டி என்னுடைய டி.என்.ஏ.-வை தெலுங்கானா டி.என்.ஏ.-வாக பார்க்கிறேன் என்றார்.

    மேலும், சந்திரசேகர ராவ் குறித்து பேசும்போது "சந்திரசேகர ராவின் டி.என்.ஏ. பீகாரைச் சேர்ந்தது, அவரின் சாதி குர்மி. குர்மிஸ் பீகாரில் இருந்து வந்தவர்கள். பீகாரில் இருந்து விஜயநகரம் குடிபெயர்ந்து பின்னர் அங்கிருந்து தெலுங்கானா வந்தனர். என்னுடைய டி.என்.ஏ. தெலுங்காவில் இருந்து வந்தது. என்னுடைய டி.என்.ஏ. தெலுங்கானா. அது பீகார் டி.என்.ஏ.-வை விட சிறந்தது" என்றார்.

    அவர் எம்.பி.யாக இருக்கும்போது இதுகுறித்து பெரியதாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கானா களத்தில் சந்திரசேகர ராவை தோற்கடித்து, முதலமைச்சர் பதவிக்கு அவர் பெயர் அடிபட்ட நிலையில் தூசி தட்டி எடுக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "டி.என்.ஏ. குறித்து ரேவந்த் ரெட்டி கூறிய கருத்து பொறுப்பற்றது. வெட்கக்கேடானது. தெலுங்கானா டி.என்.ஏ.-வை விட பீகார் டி.என்.ஏ. பலவீனமானதா?.

    நாட்டை பிளவுப்படுத்தும் வகையிலான இநத் கருத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காப்பது ஏன்?. ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    • கவர்னரை சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
    • ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று முன்தினம் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

    இதற்கான அதிகார அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கவர்னரை சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். 

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
    • காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல் மந்திரியாக வரும் 7-ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இதற்கிடையே, டெல்லியில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல் மந்திரியாக வரும் 7-ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று தலைநகர் டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைச் சந்தித்தார்.


    மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    • ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சரை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார் என்றும் வரும் 7ம் தேதி ஐதராபாத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அகிய இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பார்வையாளர்களின் அறிக்கையை பரிசீலித்து, மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்ந்தெடுத்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்துள்ளார்" என்றார்.

    கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தீபா தாஸ்முன்ஷி, அஜோய் குமார், கே.ஜே. ஜார்ஜ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்ட 4 பார்வையாளர்களை கட்சி நியமித்துள்ளது.

    எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள், துணை முதல்வர்கள் இருப்பார்களா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    • மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    நேற்று ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல் அமைச்சரை அறிவிப்பார்.

    இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. மேலும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் ஒரு முதல் முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
    • ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 39 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதற்கிடையே, தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.



     


    இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக டி.ஜி.பி. அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
    • ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

    அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், ரேவந்த் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    தெலுங்கானா மாநில எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    நகரி:

    கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கானா மாநில எம்.எல்.சி. (மேலவை) தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டுப் போட நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன் சன்னிடம் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரூ. 5 கோடி பேரம் பேசி ரூ.50 லட்சம் முன் பணம் கொடுத்த வீடியோ வெளியானது.

    மேலும் ஸ்டீபன் சென்னிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேனில் பேசியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ரேவந்த்ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவந்த்ரெட்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்தார்.

    இந்த நிலையில் ரேவந்த் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதேபோல் அவரது தொகுதியில் உள்ள வீட்டிலும், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

    ×