search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana Chief Minister"

    • ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சரை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார் என்றும் வரும் 7ம் தேதி ஐதராபாத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அகிய இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பார்வையாளர்களின் அறிக்கையை பரிசீலித்து, மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்ந்தெடுத்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்துள்ளார்" என்றார்.

    கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தீபா தாஸ்முன்ஷி, அஜோய் குமார், கே.ஜே. ஜார்ஜ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்ட 4 பார்வையாளர்களை கட்சி நியமித்துள்ளது.

    எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள், துணை முதல்வர்கள் இருப்பார்களா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    • மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    நேற்று ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல் அமைச்சரை அறிவிப்பார்.

    இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. மேலும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் ஒரு முதல் முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கமி‌ஷன் பேர்வழியாக செயல்படுகிறார் என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். #Kushboo #ChandrashekarRao

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்பட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஐதராபாத் சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரசேகரராவ் தன்னை நவாப் (ராஜா ) என்று நினைத்து செயல்படுகிறார். பல 100 கோடி மதிப்பில் வீட்டை கட்டி உள்ளார். அங்கு ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. அவரும், அவரது கட்சியும் கமி‌ஷன் மட்டுமே வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

     


    நாட்டிலேயே தலைமை செயலகத்துக்கு செல்லாமல் பண்ணை வீட்டிலேயே இருக்கும் ஒரே முதல்வர் சந்திரசேகரராவ்தான்.

    கடந்த தேர்தலில் சந்திர சேகரராவ் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அவற்றை எல்லாம் குப்பை தொட்டியில் போட்டு விட்டார். அவரது அரசாங்கம் நியாயமற்ற நெறிமுறைகளை கடைபிடித்தது.

    நக்சலைட்டு விவகாரத்தில் சரியாக கையாளவில்லை. போலி என்கவுண்டர் நடத்தியதற்கு சந்திர சேகரராவ் அரசாங்கமே பொறுப்பு. தெலுங்கானாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 பெண்களுக்கு போட்டியிட சீட் கொடுத்துள்ளது. ஆனால் சந்திரசேகராவ் கட்சி 3 பெண்களுக்கு மட்டுமே சீட்டு கொடுத்துள்ளது. அவரது அரசு பெண்களுக்கு எதிராக உள்ளது.

    பெண்கள் வளர்ச்சி என்ற பெயரில் அவரது மகள் கவிதா வளர்ச்சி அடையவே திட்டங்களை கொண்டு வருகிறார். பாதுகாமா சரீஸ் என்ற பெயரில் ரூ.220 கோடி கொள்ளையடித்து உள்ளனர். ஒரு பெண் அமைச்சரை கூட நியமிக்காததற்கு சந்திர சேகரராவ் அரசு வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #ChandrashekarRao

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ரூ.22 கோடி சொத்து உள்ளதாக தனது வேட்புமனு தாக்கலில் தெரிவித்து உள்ளார். #ChandrasekharRao
    நகரி:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது.

    இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.

    முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரசேகரராவ் தனது சொத்து கணக்குகளை தெரிவித்து உள்ளார்.

    அவருக்கு ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.31.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    விவசாய தொழிலில் ரூ.3.2 கோடியை முதலீடு செய்து உள்ளதாகவும், பண்ணை வீடுகள் மதிப்பு ரூ.6.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.1.3 கோடி இருப்பதாக கூறி உள்ளார்.

    மேலும் அவர் தனியார் கம்பெனிகளிலும் முதலீடு செய்துள்ளார்.

    சந்திரசேகரராவ் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சின்னம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சந்திரசேகரராவுக்கு சொந்தமாக கார் இல்லை என்பது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.

    அவரிடம் கார் இல்லாமல் இருந்தாலும் அவரது பாதுகாப்புக்காக அரசு சார்பில் சொகுசு கார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    சந்திரசேகரராவ் ரூ.2.4 லட்சத்துக்கு நகைகள் வைத்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் நகை இருக்கிறது. அவரது மகன் கே.டி.ராமராவ் ரூ.84 லட்சமும், மருமகள் ‌ஷலிமா ரூ.24 லட்சமும் ரொக்கம் வைத்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரசேகர ராவ் ரூ.15 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது 4 வருடத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் 2014-ம் ஆண்டு 37 ஏக்கர் நிலம் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தற்போது 54 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். #ChandrasekharRao
    ×