search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மாநில தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் அக்பருதின் ஒவைசி
    X

    தெலுங்கானா மாநில தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் அக்பருதின் ஒவைசி

    • தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
    • புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    அமராவதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னரைச் சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், அக்பருதின் ஒவைசி எம்.எல்.ஏவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நியமித்தார். இதையடுத்து, அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    Next Story
    ×